Ads Right Header

2019 - டிஎன்பிஎஸ்சி தமிழ் தேர்வு 100 வினாவிடை!!

  


1. Question
பாடல் வரிகள் கலித்தொகையில் எப்பிரிவில் இடம் பெற்றுள்ளன?
எழுந்தது துகள்
ஏற்றனர் மார்பு
கவிழ்ந்தன மருட்பு
கலங்கினர் பலர்

 குறிஞ்சிக் கலி
 முல்லைக் கலி💐
 மருதக் கலி
 நெய்தல் கலி

2. Question
“ஈயென இரத்தல் இழிந்தன்று: அதன் எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று”
கூற்று 1: இப்பாடல் அடிகளைப் பாடியவர் கழைதின் யானையார்
கூற்று 2: இப்பாடலில் புகழப்படும் வள்ளல் பாரி

 கூற்று இரண்டும் சரி
 கூற்று 2 மட்டும் சரி
 கூற்று1 மட்டும் சரி🌴
 கூற்று இரண்டும் தவறு

3. Question
பொருத்தமான இணையைத் தேர்வு செய்க

வினை – சிறுபொழுது
 குறிஞ்சி - ஏற்பாடு
 முல்லை -நண்பகல்
 நெய்தல் - மாலை
 மருதம் - வைகறை🌴

4. Question
“உச்சி மலையிலே ஊறும் அருவிகள் ஒரே வழியில் கலக்குது ஒற்றுமை இல்லாத மனித குலம் உயர்வு தாழ்வு வளர்க்குது” – என்று பாடியவர்

 கண்ணதாசன்
 அ.மருதகாசி
 உடுமலை நாராயண கவி
 பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்🌴

5. Question
யார் பாடிய சித்தர் பாடல்கள் “ஞானப்பாமாலை” என்று வழங்கப்படுகிறது?

 பாம்பாட்டிச் சித்தர்
 அகத்தியர்🌴
 சிவாக்கியர்
 கடுவெளிச் சித்தர்

6. Question
வாலை, வாழை, வாளை ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தருக

 மீன்வகை, மரவகை, இளம்பெண்
 இளம்பெண், மரவகை, மீன்வகை🌴
 இளம்பெண், மீன்வகை, மரவகை
 மரவகை, மீன்வகை, இளம்பெண்

7. Question
நந்த வனத்திலோர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தானொரு தோண்டி
என்ற வரிகளைப் பாடியவர் யார்?

 பத்ரகிரியார்
 அகத்திய ஞானம்
 கடுவெளிச் சித்தர்🌴
 சிவவாக்கியர்

8. Question
ஆலாபனை என்னும் கவிதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?

 மேத்தா
 பாரதிதாசன்
 சிற்பி
 அப்துல் ரகுமான்🌴

9. Question
கோ.மோகனரங்கன் பிறந்த ஊர் எது?

 ஆலப்புழை
 ஆலந்தூர்🌴
 ஆமூர்
 ஆனங்கூர்

10. Question
ஒரு சொல்லோ தொடரோ இரு பொருள் தருமாறு பாடுவது

 தற்குறிப்பேற்ற அணி
 உவமையணி
 உருவக அணி
 இரட்டுறமொழிதல் அணி🌴

11. Question
தமிழரின் வாழ்வியல் கருவூலம் எது?

 புறநானூறு🌴
 திருக்குறள்
 நாலடியார்
 இனியவை நாற்பது

12. Question
சேர்த்து எழுதுக
பனை+ஓலை

 பனையோலை🌴
 பனைஓலை
 பனைவோலை
 பனைவ்வோலை

13. Question
பெரிய புராணத்தை அருளிய சேக்கிழார் பிறந்த தற்போதைய மாவட்டம் எது?

 சென்னை
 கடலூர்
 விழுப்புரம்
 காஞ்சிபுரம்√

14. Question
“நாடகச் சாலையொத்த நற்கலாசாலை யொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து” என்று கூறியவர்

 பாரதியார்
 நாமக்கல் கவிஞர்
 சங்கரதாசு சுவாமிகள்
 கவிமணி தேசிக விநாயகனார்🌴

15. Question
எச்சொல் வேர்ச் சொல் அல்ல?

 அடி
 இரு
 அறி
 இனிது🌴

16. Question
யானையின் உருவத்தை செதுக்குவதில் கைதேர்ந்த சிற்பிகள் யார்?

 சேரர் காலத்துச் சிற்பங்கள்
 பல்லவர் காலத்துச் சிற்பங்கள்🌴
 சோழர் காலத்துச் சிற்பங்கள்
 நாயக்கர் காலத்துச் சிற்பங்கள்

17. Question
நடுவண் அரசு உ.வே.சா அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பாராட்டி அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு எது?

 2006🌴
 2007
 2008
 2010

18. Question
சிற்பக் கலை குறித்து தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கம் வெளியிட்ட நூலைக் கண்டறிக?

 சிற்ப மலை
 சிற்பச் சிலை
 செந்நூல் சிற்பம்
 சிற்பச் செந்நூல்🌴

19. Question
இராம நாடகத்தை இயற்றியவர் யார்?

 விசுவநாத சாஸ்திரியார்
 அருணாச்சலக் கவிராயர்🌴
 இராமச்சந்திர கவிராயர்
 மாரிமுத்துப் பிள்ளை

20. Question
இரட்டைக் காப்பியம் என வழங்கும் நூல்கள் யாவை?

 சிலப்பதிகாரம்,மணிமேகலை√
 சீவக சிந்தாமணி, மணிமேகலை
 குண்டலகேசி, நீலகேசி
 குண்டலகேசி, சூளாமணி

21. Question
ஆனந்தரங்கர் நாட்குறிப்பைத் தரவாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் எது?

 சஞ்சாரம்
 அஞ்ஞாடி
 நாளை ஒரு பூ மலரும்
 வானம் வசப்படும்🌺

22. Question
ஒப்புரவு என்பதன் பொருள்

 அடக்கமுடைமை
 பண்புடையது
 ஊருக்கு உதவுவது🌺
 செல்வமுடையது

23. Question
சொற்களை ஒழுங்குபடுத்துக
“ஆற்றல் நிரம்பிய சொற்கள் கவிதை தாமாகப் பொங்கி வழிவதுதான்”

 தாமாகப் பொங்கி வழிவதுதான் கவிதை ஆற்றல் நிரம்பிய சொற்கள்
 ஆற்றல் நிரம்பிய கவிதை சொற்கள் தாமாகப் பொங்கி வழிவது தான்
 ஆற்றல் கவிதை நிரம்பிய சொற்கள் தாமாகப் பொங்கி வழிவது தான்
 ஆற்றல் நிரம்பிய சொற்கள் தாமாகப் பொங்கி வழிவது தான் கவிதை🌺

24. Question
பாரதிதாசன் எழுதிய பிசிராந்தையார் எனும் நூல்

 கவிதை
 உரைநடை
 சிறுகதை
 நாடகம்🌺

25. Question
நன்னூல் எவ்வகை நூல்?

 செய்தி வாக்கியம்
 விழைவு வாக்கியம்
 கட்டளை வாக்கியம்
 வினா வாக்கியம்🌺

26. Question
பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை எழுதிய மற்றொரு தூது நூல் எது?

 தென்றல் விடு தூது🌴
 அன்னம் விடு தூது
 தமிழ் விடு தூது
 முகில் விடு தூது

27. Question
வழூஉச் சொல்லற்ற தொடர் எது?

 வலது பக்கம் சுவறில் எழுதாதே
 வலப் பக்கச் சுவரில் எழுதாதே🌺
 வலப் பக்கச் சுவற்றில் எழுதாதே
 வலப் பக்கச் சுவறில் எழுதாதே

28. Question
தைத்திங்கள் என்பது ___ பெயரைக் குறிக்கும்

 இடப்பெயர்
 மாதப்பெயர்
 காலப்பெயர்🌺
 பொருட்பெயர்

29. Question
தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தமிழன்னை விருது பெற்ற பெருமைக்குரியவர் யார்?

 கவிக்கோ அப்துல் ரகுமான்🔥
 வாணிதாசன்
 கண்ணதாசன்
 வண்ணதாசன்

30. Question
நேற்று மழை பெய்தது; அதனால், ஏரி குளங்கள் நிரம்பின- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.

 தொடர் வாக்கியம்🌺
 கலவை வாக்கியம்
 கட்டளை வாக்கியம்
 தனிநிலை வாக்கியம்

31. Question
அண்ணல் அம்பேத்கரை “பகுத்தறிவு செம்மல், மக்களின் மாபெரும் வழிகாட்டி” என புகழாரம் சூட்டியவர்

 ஜவகர்லால் நேரு
 தந்தை பெரியார்🔥
 இராஜேந்திர பிரசாத்
 மூதறிஞர் ராஜாஜி

32. Question
“படுவிடம்” -இதில் பயின்றுள்ள தொகைநிலைத்தொடர்

 வினைத்தொகை🔥
 பண்புத்தொகை
 உவமைத்தொகை
 உம்மைத்தொகை

33. Question
தமிழ் வழங்கிய எல்லையினை
“வேங்கடம் குமரி தீம்புனற் பௌவமென்
றந்நான் கெல்லை…….” என்று வரையறுத்தவர்

 காக்கைப்பாடினியார்🔥
 ஔவையார்
 இளங்கீரனார்
 கபிலர்

34. Question
“இரட்டைக் கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை….” என்று உவமை மரபில் புதுமைகளைச் சேர்த்தவர் யார்?

 சுப்புரத்தின தாசன்🔥
 பாரதிதாசன்
 கண்ணதாசன்
 வாணிதாசன்

35. Question
புறநானூற்றில் உள்ள புறத்திணைகளின் எண்ணிக்கை எத்தனை?

 5
 11🔥
 10
 7

36. Question
“வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களில் ஒருவராக விளங்குகின்றார்” எனப் புகழ்ந்தவர் யார்?

 பரிதிமாற்கலைஞர்
 ரா.பி. சேதுப்பிள்ளை🔥
 ந.மு. வேங்கடசாமி
 வையாபுரி

37. Question
தஞ்சை வேதநாயக சாத்திரியார் -அவர்களின் ஆசிரியர் யார்?

 சுவார்ட்ஸ் பாதிரியார்🔥
 கால்டுவெல்
 வீரமாமுனிவர்
 எச்.ஏ. கிருட்டினப்பிள்ளை

38. Question
இலக்கண குறிப்பு வரைக
பசிக்கயிறு

 உவமை
 அன்மொழித்தொகை
 உருவகம்🔥
 உம்மைத்தொகை

39. Question
வந்தான்- வேர்ச்சொல்லைத் தருக.
 வார்
 வா🔥
 வந்து
 வரு

40. Question
தமிழ் இனத்தைச் சேர்ந்தோர் குடியரசுத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடுகள்

 கனடா, மலேசியா
 பிரிட்டன், ரஷ்யா
 தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர்
 சிங்கப்பூர், மொரீசியஸ்🔥

41. Question
ஆர்க்காடு என்பது எந்த மரங்கள் சூழ்ந்த பகுதி?

 ஆல மரங்கள்
 மாமரங்கள்
 அத்தி மரங்கள்🔥
 ஆர்க் மரங்கள்

42. Question
பரிதிமாற்கலைஞரின் தனிப்பாசுரத்தொகை என்னும் நூலினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?

 வில்லியம் ஜோன்ஸ்
 பேராசிரியர் ராஸ்க்
 ஜி.யு.போப்🔥
 கால்டுவெல்

43. Question
இயைபுத் தொடையில் அமைந்த சொற்களை அறிக

“நீல முடி தரித்த பல மலைசேர் நாடு
நீரமுத மெனப்பாய்ந்து நிரம்பு நாடு”

 நீலமுடி-நீரமுத
 நீலமுடி- மலைசேர்
 நிரம்பு-நாடு
 நாடு- நாடு🔥

44. Question
“தமிழுக்குக் கதி” என போற்றப்படும் இரு நூல்கள்

 திருக்குறளும், நாலடியாரும்
 திருக்குறளும், திருவாசகமும்
 திருக்குறளும், கம்பராமாயணமும்🔥
 சிலப்பதிகாரமும், மணிமேகலையும்

45. Question
பாடலில் வரும் திணையைக் கண்டுபிடி
“வான் உட்கும் வடிநீண் மதில்,
மல்லல் மூதூர் வய வேந்தே!

 பாடாண்திணை
 பொதுவியல் திணை🔥
 வாகைத் திணை
 தும்பைத் திணை

46. Question
சுவை பயன்
(a) இனிப்பு 1. இனிமை
(b) துவர்ப்பு 2. வளம்
(3) புளிப்பு 3. உணர்வு
(4) கார்ப்பு 4. ஆற்றல்

 (a)-1, (b)-4, (c)-3, (d)-2
 (a)-2, (b)-4, (c)-1, (d)-3🔥
 (a)-3, (b)-2, (c)-1, (d)-4
 (a)-4, (b)-3, (c)-2, (d)-1

47. Question
“நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்” – இக்கூற்றில் “நடலை” என்னும் சொல்லின் பொருள் அறிக?

 நோய்
 பாதுகாப்பு
 துன்பம்🔥
 எமன்

48. Question
வழுஉச் சொல் இல்லாத தொடரை எழுதுக.

 சென்னைக்கு அருகாமையில் இருப்பது மதுரை அல்ல
 சென்னைக்குப் பக்கத்தில் இருப்பது மதுரை இல்லை
 சென்னைக்கு அருகாமையில் இருப்பது மதுரை அல்லை
 சென்னைக்கு அருகில் இருப்பது மதுரை அன்று🔥

49. Question
தாயொப்பப் பேசும் மகள் என்ற உவமைத் தொடருக்குப் பொருள் தருக?

 தந்தையைப் போன்று பேசுதல்
 தங்கையைப் போன்று பேசுதல்
 தாயைப் போன்று பேசுதல்🔥
 தம்பியைப் போன்று பேசுதல்

50. Question
உத்தரகாண்டம் என்னும் பகுதியை இயற்றியவர்

 ஒட்டக்கூத்தர்🔥
 புகழேந்திப்புலவர்
 கம்பர்
 வான்மீகி

51. Question
பொருத்துக
நூல் – ஆசிரியர்
(a) குயில்பாட்டு – 1. அப்துல் ரகுமான்
(b) அழகின் சிரிப்பு – 2. சுரதா
(c) துறைமுகம் – 3. பாரதியார்
(d) பால்வீதி – 4. பாரதிதாசன்

 (a)-3, (b)-4, (c)-2, (d)-1🔥
 (a)-3, (b)-4, (c)-1, (d)-2
 (a)-3, (b)-1, (c)-2, (d)-4
 (a)-1, (b)-2, (c)-3, (d)-4

52. Question
பாஞ்சாலி சபதத்தில் இடம் பெற்ற பாடல்களின் எண்ணிக்கை யாது?

 401
 405
 410
 412🔥

53. Question
பொருந்தா இணையைத் தேர்வு செய்க

 திருத்தக்கத்தேவர் -வளையாபதி🔥
 இளங்கோவடிகள் -சிலப்பதிகாரம்
 நாதகுத்தனார் -குண்டலகேசி
 சீத்தலை சாத்தனார் -மணிமேகலை

54. Question
பிரஞ்சுக் குடியரசுத் தலைவரால் செவாலியர் விருது பெற்றவர்

 பாரதிதாசன்
 வாணிதாசன்🔥
 முடியரசன்
 சுரதா

55. Question
“கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்து” என்ற தாலாட்டுப் பாடலைப் பாடியவர் யார்?

 இராமலிங்கப் பிள்ளை
 கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை🔥
 பால்வண்ணப் பிள்ளை
 பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

56. Question
தில்லையாடி வள்ளியம்மை – இதில் தில்லையாடி என்பது

 வள்ளியம்மை பிறந்த ஊர்
 வள்ளியம்மையின் தாயார் பிறந்த ஊர்🔥
 வள்ளியம்மையின் தந்தை பிறந்த ஊர்
 வள்ளியம்மை வாழ்ந்த ஊர்

57. Question
“தமிழ் மொழியை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்” என்று கூறியவர் யார்?

 தேவநேயப்பாவாணர்🔥
 பரிதிமாற்கலைஞர்
 குணங்குடி மஸ்தான் சாகிபு
 மகாகவி பாரதியார்

58. Question
“மா”- ஓரெழுத்து ஒருமொழியின் பொருளை அறிக

 யானை
 விலங்கு🔥
 மாடு
 காடு

59. Question
ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்லை தேர்வு செய்க

“இன்கம் டாக்ஸ் ஆபீஸ்” Inccometax office

 வருமானத்துறை அலுவலகம்
 வருமான வரி அலுவலகம்🔥
 வருமான அலுவலகம்
 வருவாய் அலுவலகம்

60. Question
நாலடியாரைத் தொகுத்தவர்

 கபிலர்
 அணிலாடு முன்றிலார்
 பதுமனார்🌴
 முன்றுறையரையனார்

61. Question
அரும்புதல் – எதிர்ச்சொல் தருக.

 மயங்குதல்
 விரிதல்
 ஓடுதல்
 மெலிதல்🔥

62. Question
“மலை உருவி மரம் உருவி
மண் உருவிற்று ஒரு வாளி”
இவ்வரி இடம்பெற்ற நூல்

 மகாபாரதம்
 கலிங்கத்துப்பரணி
 பெரியபுராணம்
 இராமாயணம்🌴

63. Question
மனித மூளையில் தண்ணீரின் அளவு எத்தனை சதவீதம் கொண்டது

 60%
 70%
 80%🌴
 90%

64. Question
அடிக்கோடிட்ட சொற்களுக்கு இலக்கண குறிப்பு தருக
அந்த ஏழைக் குழந்தையின் கண்கள் குழிந்தாழ்ந்து காணப்படுகிறது

 பெயரெச்சம்
 ஒருபொருட் பன்மொழி🔥
 வினையெச்சம்
 முற்றெச்சம்

65. Question
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
நாட்டுக்கு தேவை-

 அரன்
 அறன்
 அறண்
 அரண்🔥

66. Question
கூற்று1: நீலகேசி ஒரு சமண சமயக் காப்பியம்
கூற்று2: குண்டலகேசி எனும் நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்டது நீலகேசி

 கூற்று1 மட்டும் சரி
 கூற்று இரண்டும் சரி🔥
 கூற்று 2 மட்டும் சரி
 கூற்று இரண்டும் தவறு

67. Question
நாலடியார் என்னும் நூலை பாடியவர்கள் யார்?

 சமண முனிவர்🔥
 வைணவர்கள்
 நாயன்மார்கள்
 பௌத்தத் துறவிகள்

68. Question
அல்லலுற்று ஆற்றாது அழுவாளைக் கண்டு ஏங்கி
மல்லல் மதுரையார் எல்லாருந் தாம் மயங்கி
-இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?

 மணிமேகலை
 குண்டலகேசி
 சிலப்பதிகாரம்🌴
 வளையாபதி

69. Question
அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று
இதில் அன்பகத்து இல்லா என்பதனை எவ்வாறு பிரிக்கலாம்

 அன்பு +பகத்து +இல்லா
 அன்பு +அகத்து +இலா
 அன்பு + பகம் +இல்லா
 அன்பு +அகத்து+ இல்லா🔥

70. Question
வள்ளை – எனும் இன்னிசைப் பாடல் யாரால் பாடப்படும்?

 பாணர்கள்
 பெண்கள்🔥
 ஆடவர்கள்
 குழந்தைகள்

71. Question
குடியரசுத் தலைவர் உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
செய்வினையை செயப்பாட்டு வினையாக மாற்றுக.

 குடியரசுத்தலைவர் உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கினார்
 உலகத் தமிழ் மாநாடு குடியரசுத் தலைவர் தொடங்கினார்
 குடியரசுத் தலைவர் தொடங்கினார் உலகத்தமிழ் மாநாட்டை
 உலகத்தமிழ் மாநாடு குடியரசுத் தலைவரால் தொடங்கி வைக்கப்பெற்றது.🔥

72. Question
காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! – எந்தக்
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!
-இவ்வடிகளில் பயின்றுவரும் நயங்கள்

 மோனை, எதுகை, முரண்
 மோனை, முரண், அந்தாதி
 மோனை, எதுகை, இயைபு🔥
 இயைபு , அளபெடை, மோனை

73. Question
கீழ்காணும் சொற்களை அகர வரிசைப்படுத்துக

சுற்றம் சீர்தூக்கு சிந்தனை சாட்டை சங்கு

 சீர்தூக்கு சங்கு சிந்தனை சாட்டை சுற்றம்
 சிந்தனை சீர்தூக்கு சங்கு சுற்றம் சாட்டை
 சாட்டை சுற்றம் சீர்தூக்கு சிந்தனை சங்கு
 சங்கு சாட்டை சிந்தனை சீர்தூக்கு சுற்றம்🔥

74. Question
“மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர்: புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” என்று பாராட்டப்படுபவர் யார்?

 அப்துல் ரகுமான்🔥
 ந. பிச்சமூர்த்தி
 தமிழ் ஒளி
 சுத்தானந்த பாரதியார்

75. Question
“நன்றி நன்றெனப் போற்றியே நடந்தது வேங்கை” இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்

 கம்பராமாயணம்
 பெரிய புராணம்
 சீறாப்புராணம்🔥
 தேவாரம்

76. Question
ஒன்றுகொலாம் என்னும் திருப்பதிகம் பாடியவர் யார்?

 சுந்தரர்
 திருஞானசம்பந்தர்
 திருநாவுக்கரசர்🔥
 மாணிக்கவாசகர்

77. Question
“கொன்ஸ்டான்” என்னும் இத்தாலி மொழிச் சொல்லின் பொருள் யாது?

 அஞ்சுபவன்
 அடக்கமுடையவன்
 அஞ்சாதவன்🌴
 அறியாதவன்

78. Question
கூற்று1:’கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி’ என்ற புலவர் கடற்செலவு ஒன்றில் இறந்து போனவர்.
கூற்று2: இவர் புறநானூற்றில் ஒரு பாடலையும், பரிபாடலில் ஒரு பாடலையும் ,இயற்றியுள்ளார்

 கூற்று 2 மட்டும் சரி
 கூற்று 1 மட்டும் சரி
 கூற்று இரண்டும் சரி🔥
 கூற்று இரண்டும் தவறு

79. Question
அரிவடிவு மாய்ப்பின் னரன்வடிவு மாகி… என்ற தொடரில் அரி என்பதன் பொருள் யாது?

 மனித வடிவம்
 சிங்கம்🌺
 நரசிங்கம்
 தேவர்கள்

80. Question
சங்க இலக்கியங்களின் மொத்த அடிகள் எத்தனை?

 26,350🌺
 26,375
 26,400
 26,411

81. Question
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
பாரதிதாசன் புரட்சிக் கவிஞர் என்று அழைக்கப்படுகிறார்.

 பாரதிதாசன் புரட்சிக் கவிஞர் என அழைக்கப்படுகிறாரா?
 புரட்சிக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
 பாரதிதாசன் புரட்சிக் கவி என அழைக்கப்படுவதேன்?
 பாரதிதாசன் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?🌺

82. Question
காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று அன்புடன் அழைக்கப்பட்டவர்

 தில்லையாடி வள்ளியம்மை
 அம்புஜத்தம்மாள்🌺
 வேலுநாச்சியார்
 ஜான்சிராணி

83. Question
காமராசர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு எது?

 1934
 1939
 1937🌺
 1942

84. Question
ஜி.யு. போப் பாய்மரக் கப்பலில் சென்னை வந்த எட்டுத் திங்களும் ______, _____ ஆகிய மொழி நூல்களைப் படித்தார்

 தமிழ், ஆங்கிலம்
 வடமொழி, கன்னடம்
 தெலுங்கு, தமிழ்
 வடமொழி, தமிழ்🌺

85. Question
அகர வரிசையில் எழுதுக
மொழிபெயர்ப்பு, முன்னீர், மேடுபள்ளம், மனத்துயர், மீமிசை
 முந்நீர், மனத்துயர், மீமிசை, மொழிபெயர்ப்பு, மேடுபள்ளம்
 மேடுபள்ளம் , முந்நீர், மனத்துயர், மீமிசை, மொழிபெயர்ப்பு
 மீமிசை, முந்நீர், மொழிபெயர்ப்பு, மனத்துயர், மேடுபள்ளம்
 மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடுபள்ளம், மொழிபெயர்ப்பு🌺

86. Question
ஆறுமுக நாவலரை “வசன நடை கைவந்த வல்லாளர்” எனப் பாராட்டியவர் யார்?

 மறைமலைஅடிகள்
 திரு.வி.க
 பரிதிமாற் கலைஞர்🌺
 குணங்குடி மஸ்தான் சாகிபு

87. Question
பொருந்தாச் சொல்லைத் தேர்வு செய்க

 உள்ளம்
 அழகு🔥
 வீடு
 இடம்

88. Question
எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது ___என்று பேரறிஞர் அண்ணா கூறினார்

 கலிங்கத்துப்பரணி🔥
 திருக்குறள்
 கம்பராமாயணம்
 குறுந்தொகை

89. Question
திருக்குறளின் அழியாத் தன்மையைப் பறை சாற்றும் செய்யுள் நூல் எது?

 நாலடியார்
 பழமொழி
 திருவள்ளுவமாலை🌺
 திரிகடுகம்

90. Question
அணித்து- எதிர்ச் சொல்லைக் கண்டறிக

 தொலைவில்🔥
 உய்த்து
 கொடுத்து
 அளத்தல்

91. Question
“அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்” -இவ்வடிகளில் அமைந்துள்ளது

 மேற்கதுவாய் மோனை🔥
 கீழ்க்கதுவாய் மோனை
 கூழை மோனை
 பொழிப்பு மோனை

92. Question
நாயக்கர் காலத்தில் சிறந்து விளங்கிய சிற்பக்கலை எது?

 கற்சிற்பம்
 செப்புத் திருமேனி
 மரச் சிற்பம்
 தந்தச் சிற்பக் கலை🌺

93. Question
‘சமரச சன்மார்க்க சங்கத்தை’ தோற்றுவித்தவர்

 சுத்தானந்த பாரதியார்
 ராமகிருஷ்ண பரமஹம்சர்
 மறைமலை அடிகளார்
 இராமலிங்க அடிகளார்🌺

94. Question
சுந்தரர் எவ்வரசரால் மகன்மை கொண்டு வளர்க்கப்பட்டார்?

 நரசிங்கமுனையரையர்🌺
 நரசிம்மவர்மன்
 நந்திவர்மன்
 நரசிங்க நாதர்

95. Question
மணிமேகலையின் தோழி

 தீவதிலகை
 சுதமதி🌺
 மாதரி
 வீணாபதி

96. Question
“தமிழை வளர்க்க வேண்டும் என்றால் பிற மொழியை வெறுக்க வேண்டும் என்பது பொருளன்று” என்று கூறியவர்

 மூ.வ
 திரு.வி.கா🌺
 பாரதிதாசன்
 கவிஞர் சுரதா

97. Question
“பட்டிமண்டபம்” என்பது சமய கருத்துக்கள் விவாதிக்கும் இடம் என்று கூறும் நூல்

 சிலப்பதிகாரம்
 மணிமேகலை🌺
 நீலகேசி
 குண்டலகேசி

98. Question
சொற்களை ஒழுங்குபடுத்துக
வியநகர் குறைபடாக் கொளக் கூழுடை கொளக்

 கொளக் கொளக் கூழுடை வியனகர் குறைபடாக்
 கூழுடை வியனகர் குறைபடாக் கொளக்கொளக்
 கொள்ளக் கூழுடைய வியனகர் கொளக் குறைபடக்
 கொளக் கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்🌺

99. Question
சுவீடன் நாட்டின் போர் லாகா்க்விஸ்ட் என்னும் சிறுகதைகளை தமிழில் மொழி பெயர்த்தவர்

 ஜி.யு. போப்
 ஜி. குப்புசாமி🌺
 லெட்சுமி
 ப.ஜெயப்பிரகாஷ்

100. Question
அரிசியும், மயில் தோகையும், சந்தனமும் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட நாடுகள்

 கிரேக்கம், உரோமாபுரி, சீனா
 உரோமாபுரி, எகிப்து, சீனா
 கிரேக்கம், உரோமாபுரி, எகிப்து🌺
 உரோமபுரி, எகிப்து, அரேபியா
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY