Ads Right Header

8th Term1 - அறிவியல் & சமூக அறிவியல் 50 + 50 வினாக்களும், விடைகளும்!


1. உயிரினங்கள் தங்கள் வாழ்வை நிலைப்படுத்திக் கொள்ள நடத்தும் மொத்த வேதிவினைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A. உடற்செயலியல்
B. வளர்ச்சிதை மாற்றம்🌺
C  திசுக்கள் ஒருங்கமைப்பு
D. சுவாசச் செயலியல்

2. மார்பையும் வயிற்றையும் பிரிக்கும் தசை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A.ஹோமியோவிலிக்ஸ்
B. நுண்ணறைகள்
C. ப்ளூரா
D. உதரவிதானம்🌺

3.  உட்சுவாசம் மற்றும் வெளிசுவாசம் ஆகியவற்றில் பொருந்தாத தேர்ந்தெடு.
 I.உட்சுவாசத்தின் போது விலா எலும்புகள் கீழ் நோக்கி நகர்கின்றன
 II.உட்சுவாசத்தின் போது மார்பறையின் கொள்ளளவு குறைகிறது.
III. வெளிச் சுவாசத்தின் போது உதரவிதான தசைகள் மீட்சி அடைகின்றன.

A. I மற்றும் II🌺
B.I மற்றும் III
C.III மட்டும்
D.II மட்டும்

4. கருமுட்டையானது தொடர்ச்சியான பல ------------- பிளவுறுதல்களை அடைந்து வெவ்வேறு அளவு , வடிவம் மற்றும் உட்பொருட்களை கொண்ட திரள் செல்களாலான கருவை உருவாக்குகிறது.

A. மைட்டாசிஸ்🌺
B. மியாசிஸ்
C. ஏமைட்டாசிஸ்
D. சைகோட்

5. இரு வித்திலை தாவரங்களில் மகரந்த சேர்க்கை பொதுவாக----------- மூலம் நடைபெறும்?

A. காற்று
B. பூச்சியின்🌺
C. பறவை
D. நீர்

6. இவை மிக அதிகமான குளிர் மற்றும் வெப்பம் இல்லாத அனைத்து இடங்களிலும் வளரக்கூடியவை?

 A.ஆஞ்சியோஸ்பெர்ம்🌺
 B.ஜிம்னோஸ்பெர்ம்
 C.டெரிடோபைட்டுகள்
 D.பிரையோபைட்டா

7. கீழ்க்கண்ட எந்த தாவரத்தில் சூலானது மூடி எதுவுமில்லாமல் பூவைப்போன்ற தண்டு தொகுப்பில் இருக்கும்?

 A.பைனஸ்
 B.நீட்டம்🌺
 C.ஜிங்கோ பைலோபா
 D.சைக்கஸ்

8. ஜிம்னோஸ்பெர்ம் தாவர தொகுப்பில் ஒரே வாழும் தாவரம் என்று அழைக்கப்படுவது எது?

 A.சைக்கஸ்
 B.ஜிங்கோ பைலோபா🎈
 C.பைனஸ் ஜெரார்டியானா
 D.ஆராவ்கேரியா பிட்வில்லி

9. ரிக்ஸியா என்னும் தாவரம் கீழ்கண்ட எந்த தாவர குடும்பத்தை சேர்ந்தது?

 A.பிரையோபைட்டா🌺
 B.டெரிடோ ஃபைட்
 C.ஜிம்னோஸ்பெர்ம்
 D.ஆஞ்சியோஸ்பெர்ம்

10.மைக்கோஸ்போரம் ஃபர்பர் எனும் பூஞ்சை கீழ்கண்ட எந்த நோய்க்கு காரணமாகிறது ?

 A.பொடுகு🎈
 B.கால் பாதத்தில் நோய் தொற்று
 C.கிளாவிசெப்ஸ் பர்பூரியா
 D.ஆஸ்பியோ கோஸ்பீ

11.பொருத்துக.

  நிறமியின்வகை   -   தாவரம்
 a.பைக்கோசயனின் 1.கிளாமிடோமோனாஸ்
 b.பியுகோசாந்தின்.   2.ஆசிலட்டோரியா
 c.பைக்கோஎரித்ரின் 3.லேமினேரியா
 d.பச்சையம்.                4.பாலிஸைபோனியா

A.2431
B.2413
C.2314
D.2341🎈

12. ஜெனிரா பிளான்டாரம் என்னும் நூலின் ஆசிரியர்?

 A.கரோலஸ் லின்னேயஸ்
 B.பெந்தம் மற்றும் ஹூக்கர்🌺
 C.காஸ்பட் பாஹின்
 D.சார்லஸ் டார்வின்

13. குழந்தை பருவத்தில் உண்டாகும் மலச்சிக்கலை குணப்படுத்த பயன்படுவது?

A. பைபிடோ பாக்டீரியம் பைப்பிடம்
B. லாக்டோபசில்லுஸ் அசிடோஃபிலுஸ்
C. பைபிடோ பாக்டீரியம் பிரிவே🎈
D. லூக்கோ நாஸ்டாக்

14. புரதத்தால் ஆன தொற்றுகள் எந்த வார்த்தையிலிருந்து பெறப்பட்டது?

 A.ஹைப்பா
 B.கேப்ஸிட்
 C.பிரியான்🌺
 D.விரியான்

15.FMD  தடுப்பூசி மூலம் விலங்குகளுக்கு நோய் ஏற்படுவதை கட்டுப்படுத்தப்படும் நோய் எது?

A.குயிட்ஸ்பெல்ட் ஜேக்கப் நோய்
B. வாய் மற்றும் கால் குளம்பு நோய்🎈
C. ஆந்த்ராக்ஸ்
D. பைட்டோபைத்தோரா இன்பெஸ்டன்ஸ்

16. I.மூளையின் அமைப்பு அல்லது நரம்பு திசுக்களை பாதிக்கும்.
      II.குரு -ஊன் உண்ணிகளுடன்   தொடர்புடையது.
 இது கீழ்கண்ட எந்த நோயின் அறிகுறி.

A. சிபிலிஸ்
B. கருமை கூட்டு நினைவு குறைபாட்டு நோய்(SCID)
C.குயிட்ஸ்பெல்ட் ஜேக்கப் நோய்🎈
C. ஹன்டிங்டன் கொரியா

17. சுண்டெலிகளில் பாக்டீரியா தொற்றினை குணமாக்க பயன்படுத்தப்பட்ட எதிர் உயிர்க்கொல்லி எது?

A. சூடோமோனாஸ்
B. பெனிசிலியம் கிரைசோஜீனம்
C. சூடோயுரிடிமைசின்🎈
C. ஸ்ட்ரெப்டோமைசின்

18.மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தளங்கள் ஒரு பொதுவான புள்ளியில் வெட்டிக் கொள்வதால் உருவாவது?

A. ஒளிச்செறிவு
B. திண்மக் கோணம்🎈
C. தளக்கோணம்
D. கூம்பு

19. ஒவ்வொரு அளவீட்டின் போது கிடைக்கப்பெறும் மதிப்புகளில் சில நிலையற்ற தன்மை மதிப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A. தோராயமற்றது
B.துல்லியமற்றது
C.முழுமையற்றதன்மை
D.பிழை🎈

20. அணுக் கடிகாரங்களின் துல்லிய தன்மையானது கீழ்கண்ட எந்த அளவில் இருக்கும்?

A.10³  வினாடிக்கு ஒரு வினாடி
B.10⁶ வினாடிக்கு ஒரு வினாடி
C.10⁹ வினாடிக்கு ஒரு வினாடி
D.10¹³ வினாடிக்கு ஒரு வினாடி🎈

21. வாகனங்களில் உள்ள தடை அமைப்பு கீழ்கண்ட எந்த விதியின் அடிப்படையில் செயல்படுகிறது?

A.ஜெட் தத்துவம்
B. பரப்பு இழுவிசை
C. ஆர்க்கிமிடிஸ் தத்துவம்
D. பாஸ்கல் விதி🎈

22.பாகுநிலையின் SI அலகு?

A. Nsm⁻²🎈
B.Kgm⁻¹s⁻¹
C.பாய்ஸ்
D.Kg⁻¹ms⁻²

23. சார்பியக்கத்திலுள்ள பரப்புகளில் ஒழுங்கற்ற தன்மையால் உருவாக்கப்படும் விசை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 A.மிதப்பு விசை
 B.உந்துவிசை
 C.உராய்வு விசை🎈
 D.பரப்பு இழுவிசை

24. வளைவு மையம் கீழ்கண்ட எந்த எழுத்தில் கதிர் வரைபடங்களில் குறிப்பிடப்படுகிறது?

A. C🎈
B. R
C. P
D. F

25. கோளக ஆடி ஒன்றின் குவியத்தொலைவு 4 செ.மீ எனில் ஆடியின் வளைவு ஆரம் என்ன?

A. 8cm🎈
B. 2cm
C.16cm
D 12cm

26. எதிரொலிக்கும் தொலைநோக்கிகளில் பயன்படுத்தப்படும் ஆடி எது?

A. வளைவு ஆடி
B. சமதள ஆடி
C. குவி ஆடி
D. குழியாடி🎈

27. குழி ஆடியில் பிம்பத்தின் நிலை ஆடிக்கு பின்னால் இருக்கும் பொழுது பொருளின் நிலை என்னவாக இருக்கும்?

A. ஈறிலாத் தொலைவில்
B. C-க்கு அப்பால்
C.C- க்கும் F- க்கும் இடையில்
D.F- க்கும் P- க்கும் இடையில்🎈

28.  குழி ஆடியில் நேரான மாயபிம்பம் உருவாக பொருளின் நிலை என்னவாக இருக்கவேண்டும்?

A. C-க்கும் F-க்கும் இடையில்
B. F-இல்
C. F-க்கும் P-க்கும் இடையில்🎈
D. C-க்கு அப்பால்

29.செல்:
1.செல் என்பது உயிரினங்களின் அமைப்பு
மற்றும் செயல் அலகு ஆகும்.
2.செல்கள் பொதுவாக
‘உயிரினங்களின் கட்டுமானக் கற்கள்’
எனப்படுகின்றன.
3.செல்களைப் பற்றிய படிப்பு
செல்லியல்எனப்படும்.
சரியானவை எவை?

A. 2,3
B.1,2,3
C.1,2🎈
D.2 மட்டும்

30.கூற்று:1
மூலச் செல்கள்  உடலில்
பாதிப்படைந்த திசுக்களை குணப்படுத்த அல்லது மாற்றி அமைக்க உதவுகின்றன .
கூற்று :2
மனித உடலின் உள்ளேயே அமைந்த, சரிசெய்யும்
அமைப்பாக மூலச் செல்கள் கருதப்படுகின்றன.
காரணம்:
மூலச்செல் தோல், செல், தசைச் செல் அல்லது நரம்பு செல் போன்ற எந்த வகை செல்லாகவும்
மாறுபாடடையும் தன்மை கொண்டது. இவை மிக நுண்ணிய செல்கள் ஆகும்.

A.கூற்று 1 ,காரணம் சரி;
கூற்று 2 தவறு
B.கூற்று 1,கூற்று 2 சரி;
காரணம் சரி🎈
C. கூற்று 2 ,காரணம் சரி;
கூற்று 1  தவறு
D.கூற்று 1,கூற்று 2  சரி;
காரணம் தவறு

31.பொருத்துக.
a.எபிதீலியல் திசுக்கள் 1.நரம்புத் தூண்டல்களைக்
கடத்துதல்
b.இணைப்புத் திசுக்கள் 2.அசைவு மற்றும்
இடப்பெயர்ச்சி
c.தசை திசுக்கள் 3.பாதுகாப்பிற்கு
d.நரம்புத் திசுக்கள் 4.உடலின்
வெவ்வேறு அமைப்புகளை இணைத்தல்

A. 4 3 2 1
B.1 4 3 2
C.3 4 2 1🎈
D.1 2 3 4

32.மனிதக் கண்ணால்
வேறுபடுத்திப் பார்க்க இயலும் நிறங்களின் எண்ணிக்கை?

A.8 மில்லியன்  முதல்  15 மில்லியன் வரை
B.18 மில்லியன்  முதல்  22 மில்லியன் வரை
C.10 மில்லியன்  முதல்  12 மில்லியன் வரை🎈
D.5 மில்லியன்  முதல்  8 மில்லியன்

33."கிளாவிசெபஸ்  பர்பூரியா" என்றபூஞ்ஞையானது
அதி்க அளவு இது இளைஞர்களிடத்தில் எவ்வகையிலும் பாதிப்பை  ஏற்படுத்துகிறது?

A.மன அழுத்தம் மந்தநிலை
B.கனவுலகில் மதிப்பது 🎈
C. தனிமையில் இருப்பது
D.ஆழ்ந்த சிந்தனை

34.பொருத்துக:
அ)உணவு செரிக்க-1)குளோரெல்லா
ஆ)தயிர் தயாரிக்க-2)லாக்டோ பேசில்லஸ்
அசிட்டோஃபிலஸ்
இ)ரொட்டி தயாரிப்பு-3)சூடோமோனாஸ் ஏருஜினோஸா
ஈ)லினேன் நூல் இழைகள்-4)லேக்டோ பேசில்லஸ்

A.2 4 1 3🎈
B.4 2 3 1
C.1 3 4 2
D.3 1 2 4

35.பொருத்துக.
அ) சிலியேட்டா--1)அமீபா
ஆ)பிளாஜெல்லேட்டா--
2)பிளாஸ்மோடியம்
இ)சூடோபோடியா--3)பாரமீசியம்
ஈ) ஸ்போரோசோவா--
4)யூக்ளினா

A)1 2 3 4
B)2 3 4 1
C)3 4 1 2🎈
D)4 2 3 1

36.கூற்று:
ஆப்பிள்களும் வேறு சில பழங்களும் நறுக்கி வைத்த பிறகு பழுப்பு நிறத்தை அடைகின்றன. இந்நிகழ்வு பழுப்பாதல் எனப்படும்
காரணம்:1
பழங்களில் உள்ள செல்கள் பாலிபீனால்
ஆக்சிடேஸ் அல்லது
டைரோசினேஸ் என்ற
என்சைமைக்கொண்டுள்ளன.
காரணம் :2
மெலனின் எனப்படும் நிறமிகள் காற்றில் உள்ள நைட்ரஜனுடன் தொடர்புக்கு வரும் பொழுது பழங்களிலுள்ள பீனாலிக் சேர்மங்களை பழுப்பு நிறமிகளாக மாறச் செய்கின்றன.

A.கூற்று சரி;காரணம் :1 சரி ;காரணம் :2 சரி
B.கூற்று சரி, காரணங்களும் சரி.கூற்றுக்கான காரணங்களும் சரி
C. கூற்று சரி;காரணம் :1 சரி;காரணம் :2 தவறு🎈
D.கூற்று தவறு; காரணங்கள் சரி.

37.
1)என்சைம்கள் மற்றும் ஈஸ்ட்டுகள் உயிரி வினைவேகமாற்றிகள் எனப்படுகின்றன
2)முட்டைகள் அழுகும்பொழுது
ஹைட்ரஜன் குளோரைடு வாயு உருவாவதால் துர்நாற்றம்
வீசுகிறது.
3)பிரைன்’ எனப்படும் அடர் சோடியம் குளோரைடு கரைசல் வழியே மின்சாரத்தைச்
செலுத்தும்பொழுது குளோரின், ஹுலியம்
வாயுக்கள் வெளிவருகின்றன.
சரியானவை:

A)1 மட்டும்🎈
B)2 மட்டும்
C)3 மட்டும்
D)அனைத்தும்

38.பொருத்துக.
அ) தாமிர சல்பேட் --1)பச்சைத் துத்தம்
ஆ) இரும்பு சல்பேட்--
2)மயில் துத்தம்
இ) பொட்டாசியம்
நைட்ரேட்--3) மூரியேட் ஆஃப் பொட்டாஷ்
ஈ) போட்டாசியம்
குளோரைடு--
4)சால்ட்பீட்டர்

A. 3 1 3 4
B. 2 1 4 3🎈
C. 4 3 1 2
D. 1 3 2 4

39. கூற்று: ஒரு இரும்பு ஆணியை காப்பர் சல்பேட் கரைசலில் வைக்கும்பொழுது காப்பர் சல்பேட் கரைசலின் நீல நிறம் மெதுவாக பச்சை நிறத்திற்கு மாறுகிறது.
 காரணம்: ஏனெனில் இரும்பு காப்பர் சல்பேட் கரைசலுடன் வேதிவினை குறிப்பிடுகிறது.

A. கூற்று சரி காரணம் சரி🎈
B. கூற்று சரி காரணம் தவறு
C. கூற்று தவறு காரணம் சரி
D. கூற்று காரணம் இரண்டும் தவறு

40. சரியானதை கண்டறிக

1.செறிவடைந்த நிலத்தடி நீர் மண்டலத்திலிருந்து நீர் பாதை வழியாக நிலத்தடி நீராக ஓடுவதே அடிமட்ட நீர் ஓட்டம்.
2.நிலத்தடி நீர்மட்டத்தை விட நீர் பாதையின் உயரம் குறைவாக உள்ள பகுதியில் மட்டுமே இது காணப்படும்
3.இவை வறண்ட மழையற்ற காலங்களில் நிலத்தடி நீரால் நீரூட்டப்படுகிறது.

A. 1மற்றும்2சரி
B.1மற்றும்3சரி
C. 2மற்றும்3சரி
D. அனைத்தும் சரி🎈

41) மண்ணால் உறிஞ்சப்படும் மழைநீரின் சதவீதம்?

A. 60%
B.65%🎈
C.71%
D.72%

42. மேகங்களின் காணப்படும் நீர்த்துளிகளின் அளவு?

A. 1 மைக்ரான் to 100 மைக்ரான்
B. 2 மைக்ரான் to 100 மைக்ரான்🎈
C. 5 மைக்ரான் to 100 மைக்ரான்
D. 10 மைக்ரான் to 100 மைக்ரான்

43. பூமியில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை(பாரன்ஹீட்)?

A)143°F
B)134°F🎈
C) 142°F
D)124°F

44. சரியானதை கண்டறிக.
1.வெப்ப உருமாற்றத்தினால் கிரானைட் பாறை நைஸ் பாறையாக மாறுகிறது
2.இயக்க உருமாற்றத்தினால் கருங்கல் பாறை பலகை பாறையாக உருமாருகிறது

A) 1 மட்டும் சரி
B)2மட்டும் சரி
C) இரண்டுமே சரி
D) இரண்டுமே தவறு🎈

45. இதன் கண்டுபிடிப்பு பணத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய நிலையாக கருதப்பட்டது?

 A.உலோக பணம்
 B.காகித பணம்🎈
 C.பண்டப் பணம்
 D.கடன் பணம் அல்லது வங்கி பணம்

46.  தவறானதை தேர்ந்தெடு.
 I.துளையிட்ட நாணயங்கள்- மௌரியர்கள்
 II.சித்திரங்கள் பொறிக்கப்பட்ட நாணயங்கள்-    இந்திய கிரேக்க குஷானர்கள்
 III. மதிப்பு குறைந்த நாணயங்கள்-டாங்கா
 IV. 40 தாமிரத் துண்டுகள்- ஷெர்ஷா சூரி

A. III மட்டும்🎈
B.II மட்டும்
C.III மற்றும் IV
D.IV மட்டும்

47. இந்தியாவில் கிமு ஆறாம் நூற்றாண்டில் முதன் முறையாக மகாஜனபதங்கள் ஆட்சியில் அச்சடிக்கப்பட்ட நாணயங்களில் பொருந்தாதது எது?

 A.ஷர்ப்ப பூரணம்🎈
 B.கர்ஷபணம்
 C.பனாஸ்
 D பூரணாஸ்

48. முகலாயப் பேரரசர் பாருக்ஷாயர் ஆங்கிலேயர்களுக்கு முகலாய பண நாணயத்தை பம்பாய் அச்சகத்தில் அச்சடிக்க அனுமதி அளித்த ஆண்டு?

A.1718
B.1716
C.1717🎈
D.1718

49. ஆங்கிலதங்க நாணயங்கள் பெயர்கள்
               a. தங்கம்.           1.ஏஞ்ஜேலினா
               b. வெள்ளி.        2. கரோலினா
               c. செம்பு.            3. டின்னி
               d. வெண்கலம். 4.கப்ரூன்
A.4123
B.4321
C.2134
D.2143🎈

50. I.பணம் என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையான மொனேட்டா ஜுனோ  விலிருந்து பெறப்பட்டது.
  II.இந்தியாவின் ரூபாய் என்ற சொல் சமஸ்கிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
 தவறானது தேர்ந்தெடு.

A. I மட்டும்🎈
B.II மட்டும்
C  இரண்டும்
D. இரண்டும் இல்லை

51.PIO  முறை இந்திய அரசால் திரும்பப் பெறப்பட்டு  OCI முறையுடன் இணைக்கப்பட்ட ஆண்டு?

A.2015 ஜனவரி 5
B.2015  ஜனவரி 9🎈
C.2014  ஜனவரி 5
D. 2014  ஜனவரி 9

52. I.பூர்வீகம் பிறப்பு மற்றும் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நாட்டினர் இயல்பாக பெறும் நிலை குடியுரிமை எனப்படும்.
  II.சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு ஒரு நாட்டு அரசாங்கத்தால் தனி ஒருவருக்கு வழங்கப்படுவது நாட்டுரிமை எனப்படும்.
 III.ஒருவர் தனது நாட்டுரிமையை மாற்ற முடியாது. ஆனால் தனது குடியுரிமையை மாற்ற முடியும்.
 சரியானதை தேர்ந்தெடு.

A.I மட்டும்
B. III  மட்டும்
C. I மற்றும் II
D. எதுவுமில்லை🎈

53. இந்திய குடிமகனை திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் விண்ணப்பிக்கும் முன் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்?

A. 5 ஆண்டுகள்
B. 6 ஆண்டுகள்
C. 7 ஆண்டுகள்🎈
D. 4 ஆண்டுகள்

54.  கூற்று: 1963 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி இந்திய யூனியனுடன் இணைந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் இந்திய குடிமக்களாகினர்
 காரணம்: 1955 இந்திய குடியுரிமை சட்டத்தின் படி பிரதேசங்களை இணைத்தல் என்பதன் அடிப்படையில் அவர்கள் இந்திய குடிமக்களாகினர்.

A. காரணம் கூட்டத்திற்கான சரியான விளக்கம்
B. காரணம் தவறு
C. காரணம் கூற்று இரண்டும் தவறு
D. கூற்று தவறு ஆனால் காரணம் சரி🎈

55. கீழ்க்கண்டவர்களுள் பாளையக்காரர் கூட்டமைப்பில் போர் தொடங்கியதில் பொருந்தாதவர் யார்?

A. மருது சகோதரர்கள்
B. கோபால நாயக்கர்
C. கேரள வர்மன்
D. திப்பு சுல்தான்🎈

56. வேலூர் கலகத்தின் போது பணி நீக்கம் செய்யப்பட்ட ஆளுநர் யார்?

A.ஜாக்சன் துரை
B.கர்னல் கில்லெஸ்பி
C.வில்லியம் காவெண்டிஷ்🎈
D.எட்வர்ட் கிளைவ்

57. I.வேலூர் கலகத்தின் முடிவில் புதிய முறைகள் மற்றும் சீருடை ஒழுங்கு முறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன
    II.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திப்புவின் குடும்பத்தினர் கல்கத்தாவிலிருந்து வேலூருக்கு அனுப்பப்பட்டனர்
 சரியானவற்றை தேர்ந்தெடு.

A. I மட்டும்🎈
B. II மட்டும்
C. I , II இரண்டும்
D. இரண்டும் இல்லை

58. வேலூர் கழகத்தின் தோல்விக்கான  காரணங்களில் தவறானவை  தேர்ந்தெடு.
 I.இந்திய படை வீரர்களை வழிநடத்த சரியான தலைமை இருந்தும் கழகம் மிகச்சரியாக வடிவமைக்கப்படவில்லை.
  II.ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கை இந்தியர்களின் ஒற்றுமையில் பிளவை ஏற்படுத்தியது.

A.I மட்டும்🎈
B.II மட்டும்
C. இரண்டும்
D. இரண்டுமில்லை

59.  1765 இல் ராபர்ட் கிளைவ் வரிவசூலிக்கும் உரிமையை  பெற்ற இடங்களில் பொருந்தாதது எது?

A. வங்காளம்
B. பீகார்
C. கர்நாடகா🎈
D. ஒரிசா

60. கலெக்டர் ஜாக்சன் தவறாக நடந்து கொண்டமைக்காக எட்வர்ட் கிளைவ் யாரை விடுதலை செய்தார்?

A. சிவசுப்பிரமணியம் 🎈
B. ஊமைதுரை
C. மருது சகோதரர்கள்
D. தீரன் சின்னமலை

61. முதல் ஆங்கிலேய  மைசூர் போரின்போது  ஹைதர் அலிக்கு எதிராக இணைந்து போரிட்ட கூட்டணிகளில் பொருந்தாதது?

A. மராத்தியர்கள்
B. முகலாயர்கள்🎈
C. ஹைதராபாத் நிஜாம்
D. ஆங்கிலேயர்கள்

62.I.  டச்சுக்காரர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகு மசூலிப்பட்டினம் என்ற இடத்தில் தங்களது வர்த்தக மையத்தை நிறுவினர்.
    II.புலிகாட்டிலிருந்து வைரங்கள் மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
 தவறானதை தேர்ந்தெடு.

A.I மட்டும்
B.II மட்டும்
C. இரண்டும்
D. இரண்டுமில்லை🎈

63. வாஸ்கோடகாமா மூன்றாவது முறையாக இந்தியா வந்த ஆண்டு?

A.1498
B.1501
C.1524🎈
D.1562

64. 1669 ல் கோல்கொண்டா சுல்தானின் அனுமதிபெற்று பிரான்சின் இரண்டாவது வர்த்தக மையத்தை மசூலிப்பட்டினத்தில் நிறுவியவர்?

A.பிரான்சிஸ் மார்டின்
B.கரோன்
C.மார்காரா🎈
D.நான்காம் கிரிஸ்டியன்

65. கீழ்க்கண்ட எந்த இடத்தில் ஜாப் சார்னாக் என்பவரால்1690 ல் வர்த்தக மையம் நிறுவப்பட்டது?

A.சுதாநுதி🎈
B.காளிகட்டம்
C.கோவிந்தப்பூர்
D.புரோச்சி

76. அலிநகர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டு ஆண்டு?

A.1757 பிப்ரவரி 9🎈
B.1757 ஏப்ரல் 9
C.1757 மார்ச் 9
D.1757 நவம்பர் 9

67. உயர்நீதிமன்ற நீதிபதி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் பகுதிகளை பொருந்தாதவை தேர்ந்தெடு.
 அ.இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
 ஆ. இந்தியாவில் 10 ஆண்டுகாலம் நீதித்துறை அலுவலராக பணியாற்றி இருக்க வேண்டும்
 இ. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் வழக்குரைஞராக குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்  அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
 சரியானதை தேர்ந்தெடு

A.அ மற்றும் ஆ🎈
B. அ மற்றும் இ
C. அ ஆ இ
D. அ மட்டும்

68. மழை வழிவின் கன அளவை அளக்கும் அலகுகள் எது?

 A.ஏக்கர் அடி / கன அடி🎈
 B.கன அடி/ ஏக்கர் அடி
 C.கன அடி/ வினாடி
 D.ஏக்கர் அடி/ அங்குலம்

69. காற்றில் தொங்கு நிலையில் மிதக்கும் நுண்ணிய நீர் துளிகளை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A. மூடுபனி🎈
B. அடர் மூடுபனி
C. உறைபனி
D. மேகங்கள்

70. நீர் மறுசுழற்சி மூன்று முக்கிய நிலைகளில் நடைபெறுகிறது அதில் பொருந்தாதது எது?

A. நீர் ஊடுருவல்🎈
B. ஆவி ஈர்ப்பு
C. மழைப்பொழிவு
D. நீர் வழிந்தோடல்

71. காற்றின் திசையையும் வீசும் காலத்தையும் நிலவரைபடத்தில் குறிக்கும் ஒரு வரைபடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A. மீட்டிரோகிராப்
B. டிரிபில் ரிஜிஸ்டர்
C. அனிமோமீட்டர்
C. விண்ட்ரோஸ்🎈

72. சம காற்றழுத்த மாறுபாட்டுக் கோடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A.ஐசெல்லோபார்🎈
B.ஐசோஹைட்ஸ்
C.ஐசோபார்
D.ஐசோகெல்

73. எரிமலையிலிருந்து வெடித்து வெளியேறும் பாறைக் குழம்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது

 A.லாவா🎈
 B.மாக்மா
 C.தீக்குளம்பு
 D மாக்கல்

74.  தேயிலை , காப்பி போன்ற தோட்டப் பயிர்கள் பயிரிட ஏற்ற மண் எது?

A. கரிசல் மண்
B. மலை மண்
C. சரளை மண்🎈
D. செம்மண்

75. மண்ணரிப்பின் முக்கிய வகைகளில் பொருந்தாத தேர்ந்தெடு.

A. அடுக்கு அரிப்பு
B. வாய்க்கால் அரிப்பு🎈
C. ஓடை அரிப்பு
D. நீர் பள்ள அரிப்பு

76. திணை பயிர்கள் பயிரிட ஏற்ற மண் எது?

A.செம்மண்🎈
B.கரிசல் மண்
C. மலை மண்
D. சரளை மண்

77. உப்பு படர் பாறைகள் என்று அழைக்கப்படுவது எது?

 A.பௌதீக படிவுப் பாறைகள்
 B.உயிரின படிவுப் பாறைகள்
 C.உருமாறிய பாறைகள்
 D.ரசாயன படிவுப் பாறைகள்🎈

78. இடையாழப்பாறைக்கு எடுத்துக்காட்டு எது?

A. கிரானைட்
B. டயரைட்
C. எறும்புக் கல்
D. டொலிரைட்🎈

79.சரியானதை தேர்ந்தெடு.
I. செடிமெண்டரி என்ற சொல் செடிமெண்ட் என்ற லத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டது.
 II.இக்னியஸ் என்ற சொல் இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது
III. பாறையியல் என்ற சொல் கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டது
IV. மெட்டமார்பிக் என்ற வார்த்தை இரண்டு கிரேக்க சொல்லான மெட்டா மற்றும் மார்பா என்ற வார்த்தையில் இருந்து பெறப்பட்டதாகும்.

A. I மற்றும் II
B.I மற்றும் III
C.I, II மற்றும் III
D.I II III IV🎈

80.தமிழ்நாடு ஆவண காப்பகம் பற்றிய கூற்றுகளில் எது தவறானது இல்லை?
 1. பெரும்பாலான ஆவணங்கள் தமிழில் உள்ளன.
2. டச்சுப் பதிவுகளின் காலப்பகுதி1642 to 1845
3. டானிஷ் பதிவுகளின்  காலப்பகுதி1777 to 1845.
4. டாட் வெல் என்பவரின் முயற்சியில் 1917 இல் சென்னை நாட்குறிப்பு பதிவுகள் வெளியிடப்பட்டது.

A.1 4 மட்டும்
B.3 4 மட்டும் 🎈
C.1 2 மட்டும்
D.2 3 மட்டும்

81. போர்ச்சுக்கீசியரின் தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றியவர்?

A.வாஸ்கோடகாமா
B.அல்போன்ஸ் டி அல்புகர்கு
C.பிரான்சிஸ் டி அல்மெய்டா
D.நினோ டி குன்கா🌺

82.கூற்றுகளை கவனி.
1.1556ல் கோவாவில் போர்ச்சுக்கீசியரால்  அச்சியந்திரம் நிறுவப்பட்டது.
2.1563ல் ஓர் இந்திய எழுத்தாளர் "இந்திய மருத்துவ தாவரங்கள்" என்ற நூலை அச்சிட்டு வெளியிட்டார்.

A.1சரி 2தவறு🎈
B.2ம் சரி
C.1தவறு 2சரி
D.2ம் தவறு

83.டச்சு காரர்கள் பற்றிய கூற்றினை ஆராய்க.
1.1605ல் ஆங்கிலேயரிடமிருந்து அம்பெய்னா வை கைப்பற்றினர்.
2. தலைநகர் பழவேற்காட்டில் இருந்து நாகப்பட்டினத்திற்கு 1690 மாற்றப்பட்டது.
3.1623ல் 10ஆங்கில வியாபாரிகள் &9ஜப்பானியர்களை கொன்றனர்
4.1759ல் நடைபெற்ற பெடரா போரில் ஆங்கிலேயர்களால்  தோற்கடிக்கப்பட்டு  அதே  வருடத்தில் முழுமையாக ஆங்கிலேயரிடம் சரணடைந்தனர்.

A.2 4 தவறு
B.3 4 தவறு
C.1 2 தவறு
D.1 4 தவறு 🎈

84. சுதாநுதி, காளிகட்டம், கோவிந்தபூர் ஆகிய மூன்று கிராமங்களின்  ஜமீன்தாரி உரிமையை கிழக்கிந்திய கம்பெனி பெற்ற ஆண்டு?

A.1696
B.1690
C.1698🎈
D.1701

85. பாண்டிச்சேரியில் உள்ள செயின்ட் லூயிஸ் எனப்படும் கோட்டையை கட்டியவர்?

A.பிரான்காய்ஸ் கரோன்
B.பிரான்காய்ஸ் லூயிஸ்
C.பிரான்காய்ஸ் மார்ட்டின் 🎈
D.பிரான்காய்ஸ் டியூப்ளே

86. கிராமத்தை பரம்பரையாக நிர்வகித்து வந்த காவலர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

A.பௌத்ஜாதர்
B. சௌகிதர்கள் 🎈
C. கொத்வால்
D. தரகோ

87. சம்பரான் விவசாயச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?

A. 1918மே 🎈
B. 1918ஜூன்
C. 1918மார்ச்
D. 1918பிப்ரவரி

88. சர்தார் வல்லபாய் பட்டேல் வரிகொடா இயக்கத்தை தொடங்கிய நாள்?

A. பிப்ரவரி 22, 1928
B. பிப்ரவரி 22, 1929
C. பிப்ரவரி 12, 1928🎈
D. பிப்ரவரி 12, 1929

89. ரயத்துவாரி முறை பற்றி தவறானது.
1.1820ல் தாமஸ் மன்றோ &ரீட் என்பவர்களால் அறிமுகம்.
2. இம்முறை மதராஸ் பம்பாய் வங்காளம் கூர்க் பகுதியில் கொண்டுவரப்பட்டது.
3. விவசாயிகள் நிலத்தின் உரிமையாளர்களாக இருந்தனர்.
4. நிலவரி தாமஸ் மன்றோ அவர்களால் மூன்றில் இரண்டு பங்காக குறைக்கப்பட்டது.

A. 3 4 தவறு
B. 2 3 தவறு
C. 1 4 தவறு
D. 2 4 தவறு 🎈

90. ஜமீன்தாரி முறையின் மாற்றியமைக்கப்பட்ட வடிவ முறை முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட வருடம்?.

A. 1822🎈
B. 1820
C. 1893
D. 1833

91.1759 ல் யூசுப் கான் தலைமையிலான ஆற்காடு நவாபின் பூலி தேவரை தோற்கடித்த இடம்?

A. நெற்கட்டும் செவ்வல்
B. அந்தநல்லூர் 🎈
C. சிவகிரி
D. திருநெல்வேலி

92.பொருத்துக.
1.மருது சகோதரர்கள்-1.1799sep 13
2.வீரபாண்டிய கட்ட பொம்மன்-2.1801nov 16
3.ஊமைதுறை செவத்தையா-3.1799 oct16
4.சிவசுப்பிரமணியன்-   4. 1801oct 24.

A. 4231
B. 4123
C. 2341
D. 4321🎈

93.
1.1857 sep 20ல் படைத்தளபதி நிக்கல்சனால் டெல்லி மீண்டும் கைப்பற்ற பட்டது.
2.இரண்டாம் பகதுர்ஷா ரங்குனுக்கு நாடு கடத்தப்பட்டார்.
3.இரண்டாம் பகதுர்ஷா 1862ல் இறந்தார்.
சரியானதை தேர்ந்தெடு.

A. 3தவறு
B. 1 3 தவறு
C. அனைத்தும் சரி🎈
D. 1தவறு

94. பாளையக்காரர் முறை நீக்கப்பட்ட நாள் வருடம்?

A. 1801 ஜூலை 31🎈
B. 1801 ஜூன் 31
C. 1805 ஜூலை 31
D. 1801 ஜூன் 31

95. ஆங்கிலேய ஆட்சியில் இயக்குனர் குழு மற்றும் கட்டுப்பாட்டு வாரியம் நீக்கப்பட்டு இந்திய விவகாரங்களில் மேற்பார்வையிட செயலரின்  தலைமையில் எத்தனை உறுப்பினர் கொண்ட சபை ஏற்படுத்தப்பட்டது?

A. 24
B. 18
C. 8
D. 15🎈

96.பொருந்தாது எது?

A.ஆற்காடு போர்-1751
B.அடையாறுபோர்-1746
C.ஆம்பூர் போர்-1759🎈
D.வந்தவாசி போர்-1760

97. ஆங்கிலேய கூட்டணியில் இருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தை திப்புசுல்தான் தாக்கிய ஆண்டு?

A.1789🎈
B.1790
C.1792
D.1784

98. மங்களூர் உடன்படிக்கை கையெழுத்தான நாள்?

A.1784 ஏப்ரல் 4
B.1784 ஏப்ரல் 7
C.1784 மார்ச் 4
D.1784 மார்ச் 7🎈

99.சரியான கூற்றுகளை காண்க.
1.2வது ஆங்கிலேயே மராத்திய போர் 1803-1806
2.ஆங்கிலேயர்கள் சிந்தியாவுடன் சுர்ஜி அர்ஜுகன் ஒப்பந்தம் செய்தனர்.
3.போன்ஸ்லேவுடன் தியாகன் ஒப்பந்தம் செய்தனர்.
4.இப்போரின் பின்பு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தலையாய சக்தியாக மாறியது.

A.அனைத்தும் சரி
B.234 சரி 🎈
C.123 சரி
D.23 சரி

100. திறந்த முறையிலான போட்டித் தேர்வு முறையில் கம்பெனி ஊழியர்களை தேர்ந்தெடுப்பது அறிமுகப்படுத்தப்பட்ட சட்டம்?

A.1வது பட்டய சட்டம்
B.2வது பட்டய சட்டம்
C.3வது பட்டய சட்டம்
D.4வது பட்டய சட்டம்🎈
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Whatsapp
Click here to join tnkural.com
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY