Ads Right Header

நடப்பு நிகழ்வுகள்! (17/04/2020) (18/04/2020)



தமிழ்நாடு

100 நாள் வேலைத் திட்டம்

100 நாள் வேலைத்திட்டத்தில் ஊதியமானது 229 இலிருந்து 256 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

 தமிழகத்தில் கடந்த 15ஆம் தேதி முதல் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அலைட்

முதியோர் கர்ப்பிணிகள் நோயாளிகளின் அவசரகால மருத்துவ தேவைகளுக்காக சென்னையில் அலைட் என்ற பெயரில் இலவச சேவை தொடங்கப்பட்டுள்ளது.

 மருத்துவமனைகளுக்கு மாதந்தோறும் பரிசோதனைக்காக செல்லும் கர்ப்பிணிகள் டயாலிசிஸ் சிகிச்சைக்கு செல்லும் முதியவர்கள் தொலைவில் உள்ள மருந்தகங்களுக்கு செல்வோர் என மருத்துவம் சார்ந்த தேவைகளுக்காக பயணம் செய்வோர் முறையான வாகன வசதி என்று சிரமப்பட்டுவதை தடுக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மற்றும் மகேந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் ஆகியோர் இணைந்து மருத்துவ தேவைகளுக்காக அலைட் என்ற பெயரில் இலவச சேவையை சென்னையில் தொடங்கியுள்ளன.

 தேசியநிகழ்வுகள்

CSR ( corporate social responsibility ) மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் மாநில முதலமைச்சர் நிவாரண நிதி மற்றும் மாநில நிவாரண நிதி ஆகியவற்றிற்க்கு கொடுக்கப்படும் நன்கொடைகள் பெருநிறுவன சமூக பொறுப்பு பலவீனமாக கருதப்பட மாட்டாது என கூறியுள்ளது . ஆனால் PM CARES நிதிக்கு வழங்கப்படும் நன்கொடைகள் CSR ஆக கருதப்படும் என்று கூறியுள்ளது.

ஆந்திர அரசின் ஆங்கிலவழிக் கல்வி அரசாணைகள் ரத்து .

 ஆந்திர மாநிலத்தில் ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கு மாற்றுவதற்காக மாநில அரசு வெளியிட்ட அரசாணைகள் அந்த மாநில உயர் நீதிமன்றம் ரத்து செய்தது .

இந்த அரசாணைகள் கடந்த 1968 - ம் ஆண்டு கல்வி சட்டம் தொடர்பான தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக உள்ளது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

1968 தேசிய கல்விக் கொள்கையில் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை தாய் மொழி கல்வி பின்பற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பிட் இந்தியா

மத்திய இடைநிலை கல்வி வாரியத்துடன் இணைந்து நாடு முழுவதும் உள்ள பள்ளி குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்துக்கு இந்தியா செயல் நாள் என்ற நேரடி காணொளி உடற் பயிற்சி வகுப்பை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது .

ஊரடங்கு முடியும் நாள் மே 3 வரை இந்த நிகழ்வு ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . முதல் தனிமைப்படுத்தப்பட்ட தேசிய பூங்கா.

உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிடால் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியாவின் வனவிலங்கு சரணாலயமாக ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் இந்த தேசிய பூங்கா தனிமைப் படுத்தப் பட்டுள்ளது.

திருச்சூர் பூரம் திருவிழா

வைரஸ் தொற்று பாதிப்பின் காரணமாக முதன்முறையாக திருச்சூர் பூரம் திருவிழாவானது ரத்து செய்யப்பட்டுள்ளது .இது கேரளாவில் அனைத்து திருவிழாக்களின் தாய் என்று அழைக்கப்படுகிறது.
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY