Ads Right Header

Group 1&2&4 - Important Notes!



சிவாஜியின் நிர்வாக முறை பதிவிடப்படுகிறது.

சிவாஜி எட்டு அமைச்சர்களைக் கொண்ட எவ்வாறு அழைக்கப்பட்ட ஆலோசனை சபையை
உருவாக்கினார் ?
விடை : அஷ்ட பிரதான்.                                                         

சிவாஜி அமைச்சரவையில் பிரதம மந்திரி எவ்வாறு அழைக்கப்பட்டார் ? விடை: பேஷ்வா ,முக்கிய பிரதான்,பந்த் பீரதான்                                                                     
பிரதம மந்திரியின் முக்கிய பணி ? விடை : நாட்டின் பொது நலன் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவது

சிவாஜி நிர்வாகத்தில் நிதியமைச்சர் எவ்வாறு அழைககப்பட்டார் ?
விடை : அமத்தியா( அல்லது ) மஜீம்தார்               
நிதியமைச்சரின் பணி?
விடை :நாட்டின் பொது கணக்குகளை ஆராய்வது.       

சிவாஜி நிர்வாகத்தில் உள்துறை அமைச்சர் எவ்வாறு அழைககப்பட்டார் ? விடை :   வாக்கியநாவிஸ்

உள்துறை அமைச்சரின் பணி?
விடை :அரசரின் நடவடிக்கைகள்,நீதிமன்ற.நடவடிக்கைகளை ஆவணம் செய்வது

சிவாஜி நிர்வாகத்தில் வெளியுறவுத்துறை செயலாளர் எவ்வாறு அழைககப்பட்டார் ?
விடை : சுமந்த் ( அல்லது) துபிர்                                     
வெளியுறவுத்துறை செயலாளரின் பணி?
விடை :அரசரருக்கு போர் மற்றும் அமைதி நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்குவது,அந்நிய நாட்டு அதிகாரிகளை வரவேற்பது

தவறுகள் சுட்டிக்காட்டல் : 11 ஆம் வகுப்பு 2 and term ல் சிவாஜியின் நிர்வாகத்தில் வெளியுறவுத் துறை செயலாளர் டாபீர் என்று உள்ளது அது தவறானது துபீர் என்பதே சரியான விடை # SHAHULHAMEED TNPSC ASPIRAT #

சிவாஜி நிர்வாகத்தின் தலைமை நீதிபதி எவ்வாறு அழைக்கப்பட்டார் ?
விடை :நியாயதீஷ்.
                                          
தலைமை நீதிபதி எந்த விதமான வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவார் ?
விடை : சிவில் மற்றும் இராணுவம்.                                                         
சிவாஜி நிர்வாகத்தில் தலைமை தளபதி எவ்வாறு அழைக்கப்பட்டார்?
விடை : சர்-இ-நௌபத்
#TNPSC GROUP 1 சரவெடி #

தவறுகள் சுட்டிக்காட்டல் # 11 ஆம் வகுப்பு  2 nd term ல் சிவாஜியின் நிர்வாகத்தில் தலைமை தளபதி சாரிநௌபத் என்று உள்ளது அது தவறானது சர்- இ- நௌபத் என்பதே சரியானது # SHAHULHAMEED TNPSC ASPIRANT #

சிவாஜி நிர்வாகத்தில்  மதத்தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
விடை :பண்டிட் ராவ், சதர்,தனத்தியாக்சா,முதாசிப்                         
சிவாஜி நிர்வாகத்தில் உள்துறை செயலாளர் எவ்வாறு அழைக்கப்பட்டார் ?விடை : சச்சிவ்,சுருநாவிஸ்
# TNPSC GROUP 1 சரவெடி #

சிவாஜியின் ஆட்சிக் காலத்தில் நிர்வாக வசதிக்காக நாடு எத்தனை மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது ? விடை : 4   
                                                         மாகாணங்களுக்கு அடுத்தப் படியாக இருந்த அமைப்பு ?
விடை : பிராந்தியங்கள்.                                             
சிவாஜி ஆட்சி காலத்தில் நிர்வாக்த்தின் கடைசி அலகு ?
விடை : கிராமம் #   TNPSC GROUP 1 சரவெடி#

கிராமங்களை நிர்வகித்தவர்கள் ?
விடை : தேஷ்முக்
                                           
தேஷ்முக் எத்தனை கிராமங்களை ஆட்சி செய்து வந்தனர்?
விடை :20 முதல் 100 கிராமங்கள் தேஷ்முக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.                                                          கிராமங்களின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார் ?
விடை : பட்டீல்
# TNPSC GROUP 1 சரவெடி #

சிவாஜியின் ஆட்சியில் நில வருவாயில் சௌத் என்ற வசூல் முறை ? விடை:நான்கில் ஒரு பங்கு நில வருவாய்- முகலாயர்களகடமிருந்து கப்பமாக சிவாஜி வசூலித்தார்                         
சிவாஜியின் ஆட்சியில் நில வருவாயில் 'சர்தேஷ்முகி"என்ற வசூல் முறை ?விடை: பத்தில் ஒரு பங்கு நில வருவாய் #TNPSC GROUP 1 சரவெடி #

சிவாஜி ஆட்சி காலத்தில் இருந்த இறுதி மேல் முறையீட்டு நீதி மன்றம்?
விடை: ஹாஜீர்மஜ்லிம்.                                               
சிவாஜி ஆட்சிக் காலத்தில் குற்றவியல் வழக்குகளை விசார்த்தவர்?
விடை :பட்டேல்                                                 

சிவாஜி ஆட்சி காலத்தில் இருந்த படைகளின் எண்ணிக்கை ?
விடை : 4 ,1.குதிரைப் படை ,2.யானைப்படை,3.ஆயுதப்படை ,4..காலாட்படை  # TNPSC GROUP 1 சரவெடி #

சிவாஜி நிர்வாகத்தில் குதிரைப் படையின் தலைமை தளபதி ?
விடை : சர்-இ- நௌபத்                                                 
குதிரைப் படையில் அரசால் வழங்கப்பட்ட குதிரைகளை பராமரிப்பவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?
விடை : பர்கிர்கள்
#TNPSC GROUP 1. சரவெடி #

சிவாஜியின் நிர்வாகத்தில் மிகச்சிறிய 9 பேரைக் கொண்ட படைப்பிரிவு யாருடைய தலைமையில் நிர்வகிக்கப்பட்டது?
விடை : நாயக்( கார்ப்பரல்)
# TNPSC GROUP 1 சரவெடி #

சிவாஜி இறந்த ஆண்டு ?
விடை ; 1680       

சிவாஜி கைப்பற்றிய கோட்டை ?
விடை : செஞ்சி, வேலூர் கோட்டை.                             
சிவாஜிக்குப் பின்னர் மராத்தியர்களுக்கு பாதுகாப்பாக அமைந்த கோட்டை ?
விடை : செஞ்சி கோட்டை
 # TNPSC GROUP 1 சரவெடி #
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY