Ads Right Header

வேலைவாய்ப்புச் செய்திகள்! (07/04/2020)




விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக
www.tangedco.gov.in
என்ற இணையதளம் மூலம் 23 . 04 . 2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 சம்பளம் ரூ . 18,800/ - 59,900/

தேர்வு நடைமுறை

எழுத்துத் தேர்வு மற்றும் உடல் பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் விவரங்கள்

பொது / ஓ . பி . சி .
விண்ணப்பதாரர்களுக்கு
விண்ணப்பக் கட்டணம் - ரூ . 1000 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்
( எஸ் . டி . / எஸ் . சி . / பி . டபிள்யு . டி ) விண்ணப்ப கட்டணம் ரூ . 500/−

🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கத்தில்
வேலைவாய்ப்பு.



நேர்முகத் தேர்வு

 1 ) அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையைப் போல் இரண்டு மடங்கு விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் . எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் தங்கள் சொந்த செலவில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் . விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் , நடைமுறையிலுள்ள அரசாணைகளின்படி இட ஒதுக்கீடு மற்றும் இனச்சுழற்சி அடிப்படையிலும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள் .

 ii ) நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்வதற்காக அழைக்கப்படவுள்ள நபர்களின் பெயர்ப் பட்டியல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளம் வழியாக வெளியிடப்படும் .

iil ) நேர்முகத் தேர்வு நடைபெறுவது தொடர்பான விவரங்கள் மின்னஞ்சல்
 ( e - mail ) மூலம் விண்ணப்ப தாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் . நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் , நாள் , நேரம் ஆகிய விவரங்கள் அடங்கிய நேர்முகத் தேர்விற்கான அழைப்புக் கடிதங்களை , விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் . அழைப்புக் கடிதத்துடன் வராத விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் .

 iv ) எழுத்துத் தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வுக்கான மதிப்பெண் முறையே 85 : 15 என்ற விகிதத்தில் இருக்கும் .

தெரிவு செய்யப்படும் முறை

அ ) விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்விலும் நேர்முகத் தேர்விலும் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசாணைப்படியான இட ஒதுக்கீடு , இனச் சுழற்சி முறை , ஆகியவற்றின் அடிப்படையில் கணினி மூலம் சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுவார்கள் .

ஆ ) விண்ணப்பதாரர்களின் தகுதி குறித்த அனைத்து சான்றிதழ்களையும் , ஆதிதிராவிடர் , அருந்ததியார் , பழங்குடியினர் , மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர் , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ( முஸ்லிம் ) , ஆதரவற்ற விதவைகள் , மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகிய பிரிவுகளில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் அனைத்துச் சான்றிதழ்களையும் சரிபார்த்த பின்னரே தகுதி உடைய விண்ணப்பதாரர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும் .

இ ) மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் தேர்வு செய்யப்படும் நபர்களுக்குத் தெரிவு மற்றும் சங்கத்திற்கு ஒதுக்கீடு ஆணை ( selection and allotment order ) மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் வழங்கப்படும் . அவர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட சங்கத்தின் தகைமை வாய்ந்த அலுவலரால் பணியமர்வு ஆணை ( appointment order ) வழங்கப்படும் .

ஈ ) முன்னாள் இராணுவத்தினரின் வாரிசுதாரர்களுக்கு முன்னாள் இராணுவத்தினருக்கான இட ஒதுக்கீடு முறை பொருந்தாது .

 உ ) தெரிவு செய்யப்படும் மாற்றுத் திறனாளிகள் , தங்களது குறைபாடு , தாங்கள் தெரிவு செய்யப்படும் பதவிகளுக்குரிய பொறுப்புகளை முழுத்திறனுடன் நிறைவேற்றுவதற்குத் தடையாக இருக்காது என்பதற்கான சான்றிதழை மருத்துவக் குழுவிடம் பெற்றுச் சமர்பிக்க வேண்டும் .

web: www.drbdindigul.net
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY