Ads Right Header

6th Term 3 - பொது அறிவு 50 + 50 வினாக்கள் விடையுடன்!


🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
⚓ WHATSAPP
      Click here to join tnkural.com

⚓TELEGRAM
     click here to join tnkural.com
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

1. அரசியல் தத்துவத்தின் அடித்தளம் என்றழைக்கப்படுவது?

 A.இத்தாலி
 B.ரோம்
 C.கிரீஸ்
 D.இங்கிலாந்து

2. நியூசிலாந்தில் உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த ஆண்டு?

A. 1920
B. 1890
C. 1893
D. 1796

3. உலகிலேயே பழமையான மற்றும் நீண்ட காலமாக செயல்பட்டு வரும் நாடாளுமன்றத்தை கொண்டது?

 A.கிரேக்கம்
 B.ஐஸ்லாந்து
 C.இங்கிலாந்து
 D.அமெரிக்க ஐக்கிய நாடுகள்

4. உலக மக்களாட்சி தினம் கடைபிடிக்கப்படும் நாள்?

 A.செப்டம்பர்15 , 2007
 B.அக்டோபர்15, 2007
 C.நவம்பர்15 , 2007
 D. டிசம்பர்15, 2007

5. மாநகராட்சி ஆணையர் யார்?

 A.மேயர்
 B.இந்திய ஆட்சிப்பணி அதிகாரி
 C.செயல் அலுவலர்
 D.வட்டார வளர்ச்சி அலுவலர்

6. மக்களாட்சி அமைப்பின் ஆணிவேராக செயல்படுவது?

A. ஊராட்சி ஒன்றியம்
B. மாநகராட்சி
C. கிராம ஊராட்சி
D. கிராமசபை

7. கூற்றுகளை ஆராய்க.

 I.தேசிய பஞ்சாயத்து ராஜ் சட்டம் 1992 ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கொண்டு வரப்பட்டது.
 II.இப்படியான ஓர் அமைப்பு வேண்டும் என்று இதற்குப் பெயர் வைத்தவர் மகாத்மா காந்தி.

A.I மட்டும் சரி
B.II மட்டும் சரி
C. இரண்டும் சரி
D. இரண்டுமில்லை

8. சிறப்பாக செயல்படும் ஊராட்சி அமைப்புகளுக்கு கீழ்கண்ட எந்த அமைப்பு விருதுகளை வழங்குகிறது?

 A.ஊராட்சி ஒன்றியம்
 B.பஞ்சாயத்து ராஜ்
 C.மத்திய அரசு
 D.மாநில அரசு

9. தமிழ் ஏனைய மொழிகளின் செல்வாக்கிற்கு உட்படாமல் முற்றிலும் சுதந்திரமான ஒரு மரபாக உருப்பெற்று எழுந்துள்ளது என கூறியவர் ?

A) கார்டுவெல்
B) ஹென்றி எஸ் ஆல்காட்
C) ஸ்டேன்லி ஜாக்
D) ஜார்ஜ் எல் ஹார்ட்

10. பல வேதவேள்விகளை நடத்தியதைக் கொண்டாடும் விதமாக நாணயங்களை வெளியிட்ட மன்னன் ?

A) சேரல் இரும்பொறை
B) இளஞ்சேட்சென்னி
C) முதுகுடுமிப் பெருவழுதி
D) பாண்டிய நெடுஞ்செழியன்

11.சற்று தொலைவில் இருந்து எதிரியின் மீது ஏவுகணையைப் போன்று வீசப்படுவது ?

A) தோமாரம்
B) வில்
C) ஈட்டி
D) வாள்

12. சங்க இலக்கியம் பாம்பின் தோலைக்காட்டிலும் மென்மையான _____ துணி பற்றிக் குறிப்பிடுகிறது ?

A) மஸ்லின்
B) பட்டு
C) பருத்தி துணி
D) கலிங்கம்

13. ஏழிசை வல்லான் என குறிப்பிடப்படுபவர் ?

A) கரிகாலன்
B) நெடுஞ்செழியன்
C) இளஞ்சேட்சென்னி
D) இளஞ்சேரல்

14.ரோமப் பேரரசர் ஆரிலியன் எதனை எடைக்கு எடை தங்கம் கொடுத்துப் பெற தகுதியானது என அறிவித்தார் ?

A) மஸ்லின்
B) பட்டு
C) முத்துக்கள்
D) மிளகு

15. I) மூத்த பிளினி தன்னுடைய இயற்கை வரலாறு எனும் நூலில் முசிறியை 'இந்தியாவின் முதல் பேரங்காடி' என குறிப்பிடுகிறார்.
II) கிரேக்க குடியிருப்பு இருந்த முசிறியில் அகஸ்டஸ் கடவுளுக்கு கோவில் கட்டப்பட்டு இருந்தது.
III) கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாப்பிரஸ் இலையில் எழுதப்பட்ட ஒப்பந்தம் அலெக்சாண்டரியாவைச் சேர்ந்த வாணிகர்க்கும் முசிறியைச் சேர்ந்த வணிகருக்கும் இடையே இருந்த ஒப்பந்தம் பற்றி குறிப்பிடுகிறது.

A) I மட்டும் சரி
B) II & III மட்டும் சரி
C) III மட்டும் சரி
D) அனைத்தும் சரி

16. அசோகரின் மறைவிற்குப் பின் கலிங்கத்தில் தங்களை சுதந்திர அரசாக பிரகடனப்படுத்தியவர்கள் ??

A) சதாவாகனர்கள்
B) சேடிகள்
C) சுங்கர்கள்
D) கன்வர்கள்

17. சதுர வடிவிலான இருமொழி வாசகங்களைக் கொண்ட நாணயங்களை வெளியிட்டவர் ?

A) மினான்டர்
B) ஹாலா
C) கோண்டோ பெர்னஸ்
D)டெமிட்ரியஸ்

18. கிரேக்கர்களை சிந்து நதிக்கரையில் வெற்றி கொண்டதாக குறிப்பிடப்படுபவர்?

A) அக்னி மித்திரர்
B) காளிதாசர்
C) வசுமித்ரர்
D) அசுவகோசர்

19. பாக்டீரியாவின் அரசனாக இருந்தவர் ?

A) தனதேவன்
B) முதலாம் டேரியஸ்
C) இரண்டாம் கட்பீசஸ்
D) மினான்டர்

20.பிரிகஸ்தகா என்னும் நூலை இயற்றியவர்?

A) குணாதியா
B) பதஞ்சலி
C) அஸ்வகோசர்
D) பாணபட்டர்

21. எந்த ஆட்சியாளர்கள் அச்சு வார்க்கும் முறையை அறிமுகம் செய்து நேர்த்தியான நாணயங்களை வெளியிட்டனர் ?

A) இந்தோ- பார்த்தியர்கள்
B) இந்தோ - கிரேக்கர்கள்
C) சதாவாகனர்கள்
D) குஷாணர்கள்

22.தூய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட முதல் கல்வெட்டு எது ?

A) ஜுனாகத் கல்வெட்டு
B) அயோத்தி கல்வெட்டு
C) முதலாம் டேரியஸின் கல்வெட்டு
D) நஸ்தி ரஸ்தம் கலெவ

23.சதாவாகன வம்சத்தை தோற்றுவித்த சிமுகா எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார் ?

A)  33
B)  23
C)  10
D). 15

24.வாதாபி படையெடுப்பில் பல்லவர் படைக்கு தலைமை ஏற்று நடத்தியவர் ?

A) முதலாம் மகேந்திரவர்மன்
B) சிறுத்தொண்டர்
C) முதலாம் நரசிம்மவர்மன்
D) இராஜசிம்மன்

25. தவறானது எது;

A) தண்டின் முதலாம் நரசிம்மவர்மன் அவையை அலங்கரித்தார்.
B) பாரவி சிம்மவிஷ்ணுவின் காலத்தில் வாழ்ந்தார் ‌‌.
C) நியாய பாஷ்யா என்னும் நூலை இயற்றிய வாத்ஸ்யாயர் காஞ்சி கடிகையில் ஆசிரியராக இருந்தார்.
D) இரண்டாம் நரசிம்மவர்மனால் ஆதரிக்கப் பட்ட பெருந்தேவனார் மகாபாரதத்தை பாரத வெண்பா என்னும் பெயரில் தமிழில் இயற்றினார்.

26.ராஜசிம்மேஸ்வரம் என அழைக்கப்படும் கோயில் எது ?

A) காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோயில்
B) காஞ்சி கைலாசநாதர் கோயில்
C) தாராசுரம் கோவில்
D) பிரகதீஸ்வரர் கோயில்

27.பல்லவர்கள் தக்காணத்தை சூறையாடி வாதாபியை கைப்பற்றிய காலம் ?

A) கி.பி 566-கி.பி 597
B) கி.பி 641 - கி.பி 647
C) கி.பி 655- கி.பி 680
D) கி.பி 610- கி.பி 642

28. பொருத்துக.

லக்கண்டி     1)காசி விஸ்வேஸ்வரர் கோயில்
குருவட்டி       2) மல்லிகார்ஜுனா கோயில்
பகலி             3)மகாதேவா கோயில்
இட்டகி          4)கள்ளேஸ்வரர் கோயில்

A) 1243
B) 4321
C) 1234
D) 2143

29.அமோகவர்ஷர் யாரால் சமண மதத்திற்கு மாற்றப்பட்டார் ?

A) பத்ரபாகு
B) உபகுப்தர்
C) ஜினசேனா
D) திருநாவுக்கரசர்

30. I) எல்லோரா கைலாசநாதர் கோயில் மத்திய பிரதேசத்தில் உள்ள ஔரங்காபாத் அருகில் அமைந்துள்ளது.
II) எல்லோராவில் உள்ள முன்னூறு குடைவரை கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
III)இது இரண்டாம் கிருஷ்ணனின் ஆட்சியில் அமைக்கப்பட்டது.
IV) இக்கோயில் 6000 சதுர அடி பரப்பையும், கோயில் விமானம் 90 அடி உயரமும் கொண்டது.

A) II & IV சரி
B) IV  சரி
C) I,II&IV சரி
D) அனைத்தும் தவறு

31. விக்கிரமார்ஜுனவிஜயம் என்னும் நூலில் ஆதிகவி பம்பா யாரை அர்ச்சுனனின் பாத்திரத்தில் பொருத்தி எழுதியுள்ளார் ?

A) சாளுக்கிய அரிகேசரி
B) மூன்றாம் கோவிந்தனார்
C) மூன்றாம் கிருஷ்ணன்
D) இரண்டாம் புலிக்கேசி

32. பிதாரி தூண் கல்வெட்டு யாருடையது ?

A) முதலாம் சந்திர குப்தர்
B) சமுத்திர குப்தர்
C) விஷ்ணு குப்தர்
D) ஸ்கந்த குப்தர்

33.நாணயங்களில் முதன் முதலாக இடம்பெற்ற குப்த அரசர் யார் ?

A) ஸ்ரீ குப்தர்
B) முதலாம் சந்திர குப்தர்
C) சமுத்திர குப்தர்
D) இரண்டாம் சந்திர குப்தர்

34.இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீ மேகவர்மன்  யாரேடைய சமகாலத்தவர் ஆவார் ?

A) ஸ்கந்த குப்தர்
B) விஷ்ணு குப்தர்
C) கடோத்கஜன்
D) சமுத்திர குப்தர்

35. கயா பாழடைந்து இருந்தது, கபிலவாஸ்து காடாயிருந்தது, ஆனால் பாடலிபுத்திரம் மக்கள் செழிப்போடு வாழ்ந்தனர் என்றவர் ?

A) வராச்சி
B) யுவன் சுவாங்
C) பாகியான்
D) ஹர்சர்

36.____ பிரிவைச் சேர்ந்த வணிகர்கள் ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தனர் ?

A) ஷேத்ரா
B) அப்ரகதா
C) சிரேஸ்தி
D) சார்த்தவாகா

37.கட்டுமான கோயில்களை முதன் முதலாக கட்டியவர்கள் ?

A) குப்தர்கள்
B) ஹூணர்கள்
C) சதாவாகனர்கள்
D) பல்லவர்கள்

38.445 மற்றும் 572 ஐ ஒரு குறிப்பிட்ட எண்ணால் வகுக்கும் போது முறையே மீதி 4 மற்றும் 5தரக்கூடிய மிகப்பெரிய எண்ணை காண்க.

A.63
B.64
C.67
D.65

39.1+5+9+.... என்ற தொடரில் எத்தனை உறுப்புகளை கூட்டினால் கூடுதல் 190 கிடைக்கும்?

A. 10
B. 100
C. 125
D.  25

40. ஒரு உள்ளீடற்ற அரைக்கோள கிண்ணத்தை உருவாக்கப் பயன்பட்ட பொருளின் கன அளவு 436π/3 க.செமீ ஆகும்.   கிண்ணத்தின் வெளி விட்டம் 15  செ.மீ எனில் அதன் தடிமனை கணக்கிடுக.

A. 2cm
B. 8cm
C. 4cm
D. 12 cm

41. சமமான விட்டம் மற்றும் உயரம் உடைய ஒரு உருளை ஒரு கூம்பு மற்றும் ஒரு கோளத்தின் கன அளவு விகிதம்?

A. 1:2:3
B. 2:1:3
C. 1:3:2
D. 3:1:2

42. ஒரு உருளையின் உயரத்தை மாற்றாமல் அதன் ஆரத்தைப் பாதியாகக் கொண்டு புதிய உருளை உருவாக்கப்படுகிறது. புதிய மற்றும் முந்தைய உருளையின் கன அளவு விகிதம்?

A. 1:2
B. 1:4
C. 1:6
D. 1:8

43. r1அலகுகள் ஆரமுள்ள ஒரு கோளப்பந்து உருக்கப்பட்டு r2 அலகுகள் ஆரமுடைய 8 சமகோள பந்துகளாக ஆக்கப்படுகிறது எனில் r1:r2 என்ன?

A. 2:1
B. 1:2
C. 4:1
D. 1:4

44. இரு கோளங்களின் ஆரங்களின் விகிதம் 4:7 எனில் அவற்றின் கன அளவுகளின் விகிதம் காண்க.

A. 16:49
B. 64:343
C. 256:2401
D. 4:7

45. கணித மேதையின் இளவரசர் என்று அழைக்கப்படுபவர் யார்?

A. ரெனே டெஸ்கார்ட்ஸ்
B. ஹெரான்
C. ராமானுஜர்
D. கார்ல் பிரடெரிக் கவுஸ்

46. இந்துகுஷ் மலைத்தொடர் மேற்கே கீழ்கண்ட எந்த மலைத் தொடராக நீண்டு காணப்படுகிறது?

A. தாரஸ்
B. போன்டைன்
C. ஜாக்ரோஸ்
D. எல்பர்ஸ்

47. கீழ்கண்ட எந்த பகுதியில் சுலைமான் மலைத்தொடர் ஜாக்ரோஸ் மலைத் தொடராக தொடராக நீண்டு காணப்படுகிறது?

A. தென்கிழக்கு
B. வடமேற்கு
C. வடகிழக்கு
D. தென்மேற்கு

48. மலைத்தொடர்கள் கூடும் பிரியும் இடங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 A.தாழ்நிலப் பகுதி
 B.கணவாய்
 C.பீடபூமிகள்
 D.முடிச்சு

49. குன்லுன் மற்றும்  இமயமலை ஆகியவற்றுக்கிடையே காணப்படும் மலையிடைப் பீடபூமி எது?

A. தானுவாலா
B. அனடோலியா
C. ஈரான்
D. திபெத்

50. ஷான் பீடபூமி எங்கு அமைந்துள்ளது?

 A.சவுதி அரேபியா
 B.இத்தாலி
 C.மியான்மர்
 D.சீனா

51. மிகப்பெரிய தீவுக்கூட்டம் என்றழைக்கப்படுவது எது?

A. பிலிப்பைன்ஸ்
B. தைவான்
C. ஜப்பான்
D. இந்தோனேசியா

52. ஆசியாவின் முக்கிய ஆறுகள் பெரும்பாலும் எந்த கடலில் கலக்கின்றன

 A.பசுபிக் பெருங்கடல்
 B.இந்திய பெருங்கடல்
 C.வங்காள விரிகுடா
 D.ஆர்டிக் பெருங்கடல்

53. ஆசியாவின் முக்கிய ஆறான ஹோவாங்கோ சேரும் இடம் எது?

 A.கிழக்கு சீனக்கடல்
 B.போகாய் வளைகுடா
 C.ஓப் வளைகுடா
 D.டாடார் நீர்ச்சந்தி

54.   பிறப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டு பொருந்தாத ஆறு எது?

 A.எனிசி
 B.மீகாங்
 C.யாங்சி
 D.ஹோவாங்கோ

55. தவறான கூற்றை கண்டறிக.
 I.முப்பள்ளத்தாக்கு நீர்த்தேக்கமானது யாங்சிஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
 II.இது உலகின் மிகப் பெரிய நீர்த்தேக்கம் ஆகும்.
 III.இது சீனாவின் மின்சாரத் தேவையில் 15 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது.

A. I  மட்டும்
B.II மட்டும்
C.III மட்டும்
D.எதுவுமில்லை

56. மிக வெப்பமான பாலைவனம் எது?

 A.தார் பாலைவனம்
 B.கோபி பாலைவனம்
 C.அரேபிய பாலைவனம்
 D.தக்லாமக்கன் பாலைவனம்

57. பசுமை மாறா தாவரங்களில் பொருந்தாதது எது?

 A.ரப்பர்
 B.செம்மரம்
 C.மூங்கில்
 D.சால்

58. பனாவ் படிக்கட்டு முறை நெல் விவசாயம் எந்த நாட்டு மக்களால் உருவாக்கப்பட்டதாகும்?

 A.தாய்லாந்து
 B.இத்தாலி
 C.இந்தோனேஷியா
 D.பிலிப்பைன்ஸ்

59. பேரிச்சம் பழங்களை அதிக அளவு உற்பத்தி செய்யும் நாடு எது?

 A.மலேசியா
 B.ஈரான்
 C.பிலிப்பைன்ஸ்
 D.தாய்லாந்து

60. கீழ்க்கண்ட எந்த மொழியில் அங்கோர்வாட் என்றால் கோயில்களின் நகரம் என பொருள்படுகிறது?

A. கமர்
B. மகர்
C. தபாய்
D. கெமர்

61. ஆசியாவின் அறுவடைத் திருவிழாவான சுக்கோத் என்ற பெயரில்  எந்த நாட்டில் கொண்டாடப்படுகிறது?

A. இந்தோனேஷியா
B. இஸ்ரேல்
C. மங்கோலியா
D. பிலிப்பைன்ஸ்

62. ஐரோப்பாவின் 9 நாடுகள் வழியாக பாயும் ஆறு எது?

A. வோல்கா
B. டேன்யூப்
C. ரைன்
D. தேம்ஸ்

63. பொருத்துக.

 பென்னைன்ஸ்.     1. இங்கிலாந்து
 மெஸட்டா.               2. பிரான்ஸ்
 ஜுரா.                       3. ஸ்பெயின்
 கருங்காடுகள்        4. ஜெர்மனி

A. 1342
B. 3421
C. 1234
D. 1324

64. எல்ப்ராஸ் மலைச்சிகரம் எந்த மலைத்தொடரில் அமைந்துள்ளது?

A. ஆல்ப்ஸ் மலைத்தொடர்
B. கார்பேதியன் மலைத்தொடர்
C. காகசஸ் மலைத்தொடர்
D. ஆல்பைன் மலைத்தொடர்

65. பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் விளையும் முக்கிய பயிர் எது?

 A.ஓட்ஸ்
 B.சர்க்கரைவள்ளிக் கிழங்கு
 C.பார்லி
 D.மக்காச்சோளம்

66. புவியின் நடுவில் வரையப்பட்டுள்ள நிலநடுக்கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A. உயர் அட்சக்கோடு
B. பெரு வட்டம்
C. மத்திய அட்சக்கோடு
D. நில நடுவரை

67. பன்னாட்டு தேதிக்கோடு வளைந்து செல்வதற்கு காரணம்?

 A.இது நேராகச் சென்றால் ஒரே நாட்டிற்குள் மூன்று தேதிகள் அமையும்
 B.இது நேராகச் சென்றால் ஒரே நாட்டுக்குள் இரண்டு தேதிகள் அமையும்
 C.கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி கடந்தால் ஒருநாள் கூடும்
 D.மேற்கிலிருந்து கிழக்காக கோட்டு பகுதியை கடந்தால் ஒரு நாள் குறையும்

68. ராயல் வானியல் ஆய்வு மையம் எங்கு அமைந்துள்ளது?

 A. இங்கிலாந்து
 B. அமெரிக்கா
 C. ரஷ்யா
 D. பின்லாந்து

69. சரியான கூற்றை தேர்ந்தெடு.

 I. 1 மணி நேரத்தில் 15° தீர்க்க கோடுகளைப் புவி கடக்கிறது.
 II. 1°யை கடக்க புவி எடுத்துக்கொள்ளும் கால அளவு நான்கு நிமிடங்கள்.
 III.புவிக் கோளத்தின் சுற்றளவு 360°
 IV. புவியின் வடிவம் ஜியாய்டு என்றழைக்கப்படுகிறது.

A. I மட்டும் II
B. I மட்டும் III
C.I, II மற்றும் III
D. இவை அனைத்தும்

70. மெரிடியன் என்ற மொழி எந்த சொல்லிலிருந்து வந்ததாகும்?

A. லத்தின்
B. கிரேக்கம்
C. பிரிட்டன்
D. பிரஞ்சு

71. விதைகளின் மேற்புறத்தூவி நார்கள் என்று அழைக்கப்படுவது எது?

 A. பருத்தி
 B. ஆளி
 C. சணல்
 D. கற்றாழை

72. கீழ்கண்ட எந்த நார்த் தாவரம் மெத்தைகள் தயாரிக்கப் பயன்படுகிறது?

 A.பருத்தி
 B.தென்னை
 C.இலவம்
 D.ஆளி

73. உலக உணவு தினம் கடைபிடிக்கப்படும் நாள் எது?

 A. அக்டோபர் 16
 B. ஆகஸ்ட் 16
 C. நவம்பர் 16
 D. அக்டோபர் 14

74. தண்டுகளில் இருந்து நாம் உணவினை பெரும் காய்கறிகளில் பொருந்தாதது எது?

A. காலிஃப்ளவர்
B. உருளைக்கிழங்கு
C. கருணைக்கிழங்கு
D. இவற்றில் எதுவுமில்லை

75. எத்தனை நாட்களுக்குப் பின் குழியினுள் மண்புழு உரம் தயாராக இருக்கும்?

A. 39வது நாள்
B. 40வதுநாள்
C. 45வது நாள்
D. 49வது நாள்

76. உயிருள்ளவை உயிரற்றவை ஒன்று சேர்ந்த ஒரு கட்டமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 A.சூழலியல்
 B.சூழல் மண்டலம்
 C.சூழ்நிலை மண்டலம்
 D.சுற்றுச்சூழல்

77. யூரியாவில் நைட்ரஜனின் சதவீதம் எவ்வளவு?

A. 21%
B. 13%
C. 44%
D. 46%

78. நீரானது ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் இணைந்து உருவானது என நிரூபித்தவர்?

 A. ராபர்ட் பாயில்
 B. சாட்விக்
 C. கோல்ஸ்டின்
 D. லவாய்சியர்

79. சரியான கூற்றினை தேர்ந்தெடு.

 I.மிதக்கும் பனிப்படலமானது ஒரு பாதுகாப்பு படலமாக செயல்பட்டு நீரிலிருந்து வெப்பம் வெளியேறுவது அனுமதிக்கிறது.
 II.எனவே நீரின் மேற்பரப்பு மட்டுமே குளிர்ச்சி அடைந்து பனிக்கட்டியாக மாறுகின்றது.

A. I  மட்டும் சரி
B. II மட்டும் சரி
C. இரண்டும் சரி
D. இரண்டும் இல்லை

80. ஒரு காலன் என்பது?

A. 2.378 லிட்டர்
B. 3.786 லிட்டர்
C. 3.785 லிட்டர்
D. 2.785 லிட்டர்

81. சிமெண்டின் கெட்டிப்படும் நேரத்தை தாமதமாக்குவது எது?

A. எப்சம்
B. பாரிசாந்து
C. களிமண்
D. ஜிப்சம்

82. தவறான கூற்றை கண்டறிக.

 I.காரை என்பது சிமெண்டும் மணலும் நீருடன் கலந்த கலவையாகும்.
 II.கற்காரை என்பது சிமெண்ட், மணல், ஜல்லிக்கற்கள், நீர் சேர்ந்த கலவையாகும்

A. I மட்டும்
B. II மட்டும்
C. இரண்டும்
D. இரண்டுமில்லை

83. அறுவை சிகிச்சையில் கிருமிநாசினியாக உபயோகிக்கப்படுகிறது?

 A. பென்சின்
 B. ஈதர்
 C. பீனால்
 D  எத்தனால்

84. கரும்பினை நாம் பயிரிடும் பொழுது அது  அதிகளவு  எந்த சக்தியினை மண்ணிலிருந்து எடுத்துக் கொள்கிறது?

 A. நைட்ரஜன்
 B. சல்பர்
 C. பாஸ்பரஸ்
 D. பொட்டாசியம்

85. கடல் பயணங்களில் திசையினை அறிய காந்தங்களை முதன்முதலாக பயன்படுத்தியவர்கள் ?

A) கிரேக்கர்கள்
B) ரோமானியர்கள்
C) சீனர்கள்
D) பிரெஞ்சுக்காரர்கள்

86. மனித உடலில் நீரின் அளவு ;

எலும்புகள் - 1) 64
நுரையீரல் - 2) 94
நீணநீர்      - 3) 22
தசைகள்   - 4) 80
தோல்        - 5) 75

A) 34215
B) 43215
C) 34251
D) 43512

87. புவியின் மேற்பரப்பு நீரான 0.3 சதவீதத்தில் ஆறுகளில் எத்தனை சதவீத நீர் காணப்படுகிறது ?

A) 11 %
B) 0.2 %
C) 2 %
D) 0.1 %

88.ஆசியாவின் முக்கியமான ஆறுகளில் எத்தனை இமயமலையில் இருந்து பாய்கிறது ?

A) 4
B) 5
C) 8
D) 10

89. கூற்றுகளை ஆராய்க.

I) ஒரு காலன் என்பது 3.857 லிட்டர் ஆகும்.
II) நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் TMC/SEC என்ற அளவில் அளக்கப்படுகின்றது.
III) அணைக்கட்டில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு கன அடி/ விநாடி என்ற அலகால் குறிப்பிடப்படுகிறது .

A) I & III  தவறு
B) I & II  தவறு
C)  II  மட்டும் தவறு
D) அனைத்தும் தவறு

90. Elements of Chemistry என்னும் நூலை லவாய்சியர் வெளியிட்ட ஆண்டு ?

A) 1771
B) 1764
C) 1789
D) 1794

91. வெங்காயத்தை நறுக்கும் போது கண்ணில் எரிச்சலுடன் நீர் வருவதற்கு காரணமான வேதிப்பொருள் ?

A) புரோப்பைல் தயால் S  ஆக்ஸைடு
B) புரோப்பின் தயால் S ஆக்ஸின்
C) பிரோப்பின் தயால் C ஆக்சைன்
D) புரோப்பேன் தயால் S ஆக்ஸைடு

92. சூப்பர் பாஸ்பேட்டில் காணப்படும் நைட்ரஜனின் அளவு ?

A) 0 %
B) 46 %
C) 13%
D) 21 %

93.வில்லியம் ஆஸ்பிடின் என்பவர் சிமெண்டை கண்டுபிடித்த ஆண்டு ?

A) 1824
B) 1924
C) 1825
D) 1935

94. எப்சத்தின் வேதியியல் பெயர் ?

A) கால்சியம் சல்பேட் டை ஹைட்ரேட்
B) கால்சியம் சல்பேட் ஹைட்ரேட்
C) மெக்னீசியம் சல்பேட் 7 ஹைட்ரேட்
D) மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட்

95. தவறானது எது ;

1) எப்சம் - MgSO4 2H2O
2) ஜிப்சம் - CaSO4 2H2O
3) பாரீஸ் சாந்து - CaSo4 1/2 H2O
4) பீனால் - C6H5OH

96. எப்சத்தின் பயன்களில் தவறானது ;

A) மனிதனின் மன அழுத்தத்தை குறைக்கவும் அமைதிப்படுத்தவும் பயன்படுகிறது.
B) அறுவைச் சிகிச்சையில் எழும்பு முறிவுகளைச் சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது.
C) தோல்நோய் தீர்க்கும் களிம்புகளில் பயன்படுகிறது.
D) விவசாயத்தில் தாவரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கப் பயன்படுகிறது.

97. இந்தியாவில் ஒவ்வொருவரும் உருவாக்கும் கழிவுகளின் சராசரி அளவு ?

A) 2800 kg
B) 0.45 kg
C) 352 kg
D) 45 kg

98.தாவரங்களை உண்பவை ?

A) முதல்நிலை நுகர்வோர்
B) இரண்டாம்நிலை நுகர்வோர்
C) பிறசார்பு ஊட்ட உயிரிகள்
D) தற்சார்பு ஊட்ட உயிரிகள்

99.உலகளவில் கனிகள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி இந்தியாவின் இடம் ?

A) நான்காம்
B) மூன்றாம்
C) இரண்டாம்
D) முதலாம்

100. இந்திய சணல் உற்பத்தியில் எத்தனை விழுக்காடு மே.வங்கத்தில் உற்பத்தியாகிறது ?

A) நாற்பது
B) ஐம்பது
C) அறுபது
D) எழுபது

விடைகளைக் காண
Click here to view Answer
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY