Ads Right Header

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 8. & கணிதம் பயிற்சி வினாக்கள்(Apollo Material)


எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 8.

வினாக்கள்.

1.அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் ……………… க் கண்டு அஞ்சமாட்டார்கள்.

A) புலனை
B) அறனை
C) நமனை
D) பலனை

2. ஒன்றே ……………. என்று கருதி வாழ்வதே மனிதப்பண்பாகும்.
A) குலம்
B) குளம்
C) குணம்
D) குடம்

3. ‘நமனில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
A) நம் + இல்லை
B) நமது + இல்லை
C) நமன் + நில்லை
D) நமன் + இல்லை

4. நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………
A) நம்பரங்கு
B) நம்மார்க்கு
C) நம்பர்க்கங்கு
D) நம்பங்கு

5. திருமந்திரம் …………………. என்றும் அழைக்கப்படும்.
A) தமிழ் தொள்ளாயிரம்
B) தமிழ் மூவாயிரம்
C) இசைத்தமிழ்
D) இன்பத்தமிழ்

6. ஈயில் - பொருள் கூறுக
A) கூசாமல்
B) படங்கள்
C) வழங்கினால்
D) அடியார்

7 )அயோத்திதாசர் எழுதாத நூல் எது ? 
A ) புத்தரது ஆதிவேதம் 
B ) இந்திரர் தேச சரித்திரம் 
C ] புத்தர் கதைகள் 
D ] விவாக விளக்கம் 

8 ) " என் பகுத்தறிவு பிரச்சாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துக்களுக்கும் முன்னோடிகளாகத் நிகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும் தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள் " என்று கூறியவர் யார் ? 
A ) அண்ணா 
B ) பெரியார் 
C ] அம்பேத்கர் 
D ] பாரதிதாசன் 

9 ) சிறுகதை மன்னன் என்று போற்றப்படுபவர் யார் ? 
A ) வ.வே.சு.ஐயர் 
B ) சுப்ரமணியம் 
C ) அசோகமித்திரன் 
D ) புதுமைப்பித்தன் 

10 ) " பா " -எத்தனை வகைப்படும் ? 
A ) 2 
B ) 3 
C ) 4 
D ) 5

11 ) தொடை - எத்தனை வகைப்படும் ? 
A ) 2 
B ) 6 
C ) 7 
D ) 8 

12 ) பொருத்துக : 
1 ) ஞானி - ( 1 ) integrity 
2 ) தொண்டு ( 2 ) rational 
3 ) தத்துவம் - ( 3 ) charity 
4 ) நேர்மை - ( 4 ) saint 
5 ) பகுத்தறிவு - ( 5 ) philosophy 

A ) 1-4,2-3,3-5,4-1,5-2 
B ) 1-4,2-3,3-1,4-5,5-2 
C ) 1-4,2-1,3-3,4-5,5-2 
D ) 1-4,2-5,3-3,4-1,5-2

13 ) ஆண்மையின் கூர்மை எதுவென வள்ளுவர் கூறுகிறார் ? 
A ) வறியவருக்கு உதவுதல்
B) பகைவருக்கு உதவுதல் 
C ) நண்பனுக்கு உதவுதல் 
D ) உறவினருக்கு உதவுதல் 

14 ) " பண்பிலின் பெற்ற பெருஞ்செல்வம் நண்பால் கலம் தீமையால்திரிந்து அற்று ” - என்னும் குறளில் எவ்வணி பயின்று வந்துள்ளது ? 
A ) உருவக அணி 
B ) உவமையணி 
C ) ஏகதேச உருவக அணி 
D) வேற்றுமையணி 

15 ) " பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால் . “ - என்னும் குறள் இடம்பெறும் அதிகாரம் என்ன ? 
A ) பண்புடைமை 
B ) படைச்செருக்கு 
C ) நட்பு 
D ) மானம் 

16 ) " கான முயல் எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் எந்தல் இனிது " - எனும் குறளில் எவ்வணி பயின்று வந்துள்ளது ? 
A ) வஞ்சப்புகழ்ச்சி அணி 
B ) வேற்றுமையணி 
C ) ஏகதேச உருவக அணி 
D ) பிறிதுமொழிதலணி 

17 ) வறுமைவந்த காலத்தில் ............ குறையாமல் வாழ வேண்டும் என வள்ளுவர் கூறுகிறார் ? 
A ) இன்பம் 
B | செல்வம் 
C ] ஊக்கம் 
D ) நிலம் 

18 ) எது பெருமை தரும் என வள்ளுவர் கூறுகிறார் ? 
A ) செல்வம் சேர்த்தல் 
B ) பெரிய முயற்சி 
C ) ஊக்கம் 
D எதிரியை வீழ்த்துதல் 

19 ) செல்வம் மிகுந்த காலத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என வள்ளுவர் உரைக்கிறார் ? 
A ) ஊக்கம் 
B ) அன்பு 
C ] பணிவுடன் 
D ] அகங்காரமாக

20 ) மழை அளவு பெருமை உடையவராக இருந்தாலும் ...... அளவு சிறுபிழை செய்தால் அவர் புகழ் அழிந்து விடும் என வள்ளுவர் கூறுகிறார் . 
A ] கடுகு 
B ) முயல் 
C ) கொன்றைப் பூ 
D ] குன்றிமணி 

21 ) தவறானது எது ? 
A ) முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது -மோனை 
B ) இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது -எதுகை 
C ) இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றி வரத் தொடுப்பது- அசை 
D ) ஒரு பாடலின் இறுதிச் சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் அடியின் முதலில் வருமாறு பாடுவது அந்தாதித் தொடை 

22 ) தவறாக பொருந்தியுள்ளது எது ? 
A ) வெண்பா- செப்பலோசை 
B ) ஆசிரியப்பா -அகவல் ஓசை 
C ) கலிப்பா -துள்ளல் ஓசை 
D ) வஞ்சிப்பா -செப்பலோசை 


23 ) யாப்பு இலக்கணத்தின் படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள் 
எத்தனை ? 
A ) 5 
B ) 6 
C ) 7 
D ) 8 

24 ) " தளை " " எத்தனை வகைப்படும் ? 
A ) 7 
B ) 8 
C ) 6 
D ) 6

25 ) புதுமைப்பித்தன் எழுதாத நூல் எது ? 
A ) கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் 
B ) பொன்னகரம் 
C ) சாப விமோசனம் 
D ) மணிக்கொடி 

26 ) புதுமைப்பித்தனின் இயற்பெயர் என்ன ? 
A ) இராசமாணிக்கம் 
B ) விருத்தாசலம் 
C ) துரைராசு 
D ) முத்தையா 

27. மனிதர்கள் தம் ……………. தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்.
A) ஐந்திணைகளை
B) அறுசுவைகளை
C) நாற்றிசைகளை
D) ஐம்பொறிகளை

28. ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம் ……………..
A) பகர்ந்தனர்
B) நுகர்ந்த னர்
C) சிறந்தனர்
D) துறந்தனர்

29. ‘ஆனந்தவெள்ளம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
A) ஆனந்த + வெள்ளம்
B) ஆனந்தன் + வெள்ளம்
C) ஆனந்தம் + வெள்ளம்
D) ஆனந்தர் + வெள்ளம்

30. உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………..
A) உள்ளேயிருக்கும்
B) உள்ளிருக்கும்
C) உளிருக்கும்
D) உளருக்கும்

31. பராபரம் - பொருள் கூறுக
A. நீக்கியவர்
B. மேலான பொருள்
C. தந்தை
D. அரசன்

32. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர்.
A.முகமது சுல்தான்
B.சுல்தான் அப்துல்காதர்
C.இப்ராஹீம்
D.அப்துல் காதர்

33.குணங்குடி மஸ்தான் சாகிபுவின் படைப்புகளில் தவறானது?
A. எக்காளக் கண்ணி
B. மனோன்மணிக் கண்ணி
C. பராபரக்கண்ணி 
D. நந்தீசுவரக் கண்ணி 


34. அயோத்திதாசர் பதிப்பித்த நூல்
A. போகர் எழுநூறு
B. இந்திரர் தேச சரித்திரம்
C. விவாக விளக்கம்
D. புத்தர் சரித்திர பா

35. அயோத்திதாசர் எழுதிய நூல்
A. அகத்தியர் இருநூறு
B. சிமிட்டு இரத்தினச் சுருக்கம்
C. பாலவாகடம்
D. புத்தரது ஆதிவேதம்

36. அயோத்திதாசர் …………….. சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
A) தமிழக
B) இந்திய
C) தென்னிந்திய
D) ஆசிய

37. அயோத்திதாசர் நடத்திய இதழ் ……………..
A) ஒருபைசாத் தமிழன்
B) காலணாத் தமிழன்
C) அரைப்பைசாத் தமிழன்
D) அரையணாத் தமிழன்

38. கல்வியோடு …………. கற்க வேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து.
A) சிலம்பமும்
B) கைத்தொழிலும்
C) கணிப்பொறியும்
D) போர்த்தொழிலும்

39. அயோத்திதாசரின் புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவரது …………
A) ஆழ்ந்த படிப்பு
B) வெளிநாட்டுப்பயணம்
C) இதழியல் பட்டறிவு
D) மொழிப்புலமை

40. மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது …………….
A) வானம்
B) கடல்
C) மழை
D) கதிரவன்

41. அயோத்திதாசர் பிறந்த நாள் …………………
A) 20.05.1945
B) 20.05.1845 
C) 20.05.1835
D) 20.05.1925

42. திராவிட மகாஜன சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு …………
A) 1892
B) 1897
C) 1898
D) 1992

43. “ பெருஞ்செல்வம் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது. 
A) பெரிய + செல்வம் 
B) பெருஞ் + செல்வம் 
C) பெரு + செல்வம் 
D) பெருமை + செல்வம்  

44. திரிந்து + அற்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .
A) திரிந்தது அற்று 
B) திரிந்தற்று 
C) திரிந்துற்று 
D) திரிவுற்று

45. ' ஒன்றே குலம் ஒருவனே தேவன் ' என்று கூறியவர் 
A ) பட்டினத்தார் 
B ) திருமூலர் 
C ) குணங்குடி மஸ்தான் 
D ) திருவள்ளுவர்

46. நம்பர் - பொருள் கூறுக.
A ) அடியார் 
B ) உள்ளம் 
C ) கோயில் 
D ) எமன்

47. அயோத்திதாச பண்டிதரின் இயற்பெயர் என்ன ? 
A ) கருப்பசாமி 
B ) கண்ணையன் 
C ) காத்தவராயன் 
D ) கருப்பண்ணன்

48. திருமந்திரம் எத்தனை பாடல்கள் கொண்டது?
A) 2000
B) 3000
C) 4000
D) 5000

Apollo Maths Material







Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY