Ads Right Header

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் மரபுக்கவிதை!

 


தமிழ் அறிஞர்களும்  தமிழ்த் தொண்டும் மரபுக்கவிதை

முடியரசன்

வாழ்க்கைக் குறிப்பு:

  • இயற் பெயர் = துரைராசு
  • ஊர் = மதுரை அடுத்துள்ள பெரியகுளம்
  • பெற்றோர் = சுப்புராயலு, சீதாலட்சுமி

வேறு பெயர்கள்:

  • கவியரசு(குன்றக்குடி அடிகளார்)
  • தமிழ்நாட்டு வானம்பாடி(அறிஞர் அண்ணா)

நூல்கள்:

  • முகில் விடு தூது
  • தாலாட்டுப் பாடல்கள்
  • கவியரங்கில் முடியரசன்
  • முடியரசன் கவிதைகள்
  • பாடுங்குயில்
  • காவியப்பாவை
  • ஞாயிறும் திங்களும்
  • மனிதனைத் தேடுகிறேன்
  • பூங்கொடி(தமிழ் தேசிய காப்பியம், தமிழக அரசு பரிசு பெற்றது)
  • வீரகாவியம்(தமிழ் வளர்ச்சி கழக பரிசு)
  • நெஞ்சு பொறுக்குதில்லையே

நாடகம்:

  • ஊன்றுகோல்(பண்டிதமணி கதிரேச செட்டியார் பற்றியது)

குறிப்பு:

  • காரைக்குடி மீனாட்சி சுந்தரம் அர் நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார்
  • இவர் தமிழில் பிற மொழி கலப்பதை வன்மையாக கண்டித்தார்
  • தந்தை பெரியாரிடமும், அறிஞர் அண்ணாவிடமும் நெருங்கிப் பழகியவர்.
  • சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்.
  • தமது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்றே உரைத்து, அவ்வாறே நிறைவேறச் செய்தவர்
  • இவரின் கவிதைகளை சாகித்திய அகாடெமி இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிப் பெயர்த்து வெளியிட்டுள்ளது

சிறப்பு:

  • அறிஞர் அண்ணா இவரைத் "தமிழ்நாட்டு வானம்பாடி” எனப் போற்றினார்
  • பறம்பு மலையில் நடந்த விழாவில் குன்றக்குடி அடிகளார் இவருக்கு கவியரசு என்ற பட்டத்தை வழங்கினார்
  • பூங்கொடி என்னும் காவியம் தமிழக அரசின் பரிசை பெற்றது

மேற்கோள்:

  • இன்பம் ஒருகரை துன்பம் ஒருகரை
  • இரண்டும் கொண்ட ஆறடா – வாழ்வு
  • வரம்பில்லையேல் எம்மொழியும் அழிந்து போகும்
  • மணவினையில் தமிழுண்டோ, பயின்றவர் தம்முள்
  • வாய்ப்பேச்சில் தமிழுண்டோ, மாண்டபின்னர்
  • பிணவினையில் தமிழுண்டோ


வாணிதாசன்

வாழ்க்கைக்குறிப்பு:

  • இயற்பெயர் = எத்திராசலு (எ) அரங்கசாமி
  • பெயர் = வாணிதாசன்
  • பிறந்த இடம் = புதுவையை அடுத்த வில்லியனூர்
  • பெற்றோர் = அரங்க திருக்காமு – துளசியம்மாள்

வேறு பெயர்கள்:

  • புதுமைக் கவிஞர்
  • பாவலரேறு
  • பாவலர்மணி
  • தமிழ்நாட்டுத் தாகூர்(மயிலை சிவமுத்து)
  • தமிழ்நாட்டு வோர்ட்ஸ்வொர்த்

புனைப்பெயர்:

  • ரமி

நூல்கள்:

  • தமிழச்சி
  • கொடிமுல்லை
  • எழிலோவியம்
  • தீர்த்த யாத்திரை
  • இன்ப இலக்கியம்
  • பொங்கல் பரிசு
  • இரவு வரவில்லை
  • சிரித்த நுணா
  • வாணிதாசன் கவிதைகள்
  • பாட்டரங்கப் பாடல்கள்
  • இனிக்கும் பாட்டு
  • எழில் விருத்தம்(விருதப்பாவிற்கு இலக்கணமாய்த் திகழ்வது)
  • தொடுவானம்
  • பாட்டு பிறக்குமடா(தமிழக அரசு பரிசு)

குறிப்பு:

  • இவர் பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக்கல்வி பயின்றவர்.
  • இவரின் பாடல்கள் சாகித்திய அகாதெமி வெளியிட்ட “தமிழ்க் கவிதைக் களஞ்சியம்” என்ற நூலிலும், தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட “புதுதமிழ்க் கவிமலர்கள்” என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.
  • இவர், “தமிழ்-பிரெஞ்ச் கையகர முதலி” என்ற நூலை வெளியிட்டார்.
  • பிரெஞ்ச் குடியரசு தலைவர் இவருக்கு “செவாலியர்” என்ற விருதினை வழங்கி உள்ளார்
  • இவரின் முதல் பாடல் = பாரதி நாள்

சிறப்பு:

  • பாரதிதாசன் பரம்பரையில் மூத்தவர்
  • பாவேந்தர் பரிசு பெற்றுள்ளார்
  • மயிலை சிவமுத்து = தமிழ்நாட்டுத் தாகூர்
  • சிலேடை, இடக்கரடக்கல் அமைத்துப் பாடுவாதில் வல்லவர்
  • குற்றியலுகரத்தின் ஒலியை உவமையாக கையாண்ட முதல் கவிஞர் இவரே

மேற்கோள்:

  • பாரதி தாசன் பெயரை உரைத்திடப்
  • பாட்டுப் பிறக்குமடா
  • இடுவெயில் போல்உழைக்கும் சேரிவாழ் ஏழைமக்கள்
  • கொடுவெயில் குளிர்மழைக்குத் குந்திடக் குடிசை உண்டோ?
  • மக்கட்கே வானை என்றும் மடக்கிநீ அனுப்பி வைத்தாய்
  • மக்கட்கே ஆறு வற்றாத அருவி தந்தாய்


சுரதா

வாழ்க்கைக்குறிப்பு:

  • இயற்பெயர் = இராசகோபாலன்
  • ஊர் = பழையனூர்
  • பெற்றோர் = திருவேங்கடம், சண்பகம் அம்மையார்

சிறப்பு பெயர்கள்:

  • உவமைக் கவிஞர்(ஜெகசிற்பியன்)
  • கவிஞர் திலகம்(சேலம் கவிஞர் மன்றம்)
  • தன்மானக் கவிஞர்(மூவேந்தர் முத்தமிழ் மன்றம்)
  • கலைமாமணி(தமிழக இயலிசை நாடக மன்றம்)
  • கவிமன்னர்(கலைஞர் கருணாநிதி)

படைப்புகள்:

  • தேன்மழை(கவிதைத் தொகுதி, தமிழ் வளர்ச்சி கழகப் பரிசு)
  • சிரிப்பின் நிழல்(முதல் கவிதை)
  • சாவின் முத்தம்
  • உதட்டில் உதடு
  • பட்டத்தரசி
  • சுவரும் சுண்ணாம்பும்
  • துறைமுகம்
  • வார்த்தை வாசல்
  • எச்சில் இரவு
  • அமுதும் தேனும்
  • தொடா வாலிபம்

கட்டுரை:

  • முன்னும் பின்னும்

இதழ்:

  • காவியம்(முதல் கவிதை இதழ், வார இதழ்)
  • இலக்கியம்(மாத இதழ்)
  • ஊர்வலம்(மாத இதழ்)
  • சுரதா(மாத இதழ்)
  • விண்மீன்(மாத இதழ்)

குறிப்பு:

  • பாரதிதாசனுக்கு தாசனாக விளங்கியதால் சுப்புரத்தினதாசன் என்பதை சுரதா என மாற்றிக்கொண்டார்

சிறப்பு:

  • தமிழக அரசின் முதல் பாவேந்தர் நினைவுப் பரிசு பெற்றவர்
  • வ.ரா(வ.ராமசாமி) = மற்றொரு பாரதி பிறந்து விட்டான்

மேற்கோள்:

  • தண்ணீரின் ஏப்பம் தான் அலைகள்
  • தடைநடையே அவர் எழுத்த்தில் இல்லை வாழைத்
  • தண்டுக்கோ தடுக்கின்ற கணுக்கள் உண்டு
  • படுக்கவைத்த வினாக்குறி போல்
  • மீசை வைத்த பாண்டியர்கள்
  • வரலாற்றுப் பேரழகி ஆதிமந்தி
  • எதுகை வரல்போல் அடுத்து வந்தால், அத்தி
  • என்பானோ மோனனையைப் போல் முன்னே வந்தான்


கண்ணதாசன்

வாழ்க்கைக் குறிப்பு:

  • இயற்பெயர் = முத்தையா
  • ஊர் = இராமநாதபுரம் மாவட்டம் சிறுகூடல்பட்டி
  • பெற்றோர் = சாத்தப்பன், விசாலாட்சி
  • காலம் = 1927-1981

புனைப் பெயர்:

  • காரை முத்துப் புலவர்
  • வணங்காமுடி
  • கமகப்பிரியா
  • பார்வதிநாதன்
  • துப்பாக்கி
  • ஆரோக்கியசாமி

வேறு பெயர்கள்:

  • கவியரசு
  • கவிச்சக்ரவர்த்தி
  • குழந்தை மனம் கொண்ட கவிஞர்

படைப்புகள்:

  • மாங்கனி
  • ஆட்டனத்தி ஆதிமந்தி
  • கவிதாஞ்சலி
  • பொன்மலை
  • அம்பிகா
  • அழகு தரிசனம்
  • பகவாத் கீதை விளக்கவுரை
  • ஸ்ரீ கிருஷ்னகவசம்
  • அர்த்தமுள்ள இந்துமதம்
  • பாரிமலைக் கொடி
  • சந்தித்தேன் சிந்தித்தேன்
  • அனார்கலி
  • தெய்வ தரிசனம்
  • இயேசு காவியம்(இறுதியாக எழுதிய காப்பியம்)
  • பேனா நாட்டியம்

நாவல்கள்:

  • சேரமான் காதலி(சாகித்ய அகாடமி விருது)
  • குமரிக் காண்டம்
  • வேலன்குடித் திருவிழா
  • விளக்கு மட்டுமா சிவப்பு
  • ஆயிரங்கால் மண்டபம்
  • சிங்காரி பார்த்த சென்னை
  • ஊமையான் கோட்டை
  • இராஜ தண்டனை
  • சிவகங்கைச் சீமை

தன் வரலாறு:

  • வனவாசம்
  • மனவாசம்

இதழ்:

  • தென்றல்
  • கண்ணதாசன்
  • சண்டமாருதம்
  • முல்லை
  • தென்றல் திரை
  • கடிதம்
  • திருமகள்
  • திரைஒளி
  • மேதாவி

குறிப்பு:

  • திரைப்படத் துறையில் ஏறத்தாழ 35 ஆண்டுகள் பாடல்கள் எழுதியுள்ளார்
  • இவர் கடைசியாக எழுதிய பாடல் ஏசுதாஸ் குரலில் அமைந்த கண்ணே கலைமானே பாடலாகும்
  • சேலம் மாவட்டம் சலகண்டாபுரம்(சலங்கை) பா.கண்ணன் என்ற நாடக ஆசிரியரின் தாசன்

சிறப்பு:

  • தமிழக அரசின் ஆஸ்தான கவிஞராக இருந்தார்
  • சௌந்திரா கைலாசம் = தடுமாறு போதையிலும் கவிபாடும் மேதை அவன்

மேற்கோள்:

  • காலைக் குளித்தெழுந்து
  • கருஞ்சாந்துப் பொட்டுமிட்டு
  • கருநாகப் பாம்பெனவே
  • கார்கூந்தல் பின்னலிட்டு
  • போற்றுபவர் போற்றட்டும்; புழுதி வாரித்
  • தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்
  • வீடு வரை உறவு, வீதி வரை மனைவி
  • காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?
  • மலை கூட ஒரு நாளில் தேனாகலாம்
  • மணல் கூடச் சிலநாளில் பொன்னாகலாம்
  • ஆனாலும் அவையாவும் நீயாகுமா?
  • அம்மாவென் ரழைக்கின்ற சேயாகுமா?


உடுமலை நாராயணக்கவி

  • இவரின் ஊர் = பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள பூளவாடி
  • இவரின் குரு = உடுமலை முத்துசாமி கவிராயர்
  • நீதிபதி கோகுலக்கிரிஷ்ணன் அவர்கள் தலைமையில் இவருக்கு “சாகித்ய ரத்னாகர் விருது” வழங்கப்பட்டது
  • “கலைமாமணி” விருது பெற்றுள்ளார்
  • தமிழக அரசு இவருக்கு அவர் ஊரில் நினைவு மண்டபம் எழுப்பியுள்ளது
  • நாட்டுப்புறப் பாடல் மெட்டுகளைத் திரைப்படத்தில் அறிமுகம் செய்தவர்
  • சீர்திருத்தக் கருத்துக்களைத் முதன் முதலில் திரைப்படத்தில் புகுத்தியவர்
  • இவரை “பகுத்தறிவு கவிராயர்” எனப் போற்றுவர்


பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

  • இவரை “மக்கள் கவிஞர், பொதுவுடைமை கவிஞர், பாமர மக்களின் கவிஞர்” எனப் போற்றுவர்
  • பெற்றோ = அருணாசலம், விசாலாட்சி
  • இவரின் ஊர் = செங்கப்படுத்தான் காடு
  • பாரதிதாசனால் “எனது வலது கை” எனப் புகழப்பட்டவர்
  • உடுமலை நாராயகவி இவரை “அவர் கோட்டை, நான் பேட்டை” எனப் புகழ்ந்தார்
  • இவர் எழுதிய மொத்தப்பாடல்கள் = 56


மருதகாசி

  • பெயர்: அ.மருதகாசி
  • பிறந்த ஊர்: திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலக்குடிகாடு
  • பெற்றோர்: அய்யம்பெருமாள் – மிளகாயி அம்மாள்
  • சிறப்பு: திரைக்கவித் திலகம்
  • காலம்: 13.02.1920 – 29.11.1989
  • “திரைக்கவித் திலகம் அ.மருதகாசி பாடல்கள்” என்னும் தளிப்பில் திரைக்கதைகளுக்கு எழுதிய பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளது.
  • அதில் உழவும் தொழிலும், தாலாட்டு, சமூகம், தத்துவம், நகைச்சுவை என்னும் தலைப்புகளில் பாடல்கள் வகைபடுத்தப் பட்டுள்ளது.
  • 13 வயதிலேயே திரைப்படப்பாடல் எழுதியவர்
  • இவரின் முதல் பாடல் = காமன் பண்டிகை
  • கலைமாமணி பட்டம் பெற்றுள்ளார்
  • “திரைக்கவித் திலகம்” என்ற பட்டம் வழங்கியவர் = குடந்தை வாணி விலாச சபையினர்
  • இவரின் ஆசிரியர் = இராசகோபாலையர்
  • இவரின் “மருதமலை மாமணியே முருகையா” பாடல் தமிழக அரசின் பரிசை பெற்றுள்ளது

 

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY