Ads Right Header

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 7.


எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 7.


1. தாய்தந்தை - இலக்கண குறிப்பு?
அ. உருவகம்
ஆ. வினைத்தொகை
இ. உவமைத்தொகை
ஈ. உம்மைத்தொகை

2. சிங்கம் …………………….. யில் வாழும்.
அ) மாயை
ஆ) ஊழி
இ) முழை
ஈ) அலை

3. கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு ………………………
அ) வீரம்
ஆ) அச்சம்
இ) நாணம்
ஈ) மகிழ்ச்சி

4. ‘வெங்கரி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………
அ) வெம் + கரி
ஆ) வெம்மை + கரி
இ) வெண் + கரி
ஈ) வெங் + கரி

5. ‘என்றிருள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
அ) என் + இருள்
ஆ) எட்டு + இருள்
இ) என்ற + இருள்
ஈ) என்று + இருள்

6. ‘போல் + உடன்றன’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………..
அ) போன்றன
ஆ) போலன்றன
இ) போலுடன்றன
ஈ) போல்உடன்றன

7. செயங்கொண்டார் பிறந்த ஊர் ……………………..
அ) ஆலங்குடி
ஆ) தீபங்குடி
இ) மால்குடி
ஈ) லால்குடி

8. கலிங்கத்து பரணி ………………………. வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
அ) 96
ஆ) 24
இ) 95
ஈ) 18

9. தமிழில் முதன் முதலில் தோன்றிய பரணி நூல் ……………………
அ) தக்கயாகப்பரணி
ஆ) கலிங்கத்துப் பரணி
இ) இரணிய வதைப் பரணி
ஈ) பாசவதைப் பரணி

10. ‘தென்தமிழ்த் தெய்வப்பரணி’ – என்று கலிங்கத்துப் பரணியைப் புகழ்ந்தவர் ………………………..
அ) புகழேந்திப் புலவர்
ஆ) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
இ) ஒட்டக்கூத்தர்
ஈ) முதலாம் குலோத்துங்கச் சோழன்

11. கலிங்கத்துப் பரணியில் அமைந்துள்ள தாழிசைகளின் எண்ணிக்கை …………………
அ) 599
ஆ) 598
இ) 590
ஈ) 595

12. மறலி – பொருள் கூறுக.
அ. யானை
ஆ. காலன்
இ. புதர்
ஈ. வீரன்

13. பிலம் - பொருள் கூறுக.
அ. புதர்
ஆ. காலன்
இ. சிங்கம்
ஈ. மலைக்குகை

14. வானில் முழுநிலவு அழகாகத் ……………… அளித்தது.
அ) தயவு
ஆ) தரிசனம்
இ) துணிவு
ஈ) தயக்கம்

15. இந்த ……………. முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு.
அ) வையம்
ஆ) வானம்
இ) ஆழி
ஈ) கானகம்

16. சீவனில்லாமல் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) சீவ + நில்லாமல்
ஆ) சீவன் + நில்லாமல்
இ) சீவன் + இல்லாமல்
ஈ) சீவ + இல்லாமல்

17. விலங்கொடித்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) விலம் + கொடித்து
ஆ) விலம் + ஒடித்து
இ) விலன் + ஒடித்து
ஈ) விலங்கு + ஒடித்து

18. காட்டை + எரித்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………….
அ) காட்டை எரித்து
ஆ) காட்டையெரித்து
இ) காடுஎரித்து
ஈ) காடுயெரித்து

19. இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………
அ) இதந்தரும்
ஆ) இதம்தரும்
இ) இதத்தரும்
ஈ) இதைத்தரும்

20. கவிஞர் மீராவின் இயற்பெயர் ………………………
அ. மீரான் மைதீன்
ஆ. மீ. இராசேந்திரன்
இ. கவிநிலவன்
ஈ. மீ.ராமசாமி

21. மீரா அவர்கள் நடத்திய இதழ் …………….
அ. தமிழ்
ஆ. அன்னம் விடு தூது
இ. கோடையும் வசந்தமும்
ஈ. குக்கூ

22. சீவன் – பொருள் கூறு
அ. மாதம்
ஆ. உயிர்
இ. பார்வை
ஈ. அன்னம்

23. மோகித்து - பொருள் கூறு
அ. விரும்பி
ஆ. சூளுரை
இ. உலகம்
ஈ. கோபம்

24. எம்.ஜி.ஆர் ………………… என்னும் ஊரில் கல்வி பயின்றார்.
அ) கண்டி
ஆ) கும்பகோணம்
இ) சென்னை
ஈ) மதுரை


25. எம்.ஜி.ஆர். படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம் …………..
அ) நடிப்பு ஆர்வம்
ஆ) பள்ளி இல்லாமை
இ) குடும்ப வறுமை
ஈ) படிப்பில் ஆர்வமில்லாமை

26. இந்திய அரசு சிறந்த நடிகருக்கான …………. எனும் பட்டத்தை எம்.ஜி.ஆர் க்கு வழங்கியது.
அ) புரட்சித் தலைவர்
ஆ) பாரத்
இ) பாரத மாமணி
ஈ) புரட்சி நடிகர்

27. ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் …………
அ) திருச்சி
ஆ) சென்னை
இ) மதுரை
ஈ) கோவை

28. எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திட்டம் …………..
அ) மதிய உணவுத் திட்டம்
ஆ) வீட்டு வசதித் திட்டம்
இ) மகளிர் நலன் திட்டம்
ஈ) இலவசக் காலணித் திட்டம்

9. எம்.ஜி.ஆர். பிறந்த நாள் ……………..
அ. 18.01.1900
ஆ. 17.01.1917
இ. 19.01.1918
ஈ. 20.01.1919

30. மதிய உணவுத் திட்டம் …………………. காலத்தில் தொடங்கப்பட்டது.
அ. ஜெயலலிதா
ஆ. கருணாநிதி
இ. எம்ஜிஆர்
ஈ. காமராஜர்

31. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட ஆண்டு …………………,
அ. 2000 - 2001
ஆ. 2005 - 2006
இ. 2017 - 2018
ஈ. 2020 - 2021

32. குதிரையேற்றம்
அ. The Hero
ஆ. Victory
இ. Runner
ஈ. Equestrian

33. Leadership
அ. உறுப்பினர்
ஆ. தலைமைப்பண்பு
இ. வெற்றி
ஈ. கப்பல்

34. சுட்டுத்திரிபு வினாத்திரியை அடுத்து வல்லினம் ……………..
அ.மிகும்
ஆ. மிகாது.

35. உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் மென்தொடா குற்றியலுகரமாகவோ
இடைத்தொடர்க் குற்றியலுகரமாகவோ இருந்தால் வல்லினம் ..........
அ. மிகும்
ஆ. மிகாது

36 ) கீழ்க்கண்டவற்றில் தவறானது 
எது ? 

 A ) அந்த இந்த என்னும் சுட்டுத் திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும் . 
B ) எந்த என்னும் வினாத்திரிபை அடுத்து வல்லினம் மிகும் 
C ) வினைத்தொகையில் 
வல்லினம் மிகும் . 
D ) உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது . 

37 ) கீழ்க்கண்டவற்றில் சரியானது எது ? 
A ) பெயரெச்சம் , 
எதிர்மறைப் பெயரெச்சம் ஆகியவற்றை அடுத்து வல்லினம் மிகாது. 
B ) எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகும் . 
C ) திசைப்பெயர்களை அடுத்து வல்லினம் மிகாது 
D ) உருவகத்தில் வல்லினம் மிகாது . 

38 ) தவறாக பொருந்தியுள்ளது எது ? 
A ) வெற்றிலை பாக்கு- உம்மைத்தொகை B ) அந்தப்பக்கம் -சுட்டுத்திரிபு 
C ) எழுதுபொருள் - வினைத்தொகை 
D ) வாய்ப்பவளம்- உவமை

39 ) வழிவர் சிலர் கடல் பாய்வர் வெங்கரி மறைவர் சிலர் வழி தேடி வன்பிலம் " பாடல் வரி இடம் பெற்ற நூல் எது ? 
A ) சிலப்பதிகாரம் 
B ) கலிங்கத்துப்பரணி 
C ] புறநானூறு 
D ) நற்றினை 

40 ) " சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கீத் தனையே " - என்று பாடியவர் யார் ? 
A ) பாரதியார் 
B ) அதியமான் 
C ) ஔவையார் 
D ) ஜெயங்கொண்டார்

விடைகள்







Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY