Ads Right Header

அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்!



அகத்தியர் – குறுமுனி

•இளம்பூரணர் – உரையாசிரியர்,vஉரையாசிரியச் சக்கரவர்த்தி, உரையாசிரியர்களின் தலைமையாசிரியர்

• நாச்சினார்க்கினியர் – உச்சிமேற்கொள் புலவர், உரைகளில் உரை கண்டவர்.

• கபிலர் – புலனழுக்கற்ற அந்தணாளன், நல்லிசைக் கபிலன், பொய்யா நாவின் கபிலர்.

• திருவள்ளுவர் – முதற்பாவலர், பெருநாவலர், தெய்வப் புலவர், செந்நாப்போதார், நாயனார், மாதானுபங்கி, தேவர், நான்முகனார், பொய்யில் புலவர்.

• திருஞானசம்பந்தர் – தோடுடைய செவியன், காழி வள்ளல், தோணிபுரத் தென்றல், திராவிட சிசு, ஆளுடைய பிள்ளை

• திருநாவுக்கரசர் – அப்பர், தாண்டக வேந்தர், வாகீசர், மருள் நீக்கியார், தேசம் உய்ய வந்தவர்.

• சுந்தரர் – வன் தொண்டர், தம்பிரான் தோழர், நாவலூரார்.

• மாணிக்கவாசகர் – அழுது அடியடைந்த அன்பர்.

• சேக்கிழார் – அருண்மொழித்தேவர், உத்தமசோழ பல்லவராயன், தெய்வச் சேக்கிழார், தொண்டர் சீர் பரவுவார்.

• பெரியாழ்வார் – பட்டர் பிரான், வேயர்கோன், விஷ்ணுசித்தர்.

• ஆண்டாள் – சூடிக்கொடுத்த நாச்சியார், வைணவம் தந்த செல்வி, கோதை.

• நம்மாழ்வார் – சடகோபன், காரிமாறன், தமிழ்மாறன், பராங்குசன்.

• குலசேகராழ்வார் – கூடலர்கோன், கொல்லிகூவலன்.

• திருமங்கையாழ்வார் – பரகாலன், கலியர், மங்கை வேந்தர், திருமங்கை மன்னர், நாலுகவிப் பெருமாள், வேதம் தமிழ் செய்த மாறன், ஆலிநாடன்.

• திருமழிசையாழ்வார் – திராவிட ஆச்சாரியார்.

• தொண்டரடிப் பொடியாழ்வார் – விப்பிரநாராயணன்.

• நம்பியாண்டார் நம்பி – தமிழ் வியாசர்.

• ஒளவையார் – தமிழ் மூதாட்டி.

• திருமூலர் – முதல் சித்தர்.

• கம்பர் – கவிச்சக்கரவர்த்தி, கல்வியில் பெரியவர்.

• சீத்தலைச் சாத்தனார் – தண்டமிழாசான் சாத்தன் நன்னூற் புலவன்.

• திருத்தக்கத் தேவர் – தமிழ்ப் புலவர்களுள் இளவரசர்.

• புகழேந்தி – வெண்பாவிற் புகழேந்தி.

• மீனாட்சி சுந்தரம் பிள்ளை – மகாவித்வான்

• திரிகூட ராசப்பக் கவிராயர் – திருக்குற்றால நாதர், கோயில் வித்வான்.

• மாயூரம் வேதநாயகம் பிள்ளை – நீதியரசர்

• பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் – அழகிய மணவாளதாசர், திவ்வியக்கவி, தெய்வக்கவிஞர்.

• இராமலிங்க அடிகளார் – வள்ளலார், அருட்பிரகாசர், ஓதாது உணர்ந்த பெருமாள் சன்மார்க்க்கவி, வடலூரார், இறையருள் பெற்ற திருக்குழந்தை.

• பாரதிதாசன் – புரட்சிக் கவிஞர், பாவேந்தர், புதுமைக் கவிஞர்.

• இரட்டைப்புலவர்கள் – இளஞ்சூரியர், முதுசூரியர்.

• உ.வே. சாமிநாதய்யர் – தமிழ்த்தாத்தா, மகாமகோபாத்தியாய.

• பாரதியார் – மகாகவி, தேசிய கவி, பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை, விடுதலைக் கவி, மக்கள் கவி, தமிழிலக்கியத்தின் விடிவெள்ளி, நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா, எட்டயபுரத்துக் கவி, புதுக்கவிதையின் தந்தை.

• சிவப்பிரகாசர் – கற்பனைக் களஞ்சியம்.

• வெ.ராமலிங்கம் பிள்ளை – நாமக்கல் கவிஞர்.

• பெருஞ்சித்திரனார் – பாவலரேறு.

• அழ.வள்ளியப்பா – குழந்தைக் கவிஞர்.

• திரு.வி.கலியாணசுந்தரனார் – திரு.வி.க. தமிழ்த்தென்றல்.

• புதுமைப்பித்தன் – சிறுகதை மன்னன்.

• சோமசுந்தர பாரதியார் – நாவலர்.

• இராபர்ட் – டி – நொபிலி – தத்துவ போதகர்.

• வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரி – பரிதிமாற் கலைஞர்.

• வால்டர் ஸ்காட் – உலகச் சிறுகதையின் தந்தை.

• இராசா.அண்ணாமலைச் செட்டியார் – தனித்தமிழ் இசைக் காவலர்.

• டி.கே.சி. – ரசிகமணி.

• தேவநேயப் பாவாணர் – மொழி ஞாயிறு, செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ்ப் பெருங்காவலர், என 174 சிறப்புப் பெயர்கள்.

• உடுமலை நாராயண கவி – பகுத்தறிவுக் கவிராயர்.

• அஞ்சலையம்மாள் – தென்நாட்டின் ஜான்சிராணி.

• அம்புஜத்தம்மாள் – காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்.

• கந்தசாமி – நவீன தமிழ்நாடக மறுமலர்ச்சித் தந்தை.

• சங்கரதாசு சுவாமிகள் – நாடகத் தமிழ் உலகின் இமயமலை தமிழ் நாடகத் தலைமையாசிரியர்.

• வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார் – பிற்கால உரையாசிரியர்ச் சக்கரவர்த்தி.

• பரிதிமாற்கலைஞர் – திராவிட சாஸ்திரி, தமிழ் நாடகப் பேராசிரியர்.

• பம்மல் சம்பந்தனார் – தமிழ் நாடகத் தந்தை.

• ஜெயகாந்தன் – தமிழ்நாட்டின் மாப்பஸான்
• வாணிதாசன் – தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த், கவிஞரேறு, பாவலர் மணி

• அநுத்தமா – தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின்

• கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை – முத்தமிழ்க் காவலர்.

• டி.கே.சண்முகம் சகோதரர்கள் – தமிழ்நாடக மறுமலர்ச்சியின் தந்தை.

• இரா.பி.சேதுப்பிள்ளை – சொல்லின் செல்வர்.

• வ.உ.சிதம்பரனார் – கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்.

• ஈ.வெ.ரா.ராமசாமி – பெரியார், பகுத்தறிவுப் பகலவன், சுய மரியாதைச் சுடர், வெண்தாடி வேந்தர்.

• இராஜாஜி – மூதறிஞர்.

• நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் – காந்தியக்கவிஞர்.

• காமராஜர் – பெருந்தலைவர், கல்விக் கண் திறந்தவர்.

• அருணகிரிநாதர் – சந்தக்கவி.

• பொ.வே.சோமசுந்தரனார் – பெருமழைப்புலவர்.

• மு.கதிரேசச் செட்டியார் – மகோமகோபாத்தியாய, பண்டிதமணி.

• கருமுத்து தியாகராசச்செட்டியார் – கலைத்தந்தை.

• ஆறுமுக நாவலர் – பதிப்புச் செம்மல்.

• சி.பா. ஆதித்தனார் – தமிழர் தந்தை.

• கா. அப்பாத்துரையார் – பன்மொழிப்புலவர்.

• பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் – பொதுவுடைமைக் கவிஞர், மக்கள் கவிஞர்.

• ம.பொ.சிவஞானம் – சிலம்புச் செல்வர்.

• சுந்தர ராமசாமி – பசுவய்யா.

• மாதவய்யர் – கோணக் கோபாலன்.

• வேங்கடரமணி – தென்னாட்டுத் தாகூர்.

• சுரதா – உவமைக் கவிஞர்.

• கண்ணதாசன் – காரைமுத்து புலவர், வணங்காமுடி, பார்வதி நாதன், ஆரோக்கியசாமி, கமகப்பிரியன்.

• கல்கி – தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்.

• சுஜாதா – தமிழ்நாட்டின் ஹாட்லி சேஸ்.

• கி.வா. ஜெகநாதன் – தமிழறிஞர்.

• அண்ணாதுரை – பேரறிஞர், தென்னாட்டு பெர்னாட்ஷோ.

• வி.முனுசாமி – திருக்குறளார்.

• பாலசுப்ரமணியம் – சிற்பி.

• நா. காமராசன் – வானம்பாடிக் கவிஞர்.

• ஸ்ரீவேணுகோபாலன் – புஷ்பா தங்கதுரை.

• ஆத்மாநாம் – எஸ்.கே.மதுசூதன்.

• என்.எஸ்..கிருஷ்ணன் – கலைவாணர்.

• எம்.ஜி.ராமச்சந்திரன் – மக்கள் திலகம், எம்.ஜி.ஆர், புரட்சி நடிகர், இதயக்கனி.

• மு. கருணாநிதி – கலைஞர்.

• எம்.ஆர்.ராதா – நடிகவேள்.

• எம்.எஸ்.சுப்புலட்சுமி – இசைக்குயில்.

• செய்குத்தம்பி பாவலர் – கற்பனைக் களஞ்சியம்.

• வேதரத்தினம் பிள்ளை – சர்தார்.

• அண்ணாமலை ரெட்டியார் – அண்ணாமலை கவிராஜன்.

• திரு.வி.க. – தமிழ் உரைநடையின் தந்தை


• வா.செ.குழந்தைசாமி – குலோத்துங்கன்

• அப்துல் ரகுமான் – கவிக்கோ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY