Ads Right Header

UNIT 8 - சேரர், சோழர், பாண்டியர்...


சேரர்

" சங்க காலத்தின்போது மூவேந்தர்கள் தமிழகப் பகுதிகளை ஆட்சி புரிந்தனர் . வேந்தர் எனும் சொல் சேரர் , சோழர் , பாண்டியர் ஆகியோரைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது .

சேரர்கள் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய மற்றும் வடக்குத் திருவிதாங்கூர் , கொச்சி , தெற்கு , மலபார் , கொங்கு மண்டலம் ஆகியவற்ற ஆண்டனர் , பதிற்றுப்பத்து சேர அரசர்கள் குறித்த செய்திகளை வழங்குகின்றன .

சேர அரசன் செங்குட்டுவன் வட இந்தியாவின் மீது படையெடுத்துச் சென்றார் . சிலப்பதிகாரக் காவியப் பாத்திரமான கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக அவர் இமயமலையிலிருந்து கற்களைக் கொண்டு வந்தார் எனத் தெரியவந்துள்ளது .

பத்தினித் தெய்வ வழிபாட்டை அவர் அறிமுகம் செய்தார் . இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவனின் தம்பியாவார் . அவர்தான் சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் சேரல் இரும்பொறை எனும் அரசன் தனது பெயரில் நாணயங்களை வெளியிட்டார் . சில சேர நாணயங்களில் அவர்களின் சின்னமான வில்லும் அம்பும் பொறிக்கப்பட்டுள்ளன .

சோழர்

" சங்க காலத்தில் சோழ அரசு வேங்கட மலைகள் வரை விரிந்திருந்தது . காவிரி கழிமுகப்பகுதி சோழ நாட்டின் மையப் பகுதியாக விளங்கியது . இப்பகுதி பின்னர் சோழ மண்டலம் என அறியப்பட்டது .

சோழ அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர் கரிகால் வளவன் அல்லது கரிகாலன் ஆவார் . தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக அரசியல் இயக்கங்கள் அவர் தன்னை எதிர்த்த சேரர் , பாண்டியர் மற்றும் அவர்களை ஆதரித்த பதினொன்று வேளிர் தலைவர்களின் கூட்டுப்படையைத் தஞ்சாவூர் பகுதியில் உள்ள வெண்ணி எனும் சிற்றூரில் தோற்கடித்தார் .

அவர் காடுகளை விளைநிலங்களாக மாற்றினார் . வேளாண்மையை மேம்படுத்துவதற்காகக் காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டினார் . சோழர்களின் துறைமுகமான புகார் இந்தியப் பெருங்கடலின் பல பகுதிகளிலிருந்து வணிகர்களை அதன்பால் ஈர்த்தது .

பட்டினப்பாலை எனும் பதினெண் கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூல் , கரிகாலனின் ஆட்சியின் போது அங்கு நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பற்றிய விரிவான செய்திகளை வழங்குகிறது.

பாண்டியர்

" பாண்டியர் இன்றைய தென்தமிழகத்தை ஆட்சி செய்தனர் . பாண்டிய அரசர்கள் தமிழ்ப்புலவர்களையும் அறிஞர்களையும் ஆதரித்தனர் .

பல பாண்டிய அரசர்களின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன . - நெடுஞ்செழியன் மிகவும் புகழ்பெற்ற போர்வீரராகப் போற்றப்படுகிறார் .

அவர் தலையாலங்கானம் என்னுமிடத்தில் சேரர் , சோழர் , ஐந்து வேளிர்குலத் தலைவர்கள் ஆகியோரின் கூட்டுப்படையைத் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தோற்கடித்தார் . அவர் கொற்கையின் தலைவன் எனப் போற்றப்படுகின்றார் . பாண்டிய நாடு முத்துக்குளிப்புக்குப் புகழ் பெற்றதாகும் . பாண்டிய அரசர்கள் பல நாணயங்களை வெளியிட்டனர் .

அவர்களின் நாணயங்கள் , ஒருபுறத்தில் யானையின் வடிவத்தையும் மற்றொருபுறத்தில் மீனின் உருவத்தையும் கொண்டுள்ளன . | முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய அரசர் பல வேதவேள்விகளை நடத்தியதைக் கொண்டாடும் விதமாக நாணயங்களை வெளியிட்டார் .
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
⚓ WHATSAPP
      click here to join tnkural.com

⚓TELEGRAM
     click here to join tnkural.com
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY