Ads Right Header

புதிய பணியிடத் தடை - ஆயக்குடி இலவச பயிற்சி மையம் தகவல்!


புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளதால் காலி பணியிடங்கள் நிரப்பப்படுமா என்ற சந்தேகம் தேவையில்லை .

முதலில் புதிய பணியிடங்கள் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள் . உதாரணமாக தற்போது வரை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர் உதவியாளர் மற்றும் குரூப் -1 போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட்டன .

இவையெல்லாம் ஏற்கனவே இருக்கும் பணியிடங்கள் . கடந்த சில வருடங்களாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துணை வட்டாட்சியர் போன்ற பணியிடங்கள் புதியதாக உருவாக்கப்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன . ஆனால் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை . எனவே புதிதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துணை வட்டாட்சியர் போன்ற பணியிடங்களை உருவாக்க கூடாது . அதற்கு தான் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் நடைபெறும், பணிநியமனங்கள் நடைபெறும். எனவே தேர்வுக்குத் தயாராகும் அனைவரும் மனம் தளராமல் படியுங்கள். ஆறுமாதம் வரை தள்ளிப் போகலாமே தவிர தடை ஏதும் இல்லை.

ஆயக்குடி இலவச பயிற்சி மையம்.
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY