Ads Right Header

அறநிலையத்துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்ப உடனடி நடவடிக்கை: ஆணையர் குமரகுருபரன் உத்தரவு!


அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 

இந்து சமய அறநிலையத்துறையில் அடிப்படை பணித்தொகுதியில் அதிகளவு காலியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கு அரசின் பணியாளர் குழு ஒப்புதல் பெற்றால் போதுமானது என ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி

* புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள இணை ஆணையர் அலுவலகங்கள், உதவி ஆணையர் அலுலகங்கள், துணை ஆணையர் (சரிபார்ப்பு) பணியிடங்களுடன் புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் மற்றும் ஆய்வு பிரிவுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள புதிய அலுவலக உதவியாளர் பணியிடங்களை பொறுத்தவரை அவை ஏற்படுத்தப்பட்டு மூன்றாண்டு இன்னும் நிறைவு பெறவில்லை என்பதால் அவற்றை உடன் நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட சார்நிலை அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும்.

* ஏற்கனவே உள்ள அலுவகங்களில் அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் மற்றும் ஓட்டுநர் காலிப் பணியிடங்களைப் பொறுத்தவரை காலியிடம் ஏற்பட்டு மூன்றாண்டு நிறைவு பெறாத பணியிடங்களை நிரப்பிட உடன் நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அலுவர்கள் விவரம் தெரிவிக்க வேண்டும். மேற்கண்ட பணியிடங்கள் தற்காலிக பணி தொகுதியில் இருப்பின் அவற்றிற்கு நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

இந்த பணியிடங்களைப் பொறுத்தவரை நியமன அலுவலர்கள் அந்தந்த அலுவலக தலைவர் என்பதால் இதில் உடனடி கவனம் செலுத்திட அனைத்து அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY