Ads Right Header

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்.

 


10 வகுப்பு

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்


1.ஆங்கிலேயர்கள் பாளையக்காரர்களை எவ்வாறு அழைத்தனர்.

👉 போலிகார்


2. பாளையக்காரர் முறை தமிழகத்தில் அறிமுகம் செய்தவர்

👉 விஸ்வநாத நாயக்கர் 1529


3. பாளையக்காரர்கள் காவல் காக்கும் கடமையை எவ்வாறு அழைக்கப்பட்டது.

👉 படிக்காவல்/அரசு காவல்


4. கிழக்கு பாளையங்கள் யாவை

👉 சாத்தூர் நாகலாபுரம் பாஞ்சாலங்குறிச்சி எட்டையபுரம்


5. மதுரை திருநெல்வேலி பகுதிகளில் பொறுப்பு வகித்த பத்தாணிய அதிகாரிகள்

👉 மியானா முடிமையா நபிகான் கட்டாக்


6.யாருடைய தலைமையின் கீழ் மாபூஸ்கான் மார்ச் 1755 ஆம் ஆண்டு திருநெல்வேலி நோக்கி படையெடுத்துச் சென்றான்

👉 கர்னல் ஹெரான்


7. களக்காடு போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது

👉 மாபூஸ்கான் vs புலித்தேவர் 1755


8 களக்காடு போரில் புலித்தேவருக்கு உதவிய அரசு

👉 திருவிதாங்கூர் அரசு


9. மத மாற்றத்திற்கு முன்பு மருதநாயகம் எவ்வாறு அழைக்கப்பட்டார்

👉 யூசுப்கான்/கான்சாகிப்


10. யூசுப்கான் 1761 மே 16 கைப்பற்றிய கோட்டைகள்

👉 நெற்கட்டும்செவல் வாசுதேவ நல்லூர் பனையூர்


11. யூசுப்கான் நெற்கட்டும் சேவல் தாக்குவதற்கு எப்போது பீரங்கிப் படைகள் வந்து சேர்ந்தது

👉1760


12. யூசுப்கான் தூக்கிலடப்பட்ட ஆண்டு-

புலித்தேவர் நெற்கட்டும்சேவல் கைப்பற்றிய ஆண்டு –

👉1764


13. கேப்டன் கேம்பெல் நெற்கட்டும் சேவல் கைப்பற்றிய ஆண்டு

👉1767


14. வேலு நாச்சியார் அறிந்திருந்த மொழி

👉 ஆங்கிலம் பிரெஞ்ச் உருது


15. வேலுநாச்சியார் எங்கு பிறந்தார்

👉 ராமநாதபுரம்


16. முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் யார் தலைமையிலான படைகளை எதிர் கொண்டார்.

👉 ஆற்காடு நவாப் / லெப்டினன்ட் கர்னல் பான் ஜோர்


17.தளவாய் பொருள்

👉 ராணுவத் தலைவர்


18. வேலு நாச்சியார் எழுதிய கடிதத்தை ஹைதர் அலியிடம் கொண்டு சேர்த்தவர்.

👉 தாண்டவராயனார்


19. வேலு நாச்சியாருக்கு உதவிய திண்டுக்கல் கோட்டைப் படைத்தலைவர்

👉 சையத்


20. வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார் முடிசூட்ட உதவியவர்

👉 மருது சகோதரர்கள்


21. குயிலி பற்றி உளவு கூற மறுத்ததால் கொல்லப்பட்ட மேய்ச்சல் தொழில்புரியும் பெண் பெயர்

👉 உடையாள்


22. வீரபாண்டிய கட்டபொம்மன் எந்த வயதில் அரசுப் பொறுப்பை ஏற்றார்

👉30


23. கட்டபொம்மனை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றிருந்த நபர்கள்

👉 வில்லியம் ப்ரௌன் வில்லியம் ஓரம் ஜான்காஸாமேஜர்


24. தூக்கிலிடப்பட்ட ஆண்டு

சிவசுப்பிரமணியர் –

கட்டபொம்மன் –

மருது சகோதரர்கள் –

ஊமைத்துரை செவத்தையா –

👉சிவசுப்பிரமணியர் –1799 செப்டம்பர் 13

கட்டபொம்மன் –1799 அக்டோபர் 17 (அக்டோபர் 16 விசாரணை நடைபெறும்)

மருது சகோதரர்கள் –1801 அக்டோபர் 24

ஊமைத்துரை செவத்தையா –1801 நவம்பர் 16


25.தூக்கிலிடப்பட்ட இடம்

சிவசுப்பிரமணியர் –

கட்டபொம்மன் –

மருது சகோதரர்கள் –

ஊமைத்துரை செவத்தையா –

👉 நாகலாபுரம்

கயத்தாறு

திருப்பத்தூர் கோட்டை

பாஞ்சாலங்குறிச்சி


26. எப்பகுதியைச் சேர்ந்தவர்கள் (திண்டுக்கல் கூட்டமைப்பு)

கோபால நாயக்கர்-

லட்சுமி நாயக்கர் -

பூஜை நாயக்கர் –

👉 திண்டுக்கல்/மணப்பாறை/தேவதான பட்டினம்


27. வீரபாண்டிய கட்டபொம்மனை அமைதியை விரும்பும் மனம் கொண்டவராக கருதிய ஆங்கிலேய அதிகாரிகள்.

👉 ஜேம்ஸ் லண்டன்/காலின் ஜாக்சன்


28. கட்டபொம்மன் 1798 ஆம் ஆண்டு  கட்டவேண்டிய நிலவரி நிலுவை

👉3310


29. கட்டபொம்மன் vs ஜாக்சன்

ராமநாதபுரத்தில் சந்திக்க ஆணையிட்ட தேதி –

ராமநாதபுரத்தில் சந்தித்த தேதி –

👉1798 ஆகஸ்ட் 18 

1798 செப்டம்பர் 19


30. ஆட்சியர் ஜாக்சனை பதவி நீக்கம் செய்த ஆளுநர்

👉 எட்வர்ட் கிளைவ்


31. விசாரணை குழுவின் முன்பாக கட்டபொம்மன் ஆஜரான நாள்

👉 1798 டிசம்பர் 15


32. தென்னிந்திய கூட்டமைப்பு ஏற்படுத்தியவர்கள்

👉 மருது சகோதரர்கள்

(கோபால நாயக்கர்+ஆனைமலை யதுல் நாய்க்கர்)


33. மே 1799 மதராசி ஆளுநராக இருந்தவர்

👉 வெல்லெஸ்லி பிரபு


34.ஊமைத்துரையும் செவத்தையாவும் எப்போது பாளையங்கோட்டை சிறையில் இருந்து தப்பினர்

👉 பிப்ரவரி 1801


35. மருது சகோதரர்களின் கலகம் பிரிட்டிஷார் எவ்வாறு அழைத்தனர்

👉 தென்னிந்திய கலகம் /இரண்டாவது பாளையக்காரர் போர்


36. திருச்சிராப்பள்ளி பேரறிககை அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு

👉 ஜூன் 1801


37. திருச்சிராப்பள்ளி பேரறிக்கை எங்கு காட்சிப்படுத்தப்பட்டது

👉 திருச்சி நவாப் கோட்டை

ஸ்ரீரங்கம் கோயில்


38. கர்நாடக உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு 

👉 1801 ஜூலை 31


39. வேலூர் கலகத்தில் எந்த படைப்பிரிவுகள் ஈடுபட்டனர்

👉1&23


40.வேலூர் கலகத்தின் போது ஆற்காடின் குதிரைப் படைத் தளபதியாக இருந்தவர்

👉 ஜில்லஸ்பி


41.1806 புரட்சியின் போது வேலூர் கோட்டையின் புதிய மன்னராக தேர்வு செய்யப்பட்டவர்.

👉 பதேக் ஹைதர்


42. யாருடைய புதிய விதிமுறைகளின் காரணமாக வேலூர் கலகம் ஏற்பட காரணமாக அமைந்தது

👉 ஜான் கிராடாக்


43. வேலூர் கழகத்திற்கு பிறகு திப்புவின் மகன்கள் எங்கு சிறை வைக்கப்பட்டனர்

👉 கல்கத்தா


44. தீரன் சின்னமலை தூக்கிலடப்பட்ட ஆண்டு

தூக்கிலிடப்பட்ட இடம்

👉1805 ஜூலை 31 & சங்ககிரி கோட்டை


45. தீரன் சின்னமலை  வரி கட்ட மறுத்து திருப்பி அனுப்பிய திப்புவின் திவான்

👉 முகமது அலி


46. வேலூர் கழகத்தின் முடிவில் ஜில்லஸ்பி பரிசளிக்கப்பட்ட தொகை

👉7000 பககோடா


47. வேலூர் கலகத்தில் கோட்டையில் இறந்து கிடந்த வீரர்கள்

👉800


48. ஓடாநிலை போரில் ஈடுபட்டவர்

👉 தீரன் சின்னமலை (நொய்யல் போர்)


49. தீரன் சின்னமலை பின்பற்றிய போர் முறை எவ்வாறு அழைக்கப்பட்டது

👉 கொரில்லா போர்முறை


50.சுபேதார் ஷேக் ஆடம்,ஷேக் ஹமீது எந்தப் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள்

👉23 படைப் பிரிவு (2வது பட்டாளம்)

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY