Ads Right Header

விடைகள் - ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் -2 .


ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் -2 


1 ) " சனி நீராடு " ' என்பது யாருடைய வாக்கு ? 

A ) பாரதியார் 
B ) பாரதிதாசன் 
C ) திருவள்ளுவர் 
D ) ஒளவையார் 👍

2 ) கூற்று : -பாண்டிய மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியைக் கண்மாய் என்று அழைப்பர் . காரணம் : -கம்மாய் என்பது வட்டார வழக்குச் சொல்லாகும் . 

A ) கூற்றும் காரணமும் சரி 👍
B ) கூற்று தவறு காரணம் சரி 
C ) கூற்று சரி காரணம் தவறு 
D ) கூற்றும் காரணமும் தவறு 

3 ) மழை உழவுக்கு உதவுகிறது , விதைத்த விதை ஆயிரமாய்ப் பெருகுகிறது நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் என்ற நோக்கில் வளர்கின்றன என கூறிய சங்ககாலப் புலவர் யார் ? 

A ) திருவள்ளுவர் 
B ) நக்கீரர் 
C ) ஔவையார் 
D ) மாங்குடி மருதனார் 👍


4 ) காவிரிப் பாசனப் பகுதிக்குத் தனிப் பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்ட ஆண்டு ?

A ) 1820  
B ) 1829 👍
C ) 1873
D ) 1834 

5 ) தவறாக பொருந்தியுள்ளது எது ? 

A ) கூவல் - தேக்கப்பட்ட 
பெரிய நீர்நிலை . 👍
B ) புனற்குளம் - நீர் வரத்து மடையின்றி மழைநீரையே கொண்டுள்ள குளிக்கும் நீர் நிலை . 
C ) குண்டு - குளிப்பதற்கேற்ற சிறுகுளம் . D ) குமுழி ஊற்று - அடி நிலத்தது நீர் நிலமட்டத்தில் கொப்பளித்து வரும் ஊற்று . 

6 ) சரியாக பொருந்தியுள்ளது எது ? 

A ) கண்மாய் -சிறிதாய் அமைந்த குளிக்கும் நீர் நிலை 
B ) ஊற்று- கமலை நீர் பாய்ச்சும் அமைப்பு C ) ஏரி - மக்கள் பருகும்நீர் உள்ள நிலை 
D ) இலஞ்சி - பல்வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம் .👍

7 ) கூற்று ( 1 ) : - முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் ஜான் பென்னிகுயிக் கூற்று ( 2 ) : - தென் மாவட்டங்களான கன்னியாகுமரி கோயமுத்தூர் திருநெல்வேலி மட்டும் அணையால் பயன்பெறுகிறது . 

A ) கூற்று 1,2 சரி 
B ) கூற்று 1 சரி 2 தவறு 👍
C ) கூற்று 1 தவறு 2 சரி 
D ) கூற்று 1,2 தவறு 

8 ) " விசனம் " - என்னும் சொல்லின் பொருள் ? 

A ) கவலை 👍
B ) மணம் 
C ) உட்கார 
D ) மேல் 

9 ] கவிஞர் தமிழ்ஒளி வாழ்ந்த காலம் ? 

A ) 1920-1965 
B ) 1924-1965 👍
C ) 1934-1965 
D ) 1914-1965 

10 ) கவிஞர் தமிழ்ஒளி எழுதாத நூல் எது? 

A ) கண்ணப்பன் கிளிகள் 
B ) குருவிப்பட்டி 
C ) மாதவி காவியம் 
D ) தமிழர் திருமணம் 👍

 11 ) " உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரோ " -என்ற புறநானூற்று பாடல் வரியின் ஆசிரியர் யார் ? 

A ) பாண்டியன் நெடுஞ்செழியன் 
B ) குடபுலவியனார் 👍
C ) நக்கீரர் 
D ) காவற்பெண்டு 

12 ) " குளம் தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து வளம்தொட்டு உழுவயல் ஆக்கி " - என்னும் பாடல் வரி இடம் பெற்ற நூல் எது ? 

A ) நற்றிணை 
B ) புறநானூறு 
C ) சிறுபஞ்சமூலம் 👍
D ) பரிபாடல் 

13 ) கீழ்க்கண்டவற்றில் பண்புத்தொகை அல்லாத சொல் எது ? 

A ) அடுபோர் 👍
B ) மூதூர் 
C ) நல்லிசை 
D ) புன்புலம்

14 ) " கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும் " -என்னும் நூலின் ஆசிரியர் யார் ? 

A ) மா.கிருஷ்ணன் 
B ) மா.அமரேசன் 👍
C ) வைரமுத்து 
D ) பாரதிதாசன் 

15 ) ஒரு ஆப்பிளை உற்பத்தி செய்ய தேவைப்படும் தண்ணீரின் அளவு என்ன? 

A ) 2500 லிட்டர் 
B ) 250 லிட்டர் 
C ) 822 லிட்டர் 👍
D ) 1780 லிட்டர் 

16 ) சந்திப்பிழையுள்ள தொடர் எது ? 

A ) நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல 
B ) மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் 
C ) கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது 
D ) தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவேன் 👍

17 ) பெயர் வினை அல்லாதது எது ? 

A ) தந்தி + அடி 
B ) ஆணை + இடு 
C ) முன் + எறு 👍
D ) கேள்வி + படு 

18 ) தமிழில் எத்தனை துணைவினைகள் உள்ளன ? 

A ) 20 
B ) 40 👍
C ) 35 
D ) 42


19 ) வினைச்சொற்களை அமைப்பின் அடிப்படையில் எத்தனை வகையாகப் பிரிக்கலாம் ? 

A ) 2 👍
B ) 40 
C ) 3 
D ) 4 

20 ) கீழ்க்கண்டவற்றில் தவறானது எது ? 

A ) எழுதிப் பார்த்தாள் இதில் ' பார்'- என்பது பார்த்தல் என்னும் பொருளை தருகிறது . 👍
B ) ஒரு கூட்டு வினையின் முதல் உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளைத் தரும் வினை முதல் வினை எனப்படும் . 
C ) முதல் வினைக்குத் துணையாக வேறு இலக்கணப் பொருளைத் தரும் வினை துணைவினை எனப்படும் 
D ) கூட்டுவினையின் முதல் வினை செய அல்லது செய்து என்னும் வினையெச்ச வடிவில் இருக்கும்.

21 ) கீழ்க்கண்டவற்றில் துணைவினை எது ? 

A ) புத்தகம் மேசையில் இருக்கிறது  
B ) அப்பா வந்திருக்கிறார் 👍
C ) அவன் வானொலியில் பாட்டு வைத்தான் 
D ) நான் சொன்னதை நீ கருத்தில் கொள்ளவில்லை . 

22 ) நீர்நிலைகளோடு தொடர்பில்லாதது எது ? 

A ) அகழி 
B ) ஆறு 
C ) இலஞ்சி 
D ) புலரி 👍

23 ) தவறாக பொருந்தியுள்ளது எது ? 

A ) தண்ணீர் தண்ணீர் - கந்தர்வன் 👍
B ) தண்ணீர் தேசம்- வைரமுத்து 
C ) வாய்க்கால் மீன்கள்- வெ . இறையன்பு D ) மழைக்காலமும் குயிலோசையும் - மா.கிருஷ்ணன் 

24 ) கந்தர்வனின் இயற்பெயர் என்ன ? 

A ) இறையரசன் 
B ) விருத்தாச்சலம் 
C ) நாகலிங்கம் 👍
D ) முத்தையா 

25 ) பொருத்துக : 
1 ) யாக்கை - ( 1 ) முயற்சி 
2 ) தாட்கு - ( 2 ) உடம்பு 
3 ) புணரியோர் - ( 3 ) தந்தவர் 
4 ) புன்புலம் - ( 4 ) புல்லிய நிலம் 

A ) 1-2,2-4,3-1,4-3 
B ) 1-2,2-3,3-1,4-4 
C ) 1-1,2-2,3-3,4-4 
D ) 1-2,3-1,3-3,4-4 👍

26 ) சேக்கிழார் வாழ்ந்த காலம் என்ன ? 

A ) கி.பி 11 - ம் நூற்றாண்டு 
B ) கி.மு 12- ம் நூற்றாண்டு 
C ) கி.பி 12- ம் நூற்றாண்டு 👍
D ) கி.பி 14 - ம் நூற்றாண்டு 

27 ) திருத்தொண்டர் புராணம் எத்தனை நாயன்மார்களின் சிறப்புகளை கூறுகிறது ? 

A ) 60 
B ) 63 👍
C ) 62 
D ) 64

28 ) " வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ ? வெறும் காட்சிப் பிழைதானோ ? என்று பாடியவர் யார் ? 

A ) பாரதிதாசன் 
B ) கந்தர்வன் 
C ) பாரதியார் 👍
D ) மூ.வ 

29 ) குளிர்ந்த மலர்களையுடைய 
மரம் எது ? 

A ) வஞ்சி 
B ) குரா மரம் 👍
c ) வேப்ப மரம் 
D ) அரச மரம் 

30 ) " வாவி " - என்னும் சொல்லின் பொருள் ? 

A ) வண்டு 
B ) நெற்பயிர் 
C ) முத்து 
D ) பொய்கை 👍

31 ) கீழ்க்கண்டவற்றில் தவறானது எது ? 

A ) மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணற்றுக்கு உறைகிணறு என்று பெயர் . 
B ) கல்லணையின் நீளம் 1090 மீட்டர் 👍
C ) உலக சுற்றுச்சூழல் தினம் ஜீன் -5 ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது . 
D ) இந்திய நீர்பாசனத்துறையின் தந்தை என சர் ஆர்தர் காட்டன் அழைக்கப்படுகிறார் . 

32 ) கோதாவரி ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் அணைக் கட்டப்பட்ட ஆண்டு ? 

A ) 1850 
B ) 1873 👍
C ) 1877 
D ) 1883 

33 ) தமிழ் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன என்று கூறியவர் யார் ? 

A ) ஆண்டாள் 
B ) பாரதிதாசன் 
C ) கந்தர்வன் 
D ) தொ . பரமசிவன் 👍

34 ) " வெறுங்கனவு " - என்பதன் இலக்கணக் குறிப்பு யாது ? 

A ) வினையெச்சம்  
B )  வினைத்தொகை 
C ) பண்புத்தொகை👍
D ) வேற்றுமைத்தொகை

35 ) " கவிஞனின் காதல் " -என்னும் நூலின் ஆசிரியர் யார் ? 

A ) கந்தர்வன் 
B ) பாரதிதாசன் 
C ) தொ.பரமசிவன் 
D ) தமிழ்ஒளி 👍

36 ) காவிரியின் பாதை எல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விரித்துரைக்கும் நூல் எது ? 

A ) குறிஞ்சிப்பாட்டு 
B ) மணிமேகலை 
C ) திருவாய்மொழி 
D ) பெரியபுராணம் 👍

37 ) தவறாக பொருந்தியுள்ளது எது ? 

A ) தரளம் - முத்து 
B ) பணிலம் -சங்கு 
C ) கழை- நெருப்பு 👍
D ) வேரி - தேன் 

38 ) திருத்தொண்டத்தொகை- என்னும் நூலின் ஆசிரியர் யார் ? 

A ) சேக்கிழார் 
B ) சுந்தரர் 👍
C ) ஒட்டக்கூத்தர் 
D ) புகழேந்தி

 39 ) " பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவி வலவ " -என சேக்கிழாரைப் புகழ்ந்தவர் யார் ? 

A ) குலோத்துங்க சோழன் 
B ) பாரதியார் 
C ) மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்👍 
D ) ஒட்டக்கூத்தர் 

40 ) பண்டைய வேந்தர்களின் வீரம் , வெற்றி , கொடை குறித்தும் குறுநில மன்னர்கள் , புலவர்கள் சான்றோர்கள் உள்ளிட்டவர்களின் பெருமைகளைப் பற்றியும் அன்றைய மக்களின் புறவாழ்க்கையைப் பற்றியும் கூறும் நூல் எது ? 

A ) பெரியபுராணம் 
B ) அகநானூறு 
C ) நற்றிணை 
D ) புறநானூறு 👍

41 ) கந்தர்வன் எழுதாத நூல் எது ? 

A ) சாசனம்  
B ) ஒவ்வொரு கல்லாய் 
C ) கொம்பன்
D ) குருவிப்பட்டி👍

42 ) ' மிசை ' - என்பதன் எதிர்ச்சொல் என்ன ? 

A ) கீழே 👍
B ) மேலே 
C ) இசை 
D ) வசை 

43 ) " திருத்தொண்டர் திருவந்தாதி " - என்னும் நூலின் ஆசிரியர் யார் ? 

A ) சேக்கிழார் 
B ) சுந்தரர் 
C ) ஆண்டாள் 
D ) நம்பியாண்டார் நம்பி 👍

44 ) தமிழ் மொழியைப் போலவே முதல் வினைகளுக்குப் பின்பு துணைவினைகள் இடம்பெறும் மொழி 

A ) தெலுங்கு 
B ) ஜப்பானீஸ் 👍
C ) ஹூப்ரூ 
D ) ஆங்கிலம் 

45 ) ............... மொழியிலேயே 
துணைவினைகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது ? 

A ) பேச்சு 👍
B ) எழுத்து 
C ) வட்டார 
D ) கிளை 

46. சரியான சொற்றொடரைத் தேர்வு செய்க ? 

A ) உண்டி முதற்றே உணவின் பிண்டம்👍 
B ) உணவின் முதற்றே உண்டி பிண்டம் 
C ) பிண்டம் முதற்றே உண்டி உணவின் 
D ) உணவின் பிண்டம் உண்டி முதற்றே 

47 ) குடபுலவியனார் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு எதற்கு அறிவுரை வழங்கினார் ? 

A ) நீர்நிலை பெருக்குதல் 👍
B ) போர் செய்யாமை 
C ) அறம் செய் 
D ) வேளாண்மை பெருக்கு 

48 ) " நீரின்று அமையாது யாக்கை " - என்று பாடியவர் யார் ? 

A ) குடபுலவியனார் 👍
B ) பாண்டியன் நெடுஞ்செழியன் 
C ) திருவள்ளுவர் 
D ) ஔவையார்

49 ) மல்லல் -எனும் சொல்லின் பொருள் ? 

A ) மறுமை 
B ) பூவரசமரம் 
C ) வளம் 👍
D ) பெரிய 

50 ) " நீராடல் பருவம் " -இடம் பெறும் சிற்றிலக்கியம்? 

A ) பிள்ளைத்தமிழ் 👍
B ) கலம்பகம் 
C ) பள்ளு 
D ) உலா






Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY