Ads Right Header

மகாத்மா காந்தி குறித்த தகவல்கள்.

 


1. காந்தியின் முழுமையான பெயர் என்ன?

➯ மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி

2. காந்தியடிகளின் தந்தை பெயர் என்ன?

➯  கரம் சந்த் காந்தி

3. காந்தியடிகளின் தாயார் பெயர் என்ன? 

➯ புத்திலிபாய்

4. காந்தியடிகள் எப்போது பிறந்தார்?

➯  02-10-1869

5. காந்தியடிகளின்  எத்தனையாவது பிறந்தநாளை 02-10-2019 அன்று நாம் கொண்டாடுகிறோம்?

➯ 150 வது பிறந்தநாள்

6. காந்தியடிகள் எங்கு பிறந்தார்?

➯ குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தர்

7. காந்தியடிகளுக்கு உண்மையின் மீது பிடிப்பு ஏற்படுத்திய நாடகம் எது?

➯ அரிச்சந்திரன் நாடகம்

8. காந்தியடிகள் எங்கு தனது பள்ளிக்கல்வியை முடித்தார்?

➯ சமல்தாஸ் கல்லூரியில் மெட்ரிகுலேசன் முடித்தார்

9. காந்தியடிகள் எப்பொழுது திருமணம் செய்துகொண்டார்?

➯ மே 1883

10. காந்தியடிகளுக்கு திருமணம் நடந்தபோது அவருக்கு வயது என்ன?

➯ 13க்கும் 14க்கும் இடையில்

11. காந்தியடிகளின் துணைவியார் பெயர் என்ன?

➯ கஸ்தூரிபாய்

12. காந்தியடிகள் லண்டன் செல்லும் முன்பு தனது தாயாருக்கு செய்து கொடுத்த மூன்று சத்தியங்கள் என்னென்ன?

➯ மது, மாது, மாமிசம் தவிர்ப்பேன்

13. காந்தியடிகள் பாரிஸ்டர் பட்டம் பெற லண்டனுக்கு எந்த ஆண்டு சென்றார்?

➯ 1888

14. காந்தியடிகள் தன்னுடைய எத்தனையாவது வயதில் தென்னாப்பிரிக்கா சென்றார்?

➯ 24ம் வயதில்

15. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?

➯ 21 ஆண்டுகள் (1893-1914)

16. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எத்தகைய கொடுமைக்கு ஆளானார்?

➯ நிறவெறி கொடுமைக்கு

17. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எந்த இடத்தில் இரயிலில் பயணம் செய்யும் போது அவமதிக்கப்பட்டு இரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டார்?

➯ பீட்டா்மெரிட்ஸ்பர்க்

18. காந்தியடிகள் எப்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்?

➯  09-01-1915

19. காந்தியடிகள்  தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய நாளை நாம் எவ்வாறு கொண்டாடுகிறோம்?

➯ வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (09-01-1915)

20. காந்தியடிகளின் இந்திய அரசியல் குரு யார்?

➯ கோபால கிருட்டின கோகலே

21. காந்தியடிகள் இந்திய விடுதலை போராட்டத்தில் எத்தகைய கொள்கையை பின்பற்றினார்?

➯ மிதவாதகொள்கை

22. காந்தியடிகள் எந்த விடுதலைப்போராட்ட  கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்?

➯ இந்திய தேசிய காங்கிரஸ்

23. காந்தியடிகள் 1917ல் மேற்கொண்ட  முதல் சத்தியாக்கிரக போராட்டத்தின் பெயர் என்ன?

➯ சாம்பரான் சத்தியாகிரகம் (பீகாரில் தொடங்கப்பட்டது)

24. காந்தியடிகளின் 1918ல் குஜராத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பெயர் என்ன?

➯ கேதா ஆர்ப்பாட்டம்

25. காந்தியடிகள் 1918ல் அகமதாபாத்தில் நடத்திய போராட்டம் எது?

➯ அகமதாபாத் மில் வேலை நிறுத்தப் போராட்டம்

26. காந்தியடிகள்1919ல் நடத்திய அகில இந்திய போராட்டம் எது?

➯ ரௌலட் சட்டத்திற்கு எதிரானது சத்தியாகிரகப் போராட்டம்

27. காந்தியடிகள் 1920ல் நடத்திய போராட்டம் எது?

➯ ஒத்துழையாமை இயக்கம்

28. காந்தியடிகள் 1930ல் நடத்திய போராட்டம் எது?

➯ சட்டமறுப்பு இயக்கம்

29. காந்தியடிகள் 1942ல் நடத்திய போராட்டம் எது?

➯ வெள்ளையனே வெளியேறு இயக்கம்

30. காந்தியடிகளுக்கு 1920ல் தென்னாப்பிரிக்காவில் வழங்கப்பட்ட கெய்சர் ஜ ஹிந்த்  என்ற பட்டத்தை எந்த போராட்டத்தின் போது துறந்தார்?

➯ ஒத்துழையாமை இயக்கம்

31. காந்தியடிகள் 12 மார்ச் 1930ல் என்ன போராட்டத்தை மேற்கொண்டார்?

➯ உப்புசத்தியாகிரகம்

32. காந்தியடிகள் மேற்கொண்ட உப்புச்சத்தியாகிரகம் எங்கு தொடங்கப்பட்டது?

➯ அகமதாபாத்தில் தொடங்கி தண்டியில் முடிவடைந்தது

33. காந்தியடிகள் மேற்கொண்ட உப்புச்சத்தியாகிரகம் (தண்டி யாத்திரை) எவ்வளவு நாள் நடந்தது?

➯  12-03-1930 முதல் 06-04-1930 வரை தூரம் 388 கிலோமீட்டர்

34. காந்தியடிகள் மேற்கொண்ட  தண்டியாத்திரையை அவர் எவ்வாறு பயணம் செய்தார்?

➯ 388 கிலோ மீட்டரும் பாதயாத்திரையாக

35. காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு (1942) இயக்கத்தின் போது எவ்வாறு முழங்கினார்?

➯ செய் அல்லது செத்துமடி (do or die)

36. காந்தியடிகள் சுதந்திரத்திற்காக மட்டுமல்லாது வேறு எதற்காக போராடினார்?

➯ குழந்தைகள் திருமணம்,  திண்டாமை ஒழிப்பு,  விதவைகளுக்கு எதிரான கொடுமைகள் 

37. காந்தியடிகள் தாழ்த்தப்பட்ட மக்களை எவ்வாறு அழைத்தார்?

➯ ஹரிஜன் (கடவுளின் குழந்தைகள்)

38. காந்தியடிகள் நாதுராம் கோட்சே என்று சுட்டுக் கொன்றார்?

➯  30-01-1948

39. காந்தியடிகள் இறந்ததினத்தை இந்தியாவில் எவ்வாறு கொண்டாடுகிறோம்?

➯ தியாகிகள் தினம்

40. காந்தியடிகள் இறந்த தினத்தை ஐ.நா.சபை எவ்வாறு அறிவித்துள்ளது?

➯ சர்வதேச அகிம்சை தினமாக (International day of Non–violence )

41. காந்தியடிகள் தன்சுயசரிதையை எந்த இதழில் எழுதினார்?

➯ நவஜீவன்

42. காந்தியடிகள் தன் சுயசரிதையை எந்த மொழியில் எழுதினார்?

➯ குஜராத்தி மொழியில்

43. காந்தியடிகள் தன் சுயசரிதையை என்ன பெயரில் எழுதினார்?

➯ சத்தியசோதனை

44. காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தவர் யார்?

➯ மன்மோகன் தேசாய்

45. காந்தியடிகளின் வரலாற்றை குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்ட பின்னர் அந்த நூலுக்கு வைக்கப்பட்ட பெயர் என்ன? 

➯ My Experiments with Truth.

46. காந்தியடிகள் இந்தியாவில் நடத்திய ஆங்கில இதழ் எது?

➯ யங் இந்தியா

47. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் நடத்திய ஆங்கில இதழில் பெயர் என்ன?

➯ இந்தியன் ஒப்பீனியன்

48. காந்தியடிகளை முதன்முதலில் “ மகாத்மா ”  என்று அழைத்தவர் யார்?

➯ இரவீந்திரநாத் தாகூர்

49. காந்தியடிகளை முதன்முதலில்  “தேசப்பிதா ” என்று அழைத்தவர் யார்?

➯ நேதாஜி சுபாசு சந்திரபோஸ்

50. காந்திஜீ யை தமிழில் காந்தியடிகள்  என்று எழுதும் வழக்கத்தை முதன்முதலில் ஏற்படுத்தியவர் யார்?

➯ திரு.வி.க

51. காந்தியடிகள் தன் வாழ்நாளில் மொத்தம் எவ்வளவு நாட்கள் சிறையில் கழித்தார்?

➯  2338 நாட்கள்

52.  காந்தியடிகள் அதிக நாட்கள் இருந்த சிறை எது?

➯ எரவாடா சிறை (பூனா)

53. காந்தியடிகள் மரணமடைந்த போது அவருக்கு வயது என்ன?

➯ 78 வயது

54. தில்லி செங்கோட்டை அரியணையோடு மீண்டும் தொடர்பு படுத்தப்படும் பெயர்

➯ காந்தி

55. காந்திஜியின் மனைவி பெயர் என்ன?

➯ கஸ்தூரிபாய்

56. காந்திஜிக்கும் கஸ்தூரிபாவிற்கும் பிறந்த மகன்கள் யார் யார்?

➯ ஹரிலால், மணிலால், ராமதாஸ், தேவதாஸ்

57. எந்த அரியணைக் கனவோடும் வளர்க்கப்படாதவர்கள் யார்?

➯ காந்திஜியின் பிள்ளைகள்

58. தென் ஆப்பிரிக்காவில் காந்தி நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட காந்திஜியின் மகன் யார்?

➯ ஹரிலால்

59. தென் ஆப்பிரிக்காவில் கைகளில் விலங்குபூட்டி தெருக்களில் கைதியாக அடித்து இழுத்துச் செல்லப்பட்டவர் யார்?

➯ ஹரிலால்

60. தன் புதல்வர்களையும், தன் பேரப்பிள்ளைகளையும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்தியவர் யார்?

➯ காந்திஜி

61. 388 மைல்கள் நடந்த தண்டி யாத்திரையில் தன் பேரப்பிள்ளையான சிறுவனை (ஹரிலால் மகன்) நடக்க வைத்து அழைத்துச் சென்றவர்?

➯ காந்திஜி

62. தனது உண்ணாவிரதப் போராட்டத்தில் தன் குடும்பத்தை ஈடுபடுத்தியவர் யார்?

➯ காந்திஜி

63. தன் பிள்ளைகள் என்பதற்காக ஒரு சிறு பலன் கூட அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது என்ற உறுதியாக இருந்தவர் யார்?

➯ காந்திஜி

64. லண்டனில் ஹரிலாலைப் படிக்க வைக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தும் அவரை அனுப்ப மறுத்தவர்

➯ காந்திஜி

65. தான் சிறையில் இருந்தபோது சந்தையில் முள்ளங்கி வியாபாரம் செய்து ஆசிரமவாசிகளுக்கு உணவுதர வேண்டிய பொறுப்பை மகன் மணிலாலிடம் ஒப்படைத்தவர்

➯ காந்திஜி

66. மிகுந்த வறுமையில் வாடிய காந்திஜியின் மகன்

➯ ஹரிலால்

67. மணிலாலை தன்னுடைய மகன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளாமலே ஒரு வருடத்துக்கு நீ உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்று சென்னைக்கு தன் மகனை அனுப்பியவர்

➯ காந்திஜி

68. சென்னையில் மூட்டைகள் தூக்கியும் நடைபாதையில் படுத்தும் உறங்கிய காந்திஜியின் மகன்

➯ மணிலால்

69. காந்திஜியைவிட அதிக ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டவர்

➯ மணிலால்

70. உப்பு சத்தியாக்கிரகத்தில் தலையில் எலும்புமுறிவு தாக்குதலுக்கு ஆளான காந்தியின் மகன்

➯ மணிலால்

71. மண்டை உடைக்கப்பட்டு மூளையில் காயத்துடன் சுயநினைவின்றி சிறைக் கைதியாக வாழ்நதவர்

➯ மணிலால்

72. 25 முறை மொத்தம் சுமார் 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர்

➯ மணிலால்

73. தெருப்பிச்சைக்காரனாக இருந்த காந்தியின் மகன்

➯ ஹரிலால்

74. காந்திஜியின் மனைவி கஸ்தூரிபாயின் இறுதி வாழ்க்கை  நடந்த இடம்

➯ சிறைச்சாலை

75. காந்திஜியின் மனைவி கஸ்தூரிபாயின் இறுதிச் சடங்குகள் நடந்த இடம்

➯ சிறைச் சாலை வளாகம்

76. 6 முறை - சுமார் 2 ஆண்டுகள் சிறைக் கைதியாக வாழ்ந்தவர்

➯ கஸ்தூரிபாய்

77. தமது 69வது வயதில் இருண்ட அறையில் தனிமைச் சிறையில் இருந்தவர்.

➯ கஸ்தூரிபாய்

78. இந்திய விடுதலைக்குப் பிறகு ஒரு பியுன் வேலையைக் கூட தன் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வதை விரும்பாதவர்

➯ காந்திஜி

79. வன்முறை தவிர்த்து விடுதலைக்குப் போராடியவர்

➯ காந்திஜி

80. விடுதலைக்கான போராட்டத்தில் நீ சிறையில் மரணம் அடைந்தால் உன்னை தெய்வமாக வழிபடுவேன் என்று கஸ்தூரிபாயிடம் கூறியவர்

➯ காந்திஜி.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY