Ads Right Header

Box Questions - 8 ஆம் வகுப்பு அறிவியல் இரண்டாம் பருவம்!


8 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்

4 . அணு அமைப்பு

1 . ஜான் டால்டன் ஒரு ஏழ்மையான நெசவுக் குடும்பத்தில் பிறந்தவர் . அவர் தனது 12ஆவது வயதில் ஒரு கிராமத்துப் பள்ளியில் ஆசிரியராகப் பணியேற்றார் . ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரானார் . பின் 1973ல் அவர் மான்செஸ்டரில் உள்ள ஒரு கல்லூரியில் இயற்பியல் , வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களைக் கற்பிக்கும் பேராசிரியராகப் பணிபுரிந்தார் . அவரது இறுதிக்காலம் வரை வளிமண்டல அழுத்தம் மற்றும் மழையளவினைப் பதிவு செய்வதைத் தனது வழக்கமாகக் கொண்டிருந்தார் . அவர் ஒரு சிறந்த வானியல் ஆராய்ச்சியாளராக இருந்தார் .

2 . காற்று மின்கடத்தாப் பொருளாக இருப்பது இயற்கையின் வரமாகும் . ஒருவேளை காற்று ஒரு சிறந்த மின் கடத்தியாக இருக்குமானால் , எதிர்பாராத விபத்தினால் உருவாகும் சிறு மின்பொறிகூட மிகப்பெரிய ஆபத்தினை விளைவிக்கக்கூடும் .

3 . மின்சாரம் காற்றின் வழியே பாயும் போது வாயு மூலக்கூறுகளிலிருந்து எலக்ட்ரான்கள் வெளியேறுவதால் அயனிகள் உருவாகின்றன . இதுவே மின்னிறக்கம் எனப்படும் .

4 . தொலைக்காட்சிப் பெட்டியில் கேதோடு கதிர்கள் காந்தப்புலத்தால் விலகலடைந்து அதன் முகப்புத்திரையில் வீழ்த்தப்படுகின்றன . இவை ஒளிப்படத்தை உருவாக்குகின்றன .

5 . கண்ணிற்குப் புலப்படாத கதிர்கள் துத்தநாக சல்பைடு பூசப்பட்ட திரையில் விழும் போது கண்னிற்குப் புலப்படும் ஒளியை உமிழ்கின்றன . இப்பொருள்கள் ஒளிரும் பொருள்கள் எனப்படுகின்றன .

6 . ஹைட்ரஜன் வாயுவை மின்னிறக்கக் குழாயினுள் எடுத்துக்கொள்ளும் போது பெறப்படும் நேர்மின்துகள்கள் புரோட்டான்கள் எனப்படுகின்றன . ஒரு ஹைட்ரஜன் அணுவிலிருந்து ஒரு எலக்ட்ரானை நீக்கும் போது ஒரு புரோட்டான் கிடைக்கிறது . எனவே புரோட்டான் என்பதை ஹைட்ரஜன் அயனி ( H ' ) எனவும் அழைக்கலாம் .

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

8 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்

5 . இயக்கம்

1 . பாம்புகளுக்கு கால்கள் கிடையாது . நகர்வதற்குப் அவை தங்களது தசை மற்றும் செதில்களைப் பயன்படுத்துகின்றன .

2 . மீன்கள் கூர்மையான உடல் அமைப்பைப் பெற்றுள்ளன . எனவே , அவற்றால் நீரின் ஓட்டத்துடன் சீராகச் செல்ல முடிகிறது . உடல் மற்றும் வாலில் உள்ள தசைகள் மற்றும் செதில்கள் சமநிலையைப் பேணுவதற்கு அவற்றிற்கு உதவுகின்றன .

3 . சிறுத்தை மனிக்கு 76கி . மீ வேகத்தில் ஓடக்கூடியது .

4 . நீர் யானை மனிதனை விட வேகமாக ஓடக்கூடியது .

5 . 6 கால்களில் நடக்கும் விலங்குகளுள் கரப்பான்பூச்சியே வேகமாக ஓடக்கூடியது . அது , 1 மீட்டர் தூரத்தை கிட்டத்தட்ட 1 வினாடியில் கடக்கும் .

6 . மிக விரைவாக நீந்தும் பாலூட்டியான டால்பின் ஒரு மணி நேரத்தில் 35மைல்கள் வரை நீந்தும் .

7 . மூட்டுகள் என்பவை இரண்டு எலும்புகள் சந்திக்கும் அல்லது இணையும் இடமாகும் . தசைநார்கள் என்பவை இனைப்புத் திசுக்களின் கடினமான குறுகிய பட்டைகள் ஆகும் . இவை ஒரு எலும்புடன் மற்றொரு எலும்பை இனைத்து மூட்டுகளை உருவாக்குகின்றன . டெண்டான்கள் என்பவை மீள் திசுக்களால் ஆனவை . அவை மூட்டுகளின் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன .

8 . மூட்டுகளின் அழற்சி என்பது பொதுவாக குருத்தெலும்பில் ஏற்படும் உராய்வின் காரணமாகவோ அல்லது மூட்டுகளில் சினோவியல் திரவம் இல்லாததாலோ ஏற்படுகின்றது . இந்த நிலையில் ஒருவர் , மூட்டுகளை நகர்த்தும் போது மூட்டுகளில் கடுமையான வலியை உணர்கிறார் . இந்த நோய் கீழ்வாதம் அல்லது மூட்டுவீக்கம் ( ஆர்த்ரைடிஸ் ) என்று குறிப்பிடப்படுகிறது . மூட்டுகளில் யூரிக் அமிலப் படிகங்கள் படிவதாலும் மூட்டுவீக்கம் ஏற்படுகிறது ,

9 . பீமா அல்லது தொடை எலும்பே மனித எலும்புக் கூட்டின் மிக நீளமான மற்றும் வலிமையான எலும்பு ஆகும் .

10 . நடுச்செவியில் உள்ள ' ஸ்டேபஸ் ' என்ற எலும்பே மனித எலும்புக்கூட்டின் மிகச்சிறிய மற்றும் லேசான எலும்பு ஆகும் .

11 . மனிதன் மற்றம் ஒட்டகச் சிவிங்கியின் கழுத்தில் ஒரே எண்ணிக்கையிலான எலும்புகள் உள்ளன . ஆனால் ஒட்டகச் சிவிங்கியின் முதுகெலும்புகள் மிக நீளமானவை .

12 . முடியின் வேர்களில் தசைகள் உள்ளன . அவை உங்களுக்கு சிலிர்ப்புகளைக் கொடுக்கின்றன .

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

8 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம்

6 . வளரிளம் பருவமடைதல்

1 . விந்தகங்கள் மற்றும் அண்டகங்கள் முறையே ஆண் மற்றும் பெண்ணின் முதல்நிலை பால் உறுப்புகள் என்று அழைக்கப்படுகின்றன .

2 . பருவமடைதல் நிகழும் போது , குரல்வளையின் வளர்ச்சியானது பெண்களைவிட ஆண்களில் அதிகமாக உள்ளது .

3 . ஆண்களில் வளர்ந்து பெரிதாகி வெளியே துருத்திக் கொண்டிருக்கும் குரல் ஒலிப் பெட்டகமானது ஆடம்ஸ் ஆப்பிள் எனப்படுகிறது . இதனால் , குரலானது ஆழமாகவும் , கரகரப்பாகவும் காணப்படுகிறது . இது முக்கியமாக வளரிளம் பருவத்தில் சுரக்கக்கூடிய சில ஆண் இன ஹார்மோன்களால் ( ஒழுங்குபடுத்தும் வேதிப்பொருள்கள் ) ஏற்படுகின்றது . இதன் விளைவாக , குருத்தெலும்புடன் இணைந்துள்ள தசைகள் ( குரல்வளை ) தளர்ச்சியுற்று தடிமனாகின்றன . இந்த தளர்ச்சியுற்ற தடித்த குரல்வளைப் பகுதிக்குள் காற்று நுழையும் போது கரகரப்பான ஒலியானது உருவாகின்றது .

4 . பெண்களில் குரல்வளை சிறியதாக இருப்பதால் அது வெளியில் தெரிவதில்லை . எனவே குரலானது உரத்த சுருதியுடன் காணப்படுகிறது .

5 . வளரிளம் பருவத்தில் வியர்வை மற்றும் தோலுக்கடியில் ( எண்ணெய்ச் சுரப்பிகள் ) காணப்படக்கூடிய சுரப்பிகளின் செயல்பாடு அதிகரிப்பதால் அவற்றின் சுரப்பு அதிகரிக்கின்றது . தோலில் காணப்படக்கூடிய இச்சுரப்பிகளின் அதிகப்படியான சுரப்பின் காரணமாக பல ஆண்கள் மற்றும் பெண்களின் முகத்தில் பருக்கள் தோன்றுகின்றன . கூடுதல் சுரப்பு காரணமாக சில நேரங்களில் அவர்களின் உடலிலிருந்து நாற்றமும் உருவாகிறது .

6 . ஈஸ்ட்ரோஜன் ஒரு தனித்த ஹார்மோன் அல்ல . அது ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல ஸ்மராய்டு ஹார்மோன்களின் தொகுப்பாகும் .

7 . சமீப காலங்களில் பெண்கள் மிகச்சிறிய வயதிலேயே பருவம் அடைகின்றனர் . இது உணவுப் பழக்கத்தினால் ஏற்படுகிறது , நீங்கள் அதிக அளவில் சத்தற்ற நொறுக்குத்தீனி உணவை உண்ணும் போது , உடல் வளர்ச்சி அதிகரித்து பெரியவர்களைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது .

8 . வளரிளம் பருவத்தினரின் நலமான வாழ்விற்கு தூக்கம் மிகவும் அவசியம் ஆகும் . தேவையான அளவு தூக்கம் பதின்ம வயதில் ஏற்படும் மன அழுத்தத்தை மேற்கொள்ள உதவுகிறது . இந்த வயதினர் சிறப்பாக செயல்பட , ஒவ்வொரு நாள் இரவிலும் சுமார் 8 முதல் 10 மணிநேரம் தூங்குவது அவசியமானதாகும் . ஆனால் பதின்ம வயதினோரில் பெரும்பாலானோர் போதுமான அளவு தூங்குவதில்லை .

9 . மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் இரத்த இழப்பை ஈடு செய்ய பெண்கள் , அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் .

Whatsapp ல் இணைந்திட

Click here to join tnkural.com


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY