Ads Right Header

6th to 10th Full Tamil Notes!


உரைநடை : செம்மொழித் தமிழ் 

உலக மொழிகள் 

உலகத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன . அவற்றுள் பல பேச்சு மொழிகளே . " எளிதில் பேசவும் , எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே " என்று வள்ளலார் அருள்கிறார் . 

செம்மொழிகள் : திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் செம்மொழிகள் எனப்படும் . கிரேக்கம் , இலத்தின் , சமஸ்கிருதம் , சீனம் , எபிரேயம் , அரபு , ஈப்ரு ஆகியவற்றை செம்மொழிகள் எனப் பட்டியலிடுகிறார் மொழியியல் அறிஞர் ச.அகத்தியலிங்கம் 

திருக்குறள் பற்றி டாக்டர் கிரௌல் : டாக்டர் கிரௌல் , " தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு , திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள் , தமிழ் என்னை ஈர்த்தது , குறளோ என்னை இழுத்தது " என்று மொழிந்து இன்புற்றார் . 

தமிழின் தொன்மை : உலகில் பழமையான நிலபகுதியான “ குமரிக்கண்டத்தில் ” தமிழ் தோன்றியதாக " தண்டியலங்கார " மேற்கோள் செய்யுள் கூறுகிறது . " ஒங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ் " தமிழின் மேன்மை : தமிழ் மெல்லோசே மொழி , அதனாலேயே உலக முதன் மொழியாய்த் தோன்றியும் வழக்கொழியாமல் இன்றும் இளமை மாறாமல் கன்னித்தமிழாய் இருந்து வருகிறது . 

தமிழ் மொழியின் தாய்மை : பெற்றோரை குறிக்கும் " அம்மை , அப்பன் " என்னும் குமரிநாட்டுத் ( நாஞ்சில் நாடு ) தமிழ்ச்சொற்கள் , வடமொழி உட்பட உலகப் பெருமொழிகள் பலவற்றிலும் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன . 

தமிழ் மொழியின் தூய்மை : " தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயக்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும் " என்று கூறினார் கால்டுவெல் . 

தமிழ் மொழியின் செம்மை :

மொழிக்கு இலக்கான வரம்பும் சொற்களின் திருந்திய வடிவும் அவசியம் . இவற்றை தமிழில் உள்ளது போல , வேறு எம்மொழியிலும் காண இயலாது . அதனாலேயே தமிழ் , " செந்தமிழ் " எனப்பட்டது . 

தமிழ் மொழியின் மும்மை : 

முதற்சங்கத்திலிருந்தே இசையும் நாடகமும் இயற்றமிழோடு இணைந்து முத்தமிழென வழங்கி வரலாயிற்று . முதலிரு சங்கத்திலும் வழங்கிய இலக்கண நூல்கள் முத்தமிழ் பற்றியனவாகவே இருந்தன . 

தமிழ் மொழியின் இயற்கை வளர்ச்சி : 

" எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே " என்பது தொல்காப்பிய நூற்பா . தமிழில் இடுகுறி பெயர்கள் குறைவு . ஒருமை , பன்மை என்னும் இருவகை எண் மட்டுமே தமிழில் உண்டு , வடமொழியில் ஒருமை , இருமை , பன்மையென மூவகை எண் உள்ளன . தமிழில் உயிர்களுக்கு மட்டுமே பால்வேறுபாடு உண்டு , பொருள்களுக்குப் பால்வேறுபாடு இல்லை . 

தமிழ்மொழியின் இலக்கண நிறைவு : எல்லா மொழிகளும் “ எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறும் . ஆனால் தமிழ் அவற்றுடன் சேர்த்து வாழ்வியலுக்கான பொருள் இலக்கணத்தையும் ” கூறிகிறது . * அதனையும் " அகம் , புறம் " என இருவகையாகப் பகுத்துள்ளது . 

தமிழ் மொழியின் செய்யுள் சிறப்பு : பண்டைத் தமிழ் இலக்கியங்களும் செய்யுள் வடிவிலேயே இருந்தன . " கலிப்பா முதலான் செய்யுள் வகைகள் வேறு எம்மொழியிலும் இல்லை . 

தமிழ் மொழியின் அணிச் சிறப்பு : புலவர்கள் செய்யுளுக்குச் சிறப்புச் சேர்க்க " உவமை , உருவகம் " முதலிய நூற்றுக்கணக்கான அணிகளைப் பயன்படுத்திப் பாடல்களை இயற்றியுள்ளார்கள் . 

தமிழ் மொழியின் நூல் சிறப்பு : ஆயிரக்கணக்கான தமிழ் நூல்கள் இயற்கைச் சீற்றங்களால் அழிந்துபோயின . கிடைத்தவற்றுள் சங்ககால நூல்கள் தமிழர்தம் மொழியையும் பண்பாட்டையும் விளக்குவனவாகத் திகழ்கின்றன . விழுமிய வியத்தகு பண்பாடுகளையும் நூல்களையும் கொண்டது தமிழ்மொழி . உலகின் மிகப்பழமையான நிலப்பகுதி குமரிக்கண்டம் . 

இன்று பேச்சு வழக்கில் இல்லாத மொழிகள் - கிரேக்கம் , இலத்தீன் , சமஸ்கிருதம் . தமிழைச் செம்மொழி என நிலைநாட்டுவதற்கு உரிய சான்றுகளாக எவை திகழ்கின்றன ? தொல்காப்பியம் , பத்துப்பாட்டு , எட்டுத்தொகை , பதினெண்கீழ்க் கணக்கு , சிலப்பதிகாரம் , மணிமேகலை , முத்தொள்ளாயிரம் , இறையனார் அகப்பொருள் ஆகிய செவ்வியல் இலக்கியங்கள் ஆகும் . 

பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றான திருக்குறளுக்கு இணையான வேறு நூல் உலகில் இல்லை . 

உலகின் மிகப்பழமையான நிலப்பகுதி - குமரிக்கண்டம் தொல்காப்பிய நூற்பா என்பது - எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே .

முழுமையாக காண

இங்கே சொடுக்கவும்






Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY