Ads Right Header

ஆறாம் வகுப்பு தமிழ் இயல் - 6.

 


6.1 நானிலம் படைத்தவன்

Question 1.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலுக்கு உரிய நிலங்களை அறிந்து எழுதுக.
Answer:
(i) குறிஞ்சி – மலையும் மலையைச் சார்ந்த இடங்கள்.
(ii) முல்லை – காடும் காடு சார்ந்த இடங்கள்.
(iii) மருதம் – வயலும் வயல் சார்ந்த இடங்கள்.
(iv) நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடங்கள்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
போர்க்களத்தில் வெளிப்படும் குணம் ……………..
அ) மகிழ்ச்சி
ஆ) துன்பம்
இ) வீரம்
ஈ) அழுகை
Answer:
இ) வீரம்

Question 2.
கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) கல் + அடுத்து
ஆ) கல் + எடுத்து
இ) கல் + லடுத்து
ஈ) கல் + லெடுத்து
Answer:
ஆ) கல் + எடுத்து

Question 3.
நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………….
அ) நா + னிலம்
ஆ) நான்கு + நிலம்
இ) நா + நிலம்
ஈ) நான் + நிலம்
Answer:
ஆ) நான்கு + நிலம்

Question 4.
நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……….
அ) நாடென்ற
ஆ) நாடன்ற
இ) நாடி என்ற
ஈ) நாடு அன்ற
Answer:
அ) நாடென்ற

Question 5.
கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………..
அ) கலம்ஏ றி
ஆ) கலமறி
இ) கலன் ஏறி
ஈ) கலமேறி
Answer:
ஈ) கலமேறி

சொற்றொடரில் அமைத்து எழுதுக

அ) மாநிலம் – என் நண்பன் ஓட்டப்பந்தயத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளான்.
ஆ) கடல் – கடல் பரந்து விரிந்துள்ளதால் அதற்குப் பரவை என்று பெயர்.
இ) பண்டங்கள் – தின்பண்டங்களை வீணாக்கக்கூடாது.

நயம் அறிக

Question 1.
நானிலம் படைத்தவன் பாடலில் இடம் பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக. எதுகை :
Answer:
ல்லெடுத்து – மல்லெடுத்த
ராக்கி – பேராக்கி
மாநிலத்தில் – நானிலத்தை
 – சூழும்
முக்குளித்தான் – எக்களிப்பு
ண்டங்கள் – கண்டங்கள்
ஞ்சானம் – அஞ்சுவதை

Question 2.
நானிலம் படைத்தவன் பாடலில் இடம் பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
மோனை :
அஞ்சாமை – அஞ்சுவதை

குறுவினா

Question 1.
நான்கு நிலங்கள் என்பன யாவை?
Answer:
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகியவை நான்கு நிலங்கள் ஆகும்.

Question 2.
தமிழன் எதற்கு அஞ்சினான்?
Answer:
தமிழன், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சினான்.

Question 3.
தமிழன் எதற்காகக் கண்டங்களைச் சுற்றி வந்தான்?
Answer:
ஏலம், மிளகு ஆகியவற்றைப் பெருமகிழ்ச்சியோடு கப்பல்களில் ஏற்றிக் கண்டங்கள் தோறும் அனுப்பி வணிகம் செய்வதற்காகக் கண்டங்களைச் சுற்றி வந்தான்.

சிறுவினா

Question 1.
தமிழன் தான் வாழ்ந்த நாட்டினை எவ்வாறு உருவாக்கினான்?
Answer:
தமிழன் தான் வாழ்ந்த நாட்டினை உருவாக்கின விதம் :
(i) தமிழன் கற்களும் முட்களும் நிறைந்திருந்த பெரிய நிலப்பரப்பைத் திருத்திப் பண்படுத்தினான்.
(ii) தனது உடல் வலிமையால் வளத்தைப் பெருக்கினான்.
(iii) ஊர், நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையைப் பெற்றான்.
(iv) முல்லை , மருதம், குறிஞ்சி, நெய்தல் என நிலத்தை நால்வகைப்படுத்தினான். இதனால் நாகரிக மனிதன் ஆனான்.

Question 2.
தமிழனின் செயல்களாக முடியரசன் கூறுவன யாவை?
Answer:
தமிழனின் செயல்களாக முடியரசன் கூறுவன :
(i) பழந்தமிழன் ஆழமான கடல்களைக் கடந்து பயணம் செய்தான். அச்சம் தரும் போர்களிலும் எளிதாக வெற்றி கண்டான்.
(ii) பனிசூழ்ந்த இமயமலையில் தன் வெற்றிக்கொடியை நாட்டினான். ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தான்.
(iii) ஏலம், மிளகு ஆகியவற்றைப் பெருமகிழ்ச்சியோடு கப்பல்களில் ஏற்றிக் கண்டங்கள் தோறும் அனுப்பி வணிகம் செய்தான். கப்பலில் உலகை வலம் வந்தான்.
(iv) தமிழன் எதற்கும் அஞ்சாதவன். ஆனால், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சுவான்.

கூடுதல் வினாக்கள்

Question 1.
முடியரசனின் இயற்பெயர் யாது?
Answer:
முடியரசனின் இயற்பெயர் துரைராசு.

Question 2.
முடியரசன் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
முடியரசன் இயற்றிய நூல்கள் பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை.

Question 3.
முடியரசன் எவ்வாறு பாராட்டப் பெற்றார்?
Answer:
முடியரசன் திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப் பெற்றார்.

பிரித்து எழுதுக.

1. கல்லெடுத்து – கல் + எடுத்து
2. மல்லெடுத்த – மல் + எடுத்த
3. திண்டோள் – திண்மை + தோள்
4. பெருவெளி – பெருமை + வெளி
5. எக்களிப்பு – எ + களிப்பு
6. கலமேறி – கலம் + ஏறி
7. முத்தெடுத்தான் – முத்து + எடுத்தான்
8. நானிலம் – நான்கு + நிலம்

நூல் வெளி
முடியரசனின் இயற்பெயர் துரைராசு. பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியுள்ளார். திராவிட நாட்டின் வானம்பாடி என்றும் கவியரசு என்றும் பாரட்டப்பெற்றவர். இப்பாடல் புதியதொரு விதி செய்வோம் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■


6.2 கடலோடு விளையாடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கதிர்ச் + சுடர்
ஆ) கதிரின் + சுடர்
இ) கதிரவன் + சுடர்
ஈ) கதிர் + சுடர்
Answer:
ஈ) கதிர் + சுடர்

Question 2.
மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மூச்சு + அடக்கி
ஆ) மூச் + அடக்கி
இ) மூச் + சடக்கி
ஈ) மூச்சை + அடக்கி
Answer:
அ) மூச்சு + அடக்கி

Question 3.
பெருமை + வானம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) பெருமைவனம்
ஆ) பெருவானம்
இ) பெருமானம்
ஈ) பேர்வானம்
Answer:
ஆ) பெருவானம்

Question 4.
அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) அடிக்குமலை
ஆ) அடிக்கும் அலை
இ) அடிக்கிலை
ஈ) அடியலை
Answer:
அ) அடிக்குமலை

பாடல் வரிகளுக்கு ஏற்பப் பொருத்துக

அ) விடிவெள்ளி – 1. பஞ்சுமெத்தை
ஆ) மணல் – 2. ஊஞ்சல்
இ) புயல் – 3. போர்வை
ஈ) பனிமூட்டம் – 4. விளக்கு
Answer:
அ) 4
ஆ) 1
இ) 2
ஈ) 3

குறுவினா

Question 1.
அலையையும் மேகத்தையும் மீனவர்கள் என்னவாகக் கருதுகின்றனர்?
Answer:
மீனவர்கள் அலையைத் தோழனாகவும் மேகத்தைக் குடையாகவும் கருதுகின்றனர்.

Question 2.
கடல் பாட்டில் கண்ணாடியாகவும் தலைவனாகவும் குறிப்பிடப்படுவன யாவை?
Answer:
கடல் பாட்டில் முழுநிலவு கண்ணாடியாகவும், பெருவானம் தலைவனாகவும் குறிப்பிடப்படுகின்றன.

கூடுதல் வினாக்கள்

Question 1.
வாய்மொழி இலக்கியம் என்றால் என்ன?
Answer:
உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் 3 பாடலாகும். காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர்.

Question 2.
நீ அறிந்த நாட்டுப்புறப் பாடல்களின் பெயர்களை எழுதுக.
Answer:
நடவுப் பாட்டு, தாலாட்டுப் பாட்டு, வள்ளைப் பாட்டு, விடுகதைப் பாட்டு, ஏற்றப்பாட்டு, 5 பரிகாசப் பாட்டு, கும்மிப் பாட்டு, கண்ண ன் பாட்டு, ஏசல் பாட்டு, ஒப்பாரிப் பாட்டு.

Question 3.
நெய்தல் திணை பற்றி எழுதுக.
Answer:
நிலம் : கடலும் கடல் சார்ந்த இடமும்
மக்கள் : பரதர், பரத்தியர், எயினர், எயிற்றியர்
தொழில்: மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்
பூ : தாழம்பூ.

நூல் வெளி
உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடலாகும். காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை ‘வாய்மொழி இலக்கியம்’ என்பர். ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழில் பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும் நாட்டுப்புறப் பாடல்களுள் அடங்கும். இப்பாடல் சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■


6.3 வளரும் வணிகம்

ஒவ்வொரு ஊரிலும் கிடைக்கும் சிறப்புப் பொருள்களின் பெயர்களை அட்டவணைப்படுத்துக.
Answer:
சிறப்புப் பொருள்கள் :
(i) மதுரை மல்லி
(ii) திருப்பதி லட்டு
(iii) திருநெல்வேலி அல்வா
(iv) திண்டுக்கல் பூட்டு
(v) மணப்பாறை முறுக்கு
(vi) சேலம் மாம்பழம்
(vii) காஞ்சிபுரம் பட்டு
(viii) பழனி பஞ்சாமிர்தம்
(ix) பொள்ளாச்சி இளநீர்
(x) ஊட்டி ரோஜா
(xi) காஞ்சிபுரம் இட்லி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர்……………
அ) நுகர்வோர்
ஆ) தொழிலாளி
இ) முதலீட்டாளர்
ஈ) நெசவாளி
Answer:
அ) நுகர்வோர்

Question 2.
வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) வணிகசாத்து
ஆ) வணிகம்சாத்து
இ) வணிகச்சாத்து
ஈ) வணிகத்துசாத்து
Answer:
இ) வணிகச்சாத்து

Question 3.
பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) பண்டமாற்று
ஆ) பண்டம்மாற்று
இ) பண்மாற்று
ஈ) பண்டுமாற்று
Answer:
அ) பண்டமாற்ற

Question 4.
வண்ணப்படங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) வண்ண ம் + படங்கள்
ஆ) வண்ண ப் + படங்கள்
இ) வண்ண + படங்கள்
ஈ) வண்ண மான + படங்கள்
Answer:
அ) வண்ண ம்+ படங்கள்

Question 5.
விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) விரி + வடைந்த
ஆ) விரி + அடைந்த
இ) விரிவு + அடைந்த
ஈ) விரிவ் + அடைந்த
Answer:
இ) விரிவு + அடைந்த

பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக

அ) வணிகம் – ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து வாங்குவதும் விற்பதும் வணிகம்.
ஆ) ஏற்றுமதி – பழங்காலத்தில் மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டது.
இ) சில்லறை தற்போது சில்லறை தட்டுப்பாடு அதிகமாகி விட்டது.
ஈ) கப்பல் – கப்பல்கள் வந்து நிற்கும் இடம் துறைமுகம்.

குறுவினா

Question 1.
வணிகம் என்றால் என்ன?
Answer:
ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து வாங்குவதும், பிறருக்கு விற்பதும் வணிகம் ஆகும்.

Question 2.
பண்டமாற்று முறைக்கு எடுத்துக்காட்டுத் தருக.
Answer:
நம்மிடம் கூடுதலாக இருக்கும் பொருள்களைக் கொடுத்து நமக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வது பண்டமாற்று வணிகம் எனப்படும்.

Question 3.
சிறுவணிகப் பொருட்கள் யாவை?
Answer:
பால், கீரை, காய்கறிகள் போன்றவை சிறுவணிகப் பொருட்கள் ஆகும்.

பழந்தமிழர் ஏற்றுமதி, இறக்குமதி செய்த பொருள்கள் எவை?
Answer:
பழந்தமிழர் ஏற்றுமதி செய்த பொருள்கள் :
தேக்கு, மயில்தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு.

பழந்தமிழர் இறக்குமதி செய்த பொருள்கள் :
சீனத்திலிருந்து கண்ணாடி, கற்பூரம், பட்டு, அரேபியாவிலிருந்து குதிரைகள்.

கூடுதல் வினாக்கள்

Question 1.
வணிகம் குறித்து கூறும் இலக்கியங்கள் யாவை?
Answer:
(i) தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து
பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சுற்றி
……………….
உமணர் போகலும். – நற்றிணை – 183
(ii) பாலோடு வந்து கூழொடு பெயரும்………….. – குறுந்தொகை – 23
(iii) பொன்னோடு வந்து கறியொடு பெயரும்………… – அகநானூறு – 149

Question 2.
வணிகத்தின் வகைகளையும் அவ்வகையில் நடைபெறும் வணிகம் பற்றியும் எழுதுக.
Answer:
(i) வணிகத்தைத் தரைவழி வணிகம், நீர்வழி வணிகம் எனப் பிரிக்கலாம். தரைவழியாகப் பொருள்களைக் கொண்டு செல்ல எருது, கழுதை, குதிரை போன்ற விலங்குகளும் E வண்டிகளும் பயன்படுத்தப்பட்டன. வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்குச் செல்லும்போது குழுவாகவே செல்வார்கள். இக்குழுவை – ‘வணிகச்சாத்து’ என்பர்.

(ii) கடல்வழியாகக் கப்பல்கள் மூலம் பொருள்களை அனுப்புவதும் வரவழைப்பதும் நீர்வழி வணிகம் ஆகும். கப்பல்கள் வந்து நிற்கும் இடங்கள் துறைமுகங்கள் ஆகும். துறைமுக நகரங்கள் பட்டினம்’ என்றும் ‘பாக்கம்’ என்றும் குறிக்கப்பட்டன.

(iii) தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாகப் பூம்புகார் விளங்கியது. அவ்வூர்த் துறைமுகத்தில் பல்வேறு நாட்டுக் கப்பல்கள் தத்தம் நாட்டுக் கொடிகளோடு வந்து நின்றன. அவற்றின் மூலம் வெளிநாட்டுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. தமிழ்நாட்டுப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

(iv) வணிகத்தைத் தனிநபர் வணிகம், நிறுவன வணிகம் என்றும் பிரிக்கலாம். தனிநபரால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் வணிகம் தனிநபர் வணிகம் ஆகும். ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து முதலீடு செய்து வணிகம் நடத்துவது நிறுவன வணிகம் ஆகும்.

Question 3.
இணையவழி வணிகம் பற்றி எழுதுக.
Answer:
(i) கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்க நேரம் இல்லாதவர்களுக்கு இணையவழி வணிகம் உதவுகிறது. இணையத்தளம் மூலம் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பல உள்ளன.

(ii) இவற்றின் இணையத்தளப் பக்கத்தில் நமக்குத் தேவையான பொருள்களைப் பற்றிய விவரங்கள் இருக்கும். பொருள்களின் தரம், விலை, சிறப்பு ஆகியவற்றைப் பிற நிறுவன பொருள்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். நமக்குப் பிடித்த பொருள்களை நம் வீட்டிற்கே வரவழைக்கலாம்.

(iii) பொருளைப் பெற்றுக் கொண்ட பிறகு பணம் செலுத்தலாம். மின்னணுப் பரிமாற்றம் மூலமும் பணத்தைச் செலுத்தலாம். வணிகம் பண்டமாற்று முறையாகத் தொடங்கியது.

(iv) பணத்தைப் பயன்படுத்தும் முறையாக வளர்ந்தது. இன்று மின்னணுப் பரிமாற்றம் செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

6.4 உழைப்பே மூலதனம்

சுருக்கி எழுதுக

Question 1.
உழைப்பே மூலதனம் கதையைச் சுருக்கி எழுதுக.
Answer:
முன்னுரை :
‘பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்’ என்பது ஔவையாரின் அறிவுரை, பணத்தைப் பயன்படுத்தாமல் வைத்திருப்பது மடமை ஆகும். பணத்தைக் கொண்டு ஏதேனும் ஒரு தொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும். பிறருக்கு உதவியாக வாழ வேண்டும். அதுவே பணத்தின் பயன். இக்கருத்தை விளக்கும் கதைதான் உழைப்பே மூலதனம்’

அருளப்பர் விடைபெற்றுச் செல்லல் :
பூங்குளம் என்னும் ஊரில் அருளப்பர் என்னும் வணிகர் இருந்தார். ஒருமுறை அவர் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டி இருந்ததால் தமது பிள்ளைகளான வளவன், அமுதா, எழிலன் ஆகியோருக்குத் தனித்தனியாக ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தார். அதனைக் கவனமாகப் பாதுகாத்துத் தனக்குத் திருப்பித் தரவேண்டும் என்று கூறிவிட்டு வெளிநாட்டுக்குச் சென்று விட்டார்.

பிள்ளைகளின் ஆலோசனை :
“நமது திறமையை எடைபோடவே தந்தை நமக்குப் பணத்தைக் கொடுத்திருக்கிறார்” என்றான் வளவன். “நானும் அப்படித்தான் நினைக்கிறேன்” என்றாள் அமுதா. “நான் அப்படி நினைக்கவில்லை. பணத்தைப் பாதுகாக்கத் தெரிகிறதா என்று பார்க்கவே கொடுத்திருக்கிறார்” என்றான் எழிலன்.

வளவனின் செயல் :
வளவன் உழவுத்தொழிலில் ஆர்வம் உடையவன். தந்தை கொடுத்த பணத்தில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தான். உழுது, பண்படுத்திக் காய்கறித் தோட்டம் அமைத்தான். நாள்தோறும் கவனமுடன் பாதுகாத்தான். தோட்டம் முழுவதும் அவரை, வெண்டை , கத்தரி, பாகற்காய் முதலிய காய்கள் காய்த்துக் குலுங்கின. அவற்றை நகரத்திற்குக் கொண்டு சென்று விற்பனை செய்தான்.

அமுதாவின் செயல் :
அமுதாவிற்கு ஆடு, மாடுகள் வளர்ப்பதில் விருப்பம் அதிகம். தந்தை கொடுத்த பணத்தில் நாட்டுப் பசுக்கள் சிலவற்றை வாங்கினாள். அவற்றை அன்போடு பராமரித்தாள். அவை தந்த பாலை வீடு வீடாகச் சென்று விற்றாள். மேலும் தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றை மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் விற்றுப் பொருள் ஈட்டினாள்.

எழிலனின் செயல் :
எழிலன் தந்தை கொடுத்த பணத்தைப் பத்திரமாக வைத்திருந்து மீண்டும் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என முடிவு செய்தான். வீட்டில் இருந்தால் தொலைந்து விடும் என்பதால் பணத்தைப் பெட்டியில் வைத்து மூடி, அதனை வீட்டின் பின்புறம் குழி தோண்டிப் புதைத்து வைத்தான்.

வளவனை விசாரித்த அருளப்பர் :
அருளப்பர் பயணத்தை முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார். பிள்ளைகளிடம் தான் கொடுத்த பணத்தைப் பற்றி விசாரித்தார். வளவன் வேளாண்மைத் தொழில் செய்ததாகவும் அதிலிருந்து நல்ல வருவாய் வந்ததாகவும் கூறினான். இரண்டு மடங்காக பணம் சேர்ந்துள்ளது என்று கூறி பணத்தைத் தந்தையிடம் கொடுத்தான். மகிழ்ந்த தந்தை “உண்மையும் உழைப்பும் உன்னிடம் உள்ளன. இப்பணத்தில் வேளாண்மையைத் தொடர்ந்து செய்” என்றார்.

அமுதாவின் பதில்:
அமுதா, தான் மாடுகளை வாங்கிப் பராமரித்ததாகவும் அதில் பணம் இரண்டு மடங்காகப் பெருகியுள்ளது என்றும் கூறினாள். மிக்க மகிழ்ச்சி. “இந்தப் பணத்தை எனது 6 பரிசாக நீயே வைத்துக் கொள்” என்றார் அருளப்பர்.

எழிலனின் பதில் :
எழிலன் தனக்குக் கொடுத்த பணத்தைப் பெட்டியில் பத்திரமாக வைத்திருப்பதாகக் கூறினான். தந்தை ஏமாற்றம் அடைந்தார். அவனது முதிர்ச்சி இன்மையைக் கண்டு மனம் வருந்தினார்.

அருளப்பரின் அறிவுரை :
“பணம் என்பது பெட்டியில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய பொருளன்று. அதைப் பயனுள்ள முறையில் தொழில் செய்து முன்னேறுவது மனிதனின் கடமை. நீ கடமையைச் செய்யத் தவறிவிட்டாய். பணத்தையும் பயன்படுத்தவில்லை. காலத்தையும் வீணாக்கிவிட்டாய். என்னுடன் இருந்து தொழிலைக் கற்றுக் கொள்” என்றார்.

முடிவுரை :
எழிலன் தன்னுடைய தவற்றை உணர்ந்தான். தந்தையிடம் தொழில் கற்று முன்னேற வேண்டும் என்று முடிவு செய்தான்.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. என் வீடு ……………. உள்ள து. (அது/அங்கே )
2. தம்பி …………….. வா. (இவர்/இங்கே )
3. நீர் ………………. தேங்கி இருக்கிறது? (அது/எங்கே )
4. யார் …………….. தெரியுமா? (அவர்/யாது)
5. உன் வீடு. …………. அமைந்துள்ளது? (எங்கே என்ன)
Answer:
1. அங்கே
2. இங்கே
3. எங்கே
4. அவர்
5. எங்கே

குறுவினா

Question 1.
சுட்டு எழுத்துகள் என்றால் என்ன? அவை யாவை?
Answer:

சுட்டெழுத்து என்பது ஒரு குறிப்பிட்ட பொருளையோ மனிதரையோ சுட்டிக் காட்டும் பொருளில் வரும் எழுத்தாகும். உயிரெழுத்துகளில் 'அ', 'இ', உ' என்ற மூன்று எழுத்துகளும் சுட்டெழுத்துகள் ஆகும்.


















Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY