Ads Right Header

2022 - 50 + 50 - தமிழ் 6th to 12th - வினாக்கள்!


6th to 12th தமிழ் வினாக்கள்.

1)சிறுபாணாற்றுப்படையில் மொத்தம் எத்தனை அடிகள் உள்ளன?

அ) 268
ஆ) 269 
இ) 168 
ஈ) 169

2) "ஆணையிடும் அரசனும் அடக்கத்துடன் கேட்கும் பணியாளரும்" - சுவரோவியம் எங்கு இடம்பெற்றுள்ளது?

 அ) தஞ்சை 
ஆ) சிதம்பரம்
இ) மதுரை
ஈ) திருநெல்வேலி

3) உத்திரமேரூர் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

அ) சென்னை 
ஆ) காஞ்சிபுரம்
இ) திருவாரூர் 
ஈ) திருவள்ளூர் 

4) சென்னை கோட்டை கல்லூரி உருவான ஆண்டு?

அ) 1812
ஆ) 1835 
இ) 1857 
ஈ) 1860

5) "மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மிஞ்சப் புகட்ட மிக வளர்ந்தாய்" - என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?

அ) தென்றல் விடு தூது 
ஆ) பல்லி விடு தூது 
இ) கிளி விடு தூது
ஈ)  தமிழ் விடு தூது 

6) நவத்வீபம் என்ற ஊர் எங்கு உள்ளது? 

அ) குஜராத் 
ஆ) ஆந்திரா
இ) மேற்கு வங்காளம்
 ஈ) ஒரிசா

7) கற்பியலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை?

அ) 18 
ஆ) 7
இ) 25 
ஈ) 13 

8) அமலன் என்பவன்?

அ) குகன் 
ஆ) அனுமன் 
இ) இராமன் 
ஈ) இலக்குவன் 

9) இல்லாத - இலக்கண குறிப்பு தருக?

அ) வினையெச்சம்
 ஆ) வினையாலணையும் பெயர் 
இ) இடைக்குறை 
ஈ) பெயரெச்சம் 

10) பஃறுளி என்பதை பிரித்தெழுதுக?

அ) பல்+துளி 
ஆ) பல+துளி 
இ) பற்+துளி 
ஈ) பன்+துளி

11) கலி என்பதன் பொருள்

அ) வெள்ளம்
ஆ)  விலங்கு 
இ) மலை
ஈ) ஆறு 

12) திண்ணைப் பள்ளியில் கற்பிக்கப்பட்ட நூல்களில் சரியானது?

அ) மூதுரை 
ஆ) ஆத்திச்சூடி
இ) கொன்றைவேந்தன்
 ஈ) அனைத்தும்

13) வளர்தலம் - இலக்கணக்குறிப்பு தருக?

அ) பண்புத்தொகை 
ஆ) உவமைத்தொகை 
இ) உம்மைத்தொகை
 ஈ) வினைத்தொகை

14)  தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப்பொருள் கோட்பாடு உருவானது என்று குறிப்பிடுவர்?

அ) வெர்லேன் 
ஆ) மல்லார்மே
இ) ஹார்ட் 
ஈ) ரைம்போ 

15) குறியீட்டியம் என்னும் இலக்கியக் கோட்பாட்டை விளக்கி வளர்த்தவர்?

அ) பொதலேர்
ஆ) ரைம்போ 
இ) வெர்லேன்
ஈ) மேற்கண்ட அனைவரும்

16) தமிழ் அகதிகள் கனடாவிற்கு _______ஆண்டுக்குப் பிறகுதான் குடிபெயர தொடங்கினார்?

அ) 1970
ஆ) 1983 
இ) 1963
ஈ) 1990

17) இலங்கை அரசின் சாகித்திய அகாதமி விருது பெற்ற சிறுகதை தொகுப்பு?

அ) அக்கா 
ஆ) திகடசக்கரம் 
இ) வம்சவிருத்தி 
ஈ) வடக்கு வீதி 

18) மொழி இறுதி எழுத்துகளில்  மெய் எழுத்துகளின் எண்ணிக்கை?

அ) 12
ஆ) 11 
இ) 1 
ஈ) 18 

19) திருப்பாவை எத்தனை பாடல்களைக் கொண்டது?

அ) 20
ஆ) 25 
இ) 30
ஈ) 35

20) பனைமரம் எத்தனை ஆண்டுகள் பலன் தரும்?

அ) 7
ஆ) 10
இ) 4
ஈ) 11

21) திருமலை முருகன் பள்ளு கூறும் மாடுகளின் வகைகள்?

அ) 8
ஆ) 19
இ) 10 
ஈ) 15 

22) பெரியவன் கவிராயரின் காலம்?

அ) 15-ஆம் நூற்றாண்டு 
ஆ) 16-ஆம் நூற்றாண்டு 
இ) 17-ஆம் நூற்றாண்டு
ஈ) 18-ஆம் நூற்றாண்டு

23) களபம் என்பதன் பொருள்?

அ) காலை 
ஆ) யானை 
இ) மான்
ஈ) புலி

24) திராவிடர்களை, 'மலை மனிதர்கள்' என்று அழைத்தவர்?

அ) கால்டுவெல் 
ஆ) எல்லிஸ்
இ) கமில் சுவலபில்
ஈ) எமினோ 

25) சிதவல் என்பதன் பொருள்?

அ) ஊன்றுகோல்
ஆ) முடி 
இ) இடை 
ஈ) தலைப்பாகை

தமிழ்

26) கூற்று: "கோடு" என்பது தமிழ்ச்சொல் ஆகும்.
 விளக்கம்: கோடு என்னும் சொல்லுக்கு மலையுச்சி,  வல்லரண், கோட்டை என்னும் பொருள்களும் உண்டு.

அ) கூற்று சரி, விளக்கம் தவறு 
ஆ) கூற்றும் சரி, விளக்கமும் சரி
இ) கூற்று தவறு, விளக்கம் சரி
ஈ) கூற்றும் தவறு, விளக்கமும் தவறு

27) சேதனை என்பதன் பொருள் _____

அ) சோறு 
ஆ) வாசனை
இ) அறிவு 
ஈ) சினம் 

28) வெப்பம் குளிர்- இலக்கண குறிப்பு தருக?

அ) உவமைத்தொகை 
ஆ) உம்மைத்தொகை 
இ) எண்ணும்மை
ஈ) அன்மொழித்தொகை

29) சென்னையில் பொதுக்கல்வி வாரியம் தொடங்கப்பட்ட ஆண்டு?

அ) 1826 
ஆ) 1835 
இ) 1854 
ஈ) 1857

30) ஒரு வராகன் என்பது_____

அ) 8 பணம் 
ஆ) 480 காசு
இ) 60 காசு 
ஈ) 24 பணம்

31) பொருத்துக.

அ) சிறுமலை- சிலப்பதிகாரம் 
ஆ) உறையூர்- அகநானூறு இ) கொற்கை- ஐங்குறுநூறு
ஈ) ஆலங்கானம்-  மதுரைக்காஞ்சி

32) தமிழ்த்திரு இரா. இளங்குமரனின் படைப்புகளில் தவறானது?

அ) பாவாணர் வரலாறு
ஆ) இலக்கண வரலாறு
இ) தமிழர் மரபுரை
ஈ) தனித்தமிழ் இயக்கம்

33) துய்ப்பது என்பதன் பொருள்?

அ) பெறுதல்
ஆ) பொருந்துதல்
இ) வருதல்
ஈ) தருதல் 

34) "பெய்ட்டி" என்ற புயலுக்கு பெயர் வைத்த நாடு?

அ) இலங்கை 
ஆ) தாய்லாந்து 
இ) இந்தியா
ஈ) வங்காளதேசம்

35) எட்வின் ஹப்பிள்_____-இல் நம் பால்வீதி போன்று பல பால் வீதிகள் உள்ளன என்று நிரூபித்தார்?

அ) 1920 
ஆ) 1922 
இ) 1924
ஈ) 1926

36) சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல்?

அ) புறநானூறு 
ஆ) கலித்தொகை
இ) பதிற்றுப்பத்து 
ஈ) பரிபாடல்

37) ஹாக்கிங் தன்னுடைய எந்த வயதில் சூடான காற்று நிரம்பிய பலூனில் வானில் பறந்து கொண்டாடினார்?

அ) 50 
ஆ) 53
இ) 60 
ஈ) 65

38) வந்தீர் என்பது_____

அ) தன்மைப் பெயர்
ஆ) முன்னிலைப் பெயர்
இ) தன்மை வினை
ஈ) முன்னிலை வினை

39) கம்பீரத்துடன் ஆடும் ஆட்டம்_____

அ) ஒயிலாட்டம் 
ஆ) மயிலாட்டம்
இ) சேவையாட்டம்
ஈ) காவடியாட்டம்

40) வைகறை எந்த திணைக்குரிய சிறுபொழுது?

அ) குறிஞ்சி
ஆ) முல்லை 
இ) மருதம்
ஈ) நெய்தல் 

41) மலர்கள் தரையில் நழுவும். எப்போது?

அ) அள்ளி முகர்ந்தால்
ஆ) தளரப் பிணைத்தால்
இ) இறுக்கி முடிச்சிட்டால்
ஈ) காம்பு முறிந்தால்

42) மார்ஷல் நேசமணி எந்த மாவட்டத்துடன் தொடர்புடையவர்?

அ) காஞ்சிபுரம்
ஆ) சென்னை 
இ) திருச்சி 
ஈ) கன்னியாகுமரி

43) சுருளி மலை என்பது___

அ) நெடுவேள் குன்றம்
ஆ) அழகர் மலை
இ) திருமால் குன்றம்
ஈ) அழகர்மலை 

44) மிரியல் என்பதன் பொருள்?

அ) சுக்கு 
ஆ) மிளகு 
இ) திப்பிலி
ஈ) ஏலக்காய் 

45) காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்?

அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது 
ஆ) என் மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது 
இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்
 ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்

46) சரியான வரிசையைத் தேர்ந்தெடு?

அ) தமிழ், தமிலா, தமிழா, டிரமிலா, ட்ரமிலா, த்ராவிடா, திராவிடா

ஆ) தமிழ், தமிழா, தமிலா, டிரமிலா, ட்ரமிலா, த்ராவிடா,
 திராவிடரா

இ) தமிழ், தமிழா, தமிலா, ட்ரமிலா, டிரமிலா, த்ராவிடா, திராவிடா

ஈ) தமிழ், தமிலா, தமிழா, ட்ரமிலா, டிரமிலா, த்ராவிடா, திராவிட

 47) மூடு என்பது____ மொழிச்சொல் 

அ) தமிழ்
ஆ) கன்னடம்
இ) தெலுங்கு 
ஈ) மலையாளம்

48) இருமா என்பது____

அ) 2/10
ஆ) 3/20
இ) 3/16
ஈ) 1/10 

49) கண்மாய் என்பது_____

அ) சிறிதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை
ஆ) குளிப்பதற்கேற்ற சிறுகுளம் 
இ) பாண்டி மண்டலத்தில் ஏரிக்கு வழங்கப்படும் பெயர் 
ஈ) சோழ மண்டலத்தில் ஏரிக்கு வழங்கப்படும் பெயர்

50) கந்தம் என்பதன் பொருள்?

அ) மலர் 
ஆ) வீணை
இ) மாலை 
ஈ) மணம்

51) மணநூல்
 என்றழைக்கப்படும் நூல்____

அ) சிலப்பதிகாரம் 
ஆ) சீவகசிந்தாமணி 
இ) மணிமேகலை 
ஈ) பாஞ்சாலிசபதம்

52) தேமாங்கனி-இலக்கண குறிப்பு தருக?

அ)  பண்புத்தொகை 
ஆ) வினைத்தொகை
இ) உருவகம் 
ஈ) உவமைத்தொகை

53) சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர்?

அ) செந்தூரப் பாண்டியன்
ஆ) பெரியார் 
இ) அண்ணா 
ஈ) இராஜாஜி

54) கலைமகள் பரிசை 1932- ஆம் ஆண்டு பெற்றவர்?

அ) வல்லிக்கண்ணன் 
ஆ) ந. பிச்சமூர்த்தி 
இ) சுரதா 
ஈ) இரா.பி. சேதுப்பிள்ளை

 55) விழார் - அலகிட்டு வாய்ப்பாடு கூறுக?

அ) நிரையசை
ஆ) நேரசை 
இ) நாள்
ஈ) பிறப்பு

56) உலகத்தமிழ் மாநாடு தஞ்சையில் நடைபெற்ற ஆண்டு?

அ) 1966
ஆ) 1987
இ) 1995
ஈ) 1974

57) "பண்புடைமையாவது யாவர் மாட்டும் அன்பினராய்க் கலந்து ஒழுகுதலும், அவரவர் வருத்தத்திற்குப் பரிதலும் பகுத்து உண்ணவும்
  பழிநாணலும் முதலான நற்குணங்கள் பலவும் உடைமை" என்று கூறியவர்?

அ) காளிங்கர்
ஆ) பரிதி
இ) பரிப்பெருமாள்
ஈ) நச்சர்

 58) சு. சமுத்திரம் அவர்களின் தமிழக அரசின் பரிசைப் பெற்ற சிறுகதை?

 அ) குற்றம் பார்க்கில்
ஆ) வேரில் பழுத்த பலா
இ) மண்சுமை
ஈ) தலைப்பாகை 

59) "கேடில்விழுச் செல்வம் கல்வி ஒருவருக்கு
 மாடல்ல மற்றை யவை" - இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி?

அ) சொல் பின்வரு நிலையணி 
ஆ) பொருள் பின்வரு நிலையணி 
இ) சொற்பொருள் பின்வரு நிலையணி 
ஈ) வஞ்சப்புகழ்ச்சி அணி 

60) யா மரம்  எந்த நிலத்தில் வளரும்?

அ) குறிஞ்சி 
ஆ) மருதம் 
இ) பாலை 
ஈ) நெய்தல்

61) கூற்று 1: கல்வெட்டுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
கூற்று 2: செப்பேடுகள் கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.

அ) கூற்று 1சரி, 2 தவறு 
ஆ) கூற்று 1,2சரி
இ) கூற்று 1 தவறு, 2 சரி
ஈ) கூற்று 1,2 தவறு

62) ஓரெழுத்து 
ஒருமொழிகளில் ந வரிசையில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை?

அ) 6
ஆ) 7 
இ) 4
ஈ) 5

63) phoneme - தமிழாக்கம் செய்க.

அ) மெய்யொலி 
ஆ) ஒலியன் 
இ) மூக்கொலி 
ஈ) உயிரொலி

64) ஓடை+ஆட - என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) ஓடைஆட 
ஆ) ஓடையாட 
இ) ஓடையோட 
ஈ) ஓடைவாட 

65) முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும்_____யும் ஓட்டிவிடும்.

அ) பாலன்
ஆ) காலன்
இ) ஆற்றல்
ஈ) நலம்

66) தமிழக பழங்குடிகள் என்னும் நூலை எழுதியவர் யார்?

அ) சே. ராசு 
ஆ) அரங்கசாமி 
இ) பக்தவத்சலபாரதி 
ஈ) வ. கீதா

67) 'வல்லுருவம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

அ) வல்+உருவம் 
ஆ) வன்மை+உருவம்
இ) வல்ல+உருவம்
ஈ)வல்லு+உருவம் 

68) சுமார் _______நிமிடங்களுக்கு ஒருமுறை நாம் எல்லோரும் மனநிலை மாறுகிறோம்.

அ) 60 
ஆ) 70 
இ) 80 
ஈ) 90 

69) நீலகேசி கூறும் நோய்களின் வகைகள்?

அ) 3
ஆ) 2
இ) 4
ஈ) 5 

70) _______சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் கண்ணெழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. 

அ) முதல்
ஆ) இடை 
இ) கடை 

71) பொருத்துக.

அ)  நடந்து- பெயரெச்சம் 
ஆ) பேசிய- வினையெச்சம்
இ) எடுத்தனன் உண்டான்- குறிப்பு பெயரெச்சம்
ஈ) பெரிய- முற்றெச்சம்

72) வானில் கரு_____ தோன்றினால் மழை பொழியும் என்பர்.

அ) முகில்
ஆ) துகில் 
இ) வெயில்
ஈ) கயல்

73) ஓரெழுத்து ஒரு மொழியில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை?

அ) 40
ஆ) 42 
இ) 41
ஈ) 39 

74) முள்ளம்பன்றியின் பழம்பெயர்?

அ) எய்பன்றி
ஆ) ஏய்பன்றி
இ) எய்ப்பன்றி
ஈ) ஏய்ப்பன்றி

75) யகர வரிசையில் இடம்பெற்றுள்ள ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்களின் எண்ணிக்கை?

அ) 1 
ஆ) 2 
இ) 4 
ஈ) 5

76) முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பரப்பளவு?

அ) 785 சதுர கிலோமீட்டர்
ஆ) 795 சதுர கிலோ மீட்டர்
இ) 885 சதுர கிலோ மீட்டர்
ஈ) 895 சதுர கிலோமீட்டர்

77) ஜாதவ்பயேங் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?

அ) பஞ்சாப்
ஆ) மிசோரம் 
இ) அசாம்
ஈ) ஒரிசா 


78) சோழ மன்னன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித் தாய் யார்? 

அ) காக்கைபாடினியார்
ஆ) பொன்முடியார்
இ) பெருவாயின் முள்ளியார்
ஈ) காவற்பெண்டு

79) முத்துராமலிங்கர் தன் வாழ்நாளில் எவ்வளவு பங்கை சிறையில் கழித்தவர்?

அ) 2/5
ஆ) 1/7
இ) 2/9
ஈ) 2/10

80) நெடில் எழுத்துகளை குறிக்க பயன்படுவது?

அ) கரம் 
ஆ) காரம்
இ) கான் 
ஈ) கேனம்

81) அசாம் மாநிலத்தில் பெருவெள்ளம் ஏற்பட்ட ஆண்டு?

அ) 1976
ஆ) 1979
இ) 1980
ஈ) 1982 

82) இந்திய அரசின் சாகித்ய அகாதமி விருது பெற்ற முதல் நூல்?

அ) மேடைப் பேச்சு
ஆ) தமிழின்பம்
இ) தமிழகம் ஊரும் பேரும்
ஈ) வேருக்கு நீர் 

83) எந்தை, போது என்பதை_____

அ) இலக்கணமுடையது
ஆ) இலக்கணப்போலி
இ) இடக்கரடக்கல்
ஈ) மரூஉ

84) கரடிகளைத் தேனீக்களிடமிந்ருந்து காப்பது அதன்_____

அ) தோல் 
ஆ) வாசனை 
இ) உரோமம் 
ஈ) துர்நாற்றம்

85)  முத்துராமலிங்கர் முதன்முதலில் _______என்னும் ஊரில் விவேகானந்தரின் பெருமை என்னும் தலைப்பில் மூன்று மணி நேரம் உரையாற்றினார்.

அ) சாத்தான் குளம்
ஆ) லால்குடி 
இ) மாங்குடி 
ஈ) சாயல்குடி 

86) விளக்கை  குளிர் வை என்பது?

அ) இடக்கடரக்கல்
ஆ) மங்கலம் 
இ) குழூஉக்குறி
ஈ) இலக்கணப் போலி

87) 'செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்' - என்பது யாருடைய ஆசை?

அ) பாரதியார் 
ஆ) பாரதிதாசன் 
இ) சுரதா
ஈ) நாமக்கல் கவிஞர்

88) மிகுந்த நினைவாற்றல் கொண்ட விலங்கு?

அ) யானை
ஆ) புலி 
இ) கரடி 
ஈ) சிங்கம்

89) குற்றப்பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்ட ஆண்டு?

அ) 1945
ஆ) 1947
இ) 1948
ஈ) 1950

90) 'நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடீ!'- என்ற வரிகள் எந்த கண்ணி பாடல் வகையைச் சேர்ந்தது?

அ) மனோன்மணிக் கண்ணி 
ஆ) எக்காளக் கண்ணி
இ) கிளிக்கண்ணி 
ஈ) நந்தீசுரக்கண்ணி

91) செய் என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல்?

அ) திருக்குறள்
ஆ) குறுந்தொகை
இ) கலித்தொகை
ஈ) தொல்காப்பியம்

92) 'அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண்'- என்ற குறள் என் வாழ்க்கைக்கு  வழு சேர்ந்தது என்று கூறியவர்?

அ) லிலியன் வாட்சன்
ஆ) பாரதியார் 
இ) மாரியப்பன்
ஈ) அப்துல்கலாம்

93)  உலக சிட்டுக்குருவி நாள்? 

அ) மார்ச் 20 
ஆ) பிப்ரவரி 20
இ) மார்ச் 12 
ஈ) பிப்ரவரி 12

94) அறுவை மருத்துவம் பற்றி கூறும் நூல்?

அ) தொல்காப்பியம் 
ஆ) குறுந்தொகை
இ) பதிற்றுப்பத்து
ஈ) நற்றிணை

95)  இராமன் விளைவை கண்டுபிடிக்க இராமன் பயன்படுத்தியவற்றில் தவறானது?

அ) பாதரச ஆவி விளக்கு
ஆ) பென்சீன் 
இ) சோடியம் ஆவி விளக்கு
ஈ) நிறமாலைக்காட்டி

96) தமிழ்மொழியின் இலக்கண வகைகள்?

அ) 2 
ஆ) 3 
இ) 4 
ஈ) 5 

97) சிட்டுக்குருவி கூடு கட்டிய பின் எத்தனை முட்டைகள் இடும்?

அ) 3முதல் 6
ஆ) 3 முதல் 7
இ) 4 முதல் 6
ஈ)  4 முதல் 7 

98) கதிரவனின் மறுபெயர்?

அ) சந்திரன் 
ஆ) தரணி 
இ) ஞாயிறு 
ஈ) திங்கள்

99) இவ்வுலகின் முதல் விஞ்ஞானிகள் என்று அப்துல்கலாம் யாரை கூறுகிறார்?

அ) பெண்கள் 
ஆ) ஆண்கள் 
இ) குழந்தைகள்
ஈ) இந்தியர்கள்

100)  சிட்டுக்குருவி அடைகாக்கும் காலம்?

அ) 21 நாட்கள் 
ஆ) 20 நாட்கள் 
இ) 13 நாட்கள் 
ஈ) 14 நாட்கள்





Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY