Ads Right Header

தமிழக தொழில்துறை - தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்!



தொழில்துறை

சென்னை , இந்தியாவின் மருத்துவத் தலைநகரம் எனவும் , வங்கித் தலைநகரம் எனவும் அழைக்கப்படுகிறது இது உலக வங்கி மற்றும்பன்னாட்டு நிதிநிறுவனங்களிலிருந்து அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளது.

இது ஆசியாவின் டெட்ராய்ட் எனவும் அழைக்கப்படுகிறது . தமிழ்நாட்டில் ஏறக்குறைய 110 தொழிற் பூங்காக்கள் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளோடு செயல்பட்டு வருகின்றன.

மேலும் தமிழக அரசு இரப்பர் பூங்கா , ஆயத்த ஆடைகள் பூங்கா , பூக்கள் பூங்கா , உயிரி தொழில்நுட்பப் பூங்கா , சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் வேளாண் ஏற்றுமதிப் பூங்கா போன்ற பல துறைகளையும் முன்னேற்றியுள்ளது . மாநிலத்தின் பெரிய அளவிலான பொறியியல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மையமிட்டுள்ளன .

சென்னை பன்னாட்டு அளவில் கார் உற்பத்தி ஜாம்பவான்களின் நகரமாக உள்ளது . பேருந்து கட்டுமானத் தொழிலுக்குப் பெயர் பெற்ற கரூர் , தென்னிந்திய பேருந்து கட்டுமானத் தொழிலுக்கான பங்களிப்பில் 80 % மாக உள்ளது . கரூரில் உள்ள தமிழ்நாடு காதித உற்பத்தி நிறுவனம் ஆசியாவிலேயே மிகப் பெரிய சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத காகித நிறுவனங்களுள் ஒன்றாக செயல்பட்டு வருகிறது.

எஃகு நகரம் என்றழைக்கப்படும் சேலத்தில் பல பெரிய ஜவ்வரிசி தயாரிப்பு நிறுவனங்களும் கனிமச் செல்வங்களும் உள்ளன .

சிவகாசியில் அச்சுத் தொழில் , பட்டாசு நிறுவனங்கள் , தீப்பெட்டித் தயாரிப்பில் முன்னோடியாக உள்ளது , இந்தியாவின்மொத்தத் தீப்பெட்டி உற்பத்தியில் 90 % பங்கும் சிவகாசியில் உற்பத்தியாகிறது .

தமிழகத்தின் நுழைவாயில் தூத்துக்குடி ஆகும் . சென்னைக்கு அடுத்தபடியாக வேதிப்பொருட்கள் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

 ஜவுளித்துறை

தமிழ்நாடு இந்தியாவின் மிகப் பெரிய ஜவுளி உற்பத்தி மையமாகும் . தமிழ்நாடு இந்தியாவின் நூல் கிண்ணம் என அழைக்கப்படுகிறது . இந்திய அளவில் மொத்த உற்பத்தியில் 41 சதவீத நூல் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன .

இந்தியாவின் பொருளாதாரத்தில் ஜவுளித்துறை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது , 35 மில்லியன் மக்களுக்கு நோடி வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
4 % பங்களிப்பையும் , மொத்த ஏற்றுமதி வருவாயில் 35 % ஜவுளித் துறையிலிருந்து கிடைக்கிறது .

உற்பத்தித்துறையில் 14 % பங்களிப்பு ஜவுளித்துறை மூலமாக கிடைக்கப் பெறுகிறது , நூல் நூற்பிலிருந்து ஆடைத் தயாரிப்பு ஜவுளிகளுக்கான உற்பத்தித் தொடர்புடைய அனைத்து வசதிகளும் தமிழ்நாட்டில் உள்ளன .

 தமிழ்நாட்டின் மேற்குப் பகுதிகளான கோயம்புத்தூர் , திருப்பூர் , ஈரோடு , திண்டுக்கல் மற்றும் கரூர் போன்ற மாவட்டங்களில் தமிழ்நாடு , மகாராஷ்டிரா நூற்பாலைகளில் பயன்படுத்தப்படும் பருத்தி பாலியஸ்டர் கலப்பு நூல் , பட்டு நூல் உற்பத்தி செய்யும் ஆலைகள் பெருமளவில் அமைந்துள்ளன.

 இங்கிருந்து சீனா வங்கதேசம் போன்ற பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது . பின்னலாடைகளின் நகரம் ' என அழைக்கப்படும் திருப்பூர் 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பளவில் பின்னலாடைகளை ஏற்றுமதி செய்கிறது . திரைச் சீலைகள் , படுக்கை விரிப்புகள் , சமையலறை விரிப்புகள் , கழிவறை விரிப்புகள் , மேஜை விரிப்புகள் , சுவர் அலங்காரங்கள் போன்ற உள்நாட்டுத் தயாரிப்புகள் மற்றும் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது .

ஈரோடு மாவட்டம் தென்னிந்தியாவின் மொத்த மற்றும் சில்லறை ஆயத்த ஆடைகளுக்கான முக்கிய ஜவுளி சந்தையாக உள்ளது .

தோல்பொருட்கள்

இந்தியாவின் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 30 % - யும் , தோல் பொருட்கள் தயாரிப்பில் 70 சதவீதத்தையும் தமிழகம் கொண்டுள்ளது . நூற்றுக்கணக்கான தோல் பொருட்கள் மற்றும் பதனிடும் தொழிற்சாலைகள் வேலூர் , திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அமைந்துள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டு தோல் பொருட்கள் கண்காட்சி சென்னையில் நடைபெறுகிறது .

மின்னணு சாதனங்கள்

மின்னணு சாதனங்கள் உற்பத்தியானது தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாக உள்ளது . பல பன்னாட்டு நிறுவனங்கள் , தெற்காசியாவின் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மையமாக சென்னையைத் தேர்ந்தெடுத்துள்ளன.

வாகன உற்பத்தி

ஆசியாவின் டெட்ராய்ட் ' என்றழைக்கப்படும் சென்னை மிகப்பெரிய அளவிலான வாகன உதிரி பாகங்கள் தயாரிப்புக்கான இடமாக விளங்குகிறது . தமிழ்நாடு , இந்திய அளவில் வாகன மற்றும் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியில் 28 சதவீதமும் , லாரிகளுக்கான உற்பத்தியில் 19 சதவீதமும் , பயணியர் கார் மற்றும் இருசக்கர வாகன உற்பத்தியில் 18 சதவீதமும் கொண்டுள்ளது .

சிமெண்ட் தொழிற்சாலை

சிமெண்ட் உற்பத்தியில் தமிழ்நாடு இந்திய அளவில் 3 இடத்தில் உள்ளது (ஆந்திர பிரதேசம் - முதலிடம் ராஜஸ்தான் - இரண்டாமிடம் ) . 2018 - ல் இந்தியாவில் உள்ள 10 மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சார்ந்த ராம்கோ சிமெண்ட் மற்றும் இந்தியா சிமெண்ட் ஆகிய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன .

மொத்த சிமெண்ட் தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் 21 அலகுகளுடன் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் , 35 அலகுடன் ஆந்திர பிரதேசம் முதலிடத்திலும் உள்ளது .

பட்டாசுப் பொருட்கள்

சிவகாசி நகரம் அச்சுத் தொழில் , பட்டாசுப் பொருட்கள் மற்றும் தீப்பெட்டி உற்பத்தியில் தலைமையாகச் செயல்படுகிறது . ஜவஹர்லால் நேரு அவர்களால் குட்டி ஜப்பான் ' என்று சிவகாசி அழைக்கப்பட்டது ,

இந்திய பட்டாசு உற்பத்தியில் 88 % சிவகாசியில் தயாரிக்கப்படுகிறது . இந்தியாவின் அச்சுத் துறைத் தீர்வுகளில் 60 % சிவகாசியிலிருந்தே பெறப்படுகிறது . பிறதொழிற்சாலைகள் உலக அளவில் மின்பொருட்கள் தயாரிப்பில் மிகப் பெரிய ஒன்றான BHEL நிறுவனம் திருச்சி மற்றும் ராணிப்பேட்டையில் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது.

 கரூரில் அமைந்துள்ள தமிழக அரசின் தமிழ்நாடு காதிதத் தயாரிப்பு நிறுவனம் உலகின் மிகப் பெரிய காகிதத் தயாரிப்பு நிறுவனமாகும் ,

இந்தியாவின் சிமெண்ட் உற்பத்தியில் அரியலூர் , விருதுநகர் , கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் தயாரிப்பு நிறுவனங்களைக் கொண்டு தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது .

சேலத்தைச்சுற்றியுள்ள பகுதிகள் செழிப்பான கனிமவளம் கொண்டுள்ளன . இந்தியாவின் மிகப் பெரிய எஃகு உருக்காலை நிறுவனமான SAIL தனது எஃகு ஆலையை சேலத்தில் நிறுவியுள்ளது . இந்தியாவின் மோட்டார் மற்றும் பம்புகளுக்கான தேவையில் மூன்றில் இரண்டு பங்கினை வழங்குவதால் கோயம்புத்தூர் ' காற்றமுத்த விசைக் குழாய் நகரம்
' ( Pump City ) என்றழைக்கப்படுகிறது .

 தங்க ஆபரணங்கள் , மாவு அரைப்பான் இயந்திரம் மற்றும் வாகன உதிரிப்பாகம் ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகிப்பதால் " கோயம்புத்தூர் மாவு அரைப்பான் இயந்திரத்திற்கான புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது.

தூத்துக்குடி தமிழ்நாட்டின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படுகிறது , மாநிலத்தில் வேதிப்பொருள் உற்பத்தியில் தூத்துக்குடி முதலிடம் வகிக்கிறது . இந்திய உப்பு உற்பத்தியில் 30 சதவீ மும் , மாநிலத்தின் உப்பு உற்பத்தியில் 70 ) சதவீதமும் தூத்துக்குடியில் உற்பத்தியாகிறது .

குறு சிறு நடுத்தர நிறுவனங்கள்

MSMED - 2006 சட்டத்தின்படி , குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன . குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை , கட்டமைப்பு மற்றும் தளவாடப் பொருட்கள் மீதான முதலீட்டின் அடிப்படையில் ( நிலம் மற்றும் கட்டிடம் நீங்கலாக ) உற்பத்தி நிறுவனம் , பணிகள் நிறுவனம் என வகைப்படுத்தப்படுகின்றன .

குறு , சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் , தமிழ்நாடு 15 . 07 சதவீதத்துடன் தேசியளவில் முதலிடத்தில் உள்ளது . 6 . 89 இலட்சம் பதிவு செய்யப்பட்ட குறு , சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன . இவை 8000 வகையான பொருட்களை 32,008 கோடி ரூபாய் முதலீட்டில் உற்பத்தி செய்கின்றன . இவை அனைத்து துறைகளைச் சார்ந்த பெரும்பாலான பொருட்களை உற்பத்தி செய்கின்றன.

அவற்றுள் முக்கியமானவை பொறியியல் பொருட்கள் , மின் சாதன பொருட்கள் , வேதிப் பொருட்கள் , இரும்பு , காதிதம் , தீப்பெட்டி , நெசவு மற்றும் ஆடைகள் போன்றவையாகும் . ரூபாய்1 , 68 , 331 கோடி முதலீட்டில் , பதிவு செய்யப்பட்ட 15 . 61 இலட்சம் தொழிலமுனைவோருடன் 99 . 7 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்குகிறது .

 ஆதாரம் - MSME திட்ட குறிப்பு 2017 - 18.

Whatsapp ல் இணைந்திட
Click here to joint group 09

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY