Ads Right Header

பொதுத்தமிழ் வினா-விடை (ஒன்பதாம் வகுப்பு)



>>தொண்டு செய்து பழுத்த பழம் என்று பெரியாரைப் போற்றுபவர்?
விடை : - பாரதிதாசன்

>>முண்டி மோதும் துணிவே இன்பம் உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி " என்று பாடியவர்?
விடை : - ந . பிச்சமூர்த்தி

>>ரவி என்பதன் பொருள்?
 விடை : - கதிரவன்

🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅

>>கமுகு என்பதன் பொருள்?
விடை : - பாக்கு

>>பிறவி இருள் , ஒளியமுது , வாழ்க்கைப்போர் ஆகியவற்றின் இலக்கணக்குறிப்பு?
விடை : - உருவகங்கள்

>>இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து , அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான தத்துவ உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள் " என்று கூறியவர்?
விடை : - வல்லிக்கண்ணன்

🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅

>>ந . பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை?
விடை : - பலி

>>1932ல் " கலைமகள் " பரிசு பெற்றவர் ?
விடை : - ந . பிச்சமூர்த்தி


>> " பிக்ஷ " , " ரேவதி " ஆகிய புனைப்பெயர்களில் படைப்புகளை எழுதியவர்?
விடை : - ந . பிச்சமூர்த்தி

🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅

>> பாண்டம் பாண்டமாக என்பதன் இலக்கணக்குறிப்பு?
விடை : - அடுக்குத்தொடர்

>> வாயிலும் சன்னலும் என்பதன் இலக்கணக்குறிப்பு?
விடை : - எண்ணும்மை

>>ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக என்ற பாடல் இடம் பெற்ற நூல்?
 விடை : - யசோதர காவியம்

🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅

>>திராவிட மொழிகளுள் மூத்த மொழியாய் இலங்குவது?
விடை : - தமிழ் மொழி

>> இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை - - - - - - க்கும் மேற்பட்டது.
விடை : - 1300

>>இந்தியாவில் உள்ள மொழிக்குடும்பங்களின் எண்ணிக்கை? விடை : -

🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅

>>இந்திய நாடு " மொழிகளின் காட்சிச்சாலை " யாகத் திகழ்கிறது என்று கூறியவர்?
விடை : - ச . அகத்தியலிங்கம்

>>திராவிடர் பேசிய மொழியே - - - - - எனப்படுகிறது.
விடை : - திராவிட மொழி

>>திராவிடம் என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர்?
விடை : - கால்டுவெல்

🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅

>>எந்த சொல்லிலிருந்து " திராவிடா " என்ற சொல் பிறந்தது என்று மொழி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்? விடை : - தமிழ்

>>தமிழ் - தமிழா - > தமிலா - > டிரமிலா - > ட்ரமிலா - த்ராவிடா - திராவிடா என்று விளக்குபவர்?
விடை : - ஹீராஸ் பாதிரியார்

>>வடமொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதன்முதலில் குறிப்பிட்டவர்?
விடை : - அறிஞர் வில்லியம் ஜோன்ஸ்

🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅

>>முதன் முதலில் தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்து இவை தனியொரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற கருத்தை முன்வைத்தவர்?
 விடை : - பிரான்சிஸ் எல்லிஸ்

>>தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் போன்ற மொழிகளை ஒரே இனமாகக் கருதித் தென்னிந்திய மொழிகள் என பெயரிட்டவர்?
விடை : - பிரான்சிஸ் எல்லிஸ்


>>மந்தி என்பதன் பொருள்?
விடை : - பெண்குரங்கு

🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅

>>களிறு என்பதன் பொருள்?
 விடை : - ஆண் யானை

>>தமிழ் மொழியின் மிகப் பழமையான இலக்கண நூல்?
விடை : - தொல்காப்பியம்
>>சங்க இலக்கியத்தின் காலம்?
விடை : - கி . மு 5 - 2 ஆம் நூற்றாண்டு

>>கன்னட மொழியின் மிகப் பழமையான இலக்கண நூல்?
விடை : - கவிராஜ மார்க்கம்

🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅

>>கவிராஜ மார்க்கம்
இயற்றப்பட்ட காலம்?
விடை : - கி . பி 9ஆம் நூற்றண்டு

>>இந்திய இலக்கணக் கொள்கைகளின் பின்னணியில் தமிழ் இலக்கனம் என்னும் நூலின் ஆசிரியர்?
விடை : - செ . வை . சண்முகம்


>>தெலுங்கு மொழியின் மிகப் பழமையான இலக்கண நூல்?
விடை : - ஆந்திரா பாஷா பூஷனம்

🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅

>>ஆந்திர பாஷா பூஷனம்
இயற்றப்பட்ட காலம்?
விடை : - கி . பி 12 ஆம் நூற்றாண்டு

<>தெலுங்கு மொழியின் மிகப் பழமையான இலக்கியம்?
விடை : - பாரதம்

>>மலையாள மொழியின் மிகப் பழமையான இலக்கண நூல்?
 விடை : - லீலா திலகம்

🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅

>>மலையாள மொழியின் மிகப் பழமையான இலக்கியம்?
விடை : - பாரதம்

>>லீலா திலகம் இயற்றப்பட்ட காலம்? விடை : - கி . பி 15 ஆம் நூற்றாண்டு

>>இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை எந்த மொழியில் அமைந்துள்ளன?
 விடை : - தமிழ்

🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅




Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY