Ads Right Header

விடைகள் - எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 6.


எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 6.

1. தோட்டத்தில் தம்பி ஊன்றிய ………………. எல்லாம் முளைத்தன.
அ) சத்துகள்
ஆ) பித்துகள்
இ) முத்துகள்
ஈ) வித்துகள்
Answer:
ஈ) வித்துகள்

2. என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு …………………… பெருகிற்று.
அ) காரி
ஆ) ஓரி
இ) வாரி
ஈ) பாரி
Answer:
இ) வாரி

3. ‘அக்களத்து’ என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
அ) அ + களத்து
ஆ) அக் + களத்து
இ) அக்க + அளத்து
ஈ) அம் + களத்து
Answer:
அ) அ + களத்து

4. கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………….
அ) கதிரென
ஆ) கதியீன
இ) கதிரீன
ஈ) கதிரின்ன
Answer:
இ) கதிரீன

5. ............ காலத்தில் பெய்யும் மழையே பயிர்கள் வாட்டமின்றி கிளைத்து வளரத் தேவையானது ஆகும்.
அ. கோடை
ஆ. குளிர்
இ. தகுந்த👍
ஈ. அறுவடை

6. மன்பதை காக்கும் மாபெரும் சிறப்பு …………………… க்கு உண்டு .
அ) மழை
ஆ) வயல்
இ) நிலம்
ஈ) உழவர்
Answer:
அ) மழை

7. தகடூர் யாத்திரை பாடல் பேசும் தொழில் ……………………..
அ) உழவுத் தொழில்
ஆ) நெய்தல் தொழில்
இ) மீன்பிடித் தொழில்
ஈ) மண்பாண்டத் தொழில்
Answer:
அ) உழவுத் தொழில்

8. புது வருவாய் என்னும் பொருளினைக் குறிக்கும் சொல் …………………
அ) வாரி
ஆ) எஞ்சாமை
இ) ஒட்டாது
ஈ) யாணர்
Answer:
ஈ) யாணர்

9. வளம் பெருக பாடல் ………………….. மன்னர் பற்றியது.
அ) சோழர்
ஆ) சேரர்
இ) பாண்டியர்
ஈ) பல்ல வர்
Answer:
ஆ) சேரர்

10. தர்மபுரியின் பழைய பெயர் ……………………..
அ) மாமண்டூர்
ஆ) வடுவூர்
இ) தகடூர்
ஈ) குரும்பூர்
Answer:
இ) தகடூர்

11.தவறானதை தேர்ந்தெடு
வாரி – செலவு👍
எஞ்சாமை – குறைவின்றி
முட்டாது – தட்டுப்பாடின்றி
ஒட்டாது – வாட்டம் இன்றி


12. கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் ………………………
அ) பெருமழை
ஆ) சிறு மழை
இ) எடை மிகுந்த மழை
ஈ) எடை குறைந்த மழை
Answer:
அ) பெருமழை

13. ‘வாசலெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) வாசல் + எல்லாம்
ஆ) வாசல் + எலாம்
இ) வாசம் + எல்லாம்
ஈ) வாசு + எல்லாம்
Answer:
அ) வாசல்+எல்லாம்

14. ‘பெற்றெடுத்தோம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) பெறு + எடுத்தோம்
ஆ) பேறு + எடுத்தோம்
இ) பெற்ற + எடுத்தோம்
ஈ) பெற்று + எடுத்தோம்
Answer:
ஈ) பெற்று + எடுத்தோம்

15. கால் + இறங்கி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………..
அ) கால்லிறங்கி
ஆ) காலிறங்கி
இ) கால் இறங்கி
ஈ) கால்றங்கி
Answer:
ஆ) காலிறங்கி

16. ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்குவது …………………….
அ) மழை
ஆ) உணவு
இ) உடை
ஈ) பணம்
Answer:
அ) மழை

17. கல் இல்லாக் காட்டில் …………………….. போட்டனர்.
அ) முருங்கைச் செடி
ஆ) கடலைச் செடி
இ) கருவேல மரம்
ஈ) காட்டு மல்லி
Answer:
ஆ) கடலைச் செடி

18. தவறானதை தேர்ந்தெடு
அ. வைகுக – தங்குக
ஆ. ஓதை – ஓசை
இ. வெரீஇ – அஞ்சி
ஈ. யாணர் - நீ வருவாய்👍

19. முள்ளில்லா காட்டில் …………………. போட்டனர்.
அ) முருங்கைச் செடி
ஆ) கடலைச் செடி
இ) கருவேல மரம்
ஈ) காட்டு மல்லி
Answer:
அ) முருங்கைச் செடி

20. ‘வனவாசம் சென்று விடுவோம்’ என்று கூறியவர் …………………..
அ) புலவர்
ஆ) குறவர்
இ) உழவர்
ஈ) மறவர்
Answer:
இ) உழவர்


21. ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்று குறிப்பிடும் நூல் …………………………..
அ) தொல்காப்பியம்
ஆ) அகநானூறு
இ) புறநானூறு
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
அ) தொல்காப்பியம்

22. சேரர்களின் தலைநகரம் ……………………
அ) காஞ்சி
ஆ) வஞ்சி
இ) தொண்டி
ஈ) முசிறி
Answer:
ஆ) வஞ்சி

23. பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது ……………………
அ) புல்
ஆ) நெல்
இ) உப்பு
ஈ) மிளகு
Answer:
ஆ) நெல்

24. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு ……………….
அ) காவிரி
ஆ) பவானி
இ) நொய்யல்
ஈ) அமராவதி
Answer:
ஈ) அமராவதி

25. வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்
அ) நீலகிரி
ஆ) கரூர்
இ) கோயம்புத்தூர்
ஈ) திண்டுக்கல்
Answer:
இ) கோயம்புத்தூர்

26.  ‘மாங்கனி நகரம்’ என்று அழைக்கப்படும் நகரம் ……………………
அ. கிருஷ்ணகிரி
ஆ. சேலம்👍
இ. தகடூர்
ஈ. தேனி

27. சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்ற ஊர் …………………..
அ. ஈரோடு
ஆ. மதுரை
இ. சின்னாளபட்டி👍
ஈ. கரூர்

28. சேரர்களின் நாடு ………………….. எனப்பட்டது.
அ. வளநாடு
ஆ. மலைநாடு
இ. பழநாடு
ஈ. குடநாடு👍

29 . பின்னலாடை நகரமாக …………………. விளங்குகிறது.
அ. சேலம்
ஆ. சின்னாளப்பட்டி
இ. குடநாடு
ஈ. திருப்பூர்👍

30. கொங்கு நாட்டில் பாயும் ஆறுகளில் 
தவறானது எது?
அ. வைகை👍
ஆ. பவானி
இ. நொய்யல்
ஈ. ஆன்பொருநை 

31. தமிழ்நாட்டின் ஹாலந்து’ என்று அழைக்கப்படும் ஊர் எது?
அ. மதுரை
ஆ. திண்டுக்கல்👍
இ. ஓசூர்
ஈ. சென்னை

32......... நகரத்திற்கு, வஞ்சிமா நகரம்’ என்ற பெயரும் உண்டு. 
அ. கோயம்புத்தூர்
ஆ. பழனி
இ. கரூர்👍
ஈ. கொற்கை

33. மூவேந்தர்களில் பழமையானவர்கள் …………………..
அ) சேரர்
ஆ) சோழர்
இ) பாண்டியர்
ஈ) பல்லவர்
Answer:
அ) சேரர்

34. சேரர்களின் கொடி ……………..
அ) புலி
ஆ) மீன் இ)வில்
இ) வில்
ஈ) முரசு
Answer:
இ) வில்

35. சேரனுக்கு உரிய பூ ……………………
அ) பனம்பூ
ஆ) வேப்பம்பூ
இ) அத்திப்பூ
ஈ) தாழம்பூ
Answer:
அ) பனம்பூ

36. “கொங்கு மண்டலச் சதகம்’ என்னும் நூலை இயற்றியவர் …………………….
அ) காளமேகப்புலவர்
ஆ) கார்மேகக் கவிஞர்
இ) கண்ண தாசன்
ஈ) வாணிதாசன்
Answer:
ஆ) கார்மேகக் கவிஞர்


37. பரப்பளவில் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் ………………
அ. ஓசூர்
ஆ. சிவகாசி
இ. சேலம்
ஈ. ஈரோடு👍

38. முட்டைக் கோழி வளர்ப்பிலும், முட்டை உற்பத்தியிலும் இந்தியாவிலேயே முதன்மை வகிக்கும் மாவட்டம் ………………………
அ. ஈரோடு
ஆ. நாமக்கல்👍
இ. கன்னியாகுமரி
ஈ. விருதுநகர்

39. ஏழைகளின் ஊட்டி ……….….
அ. ஏற்காடு👍
ஆ. ஏலகிரி
இ. கொல்லிமலை
ஈ. கோபி

40. முத்து நகரம் …………………….
அ. கோயம்புத்தூர்
ஆ. நெல்லை
இ. தூத்துக்குடி👍
ஈ. மதுரை

41. துப்பாக்கி வெடிமருந்து தொழிற்சாலை அமைந்துள்ள மாவட்டம்?
அ. திருப்பூர்
ஆ. திண்டுக்கல்
இ. நீலகிரி👍
ஈ. தர்மபுரி


42. விகாரப் புணர்ச்சி …………….. வகைப்படும்.
அ) ஐந்து
ஆ) நான்கு
இ) மூன்று
ஈ) இரண்டு
Answer:
இ) மூன்று

43. ‘பாலாடை’ – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி …………………….
அ) இயல்பு
ஆ) தோன்றல்
இ) திரிதல்
ஈ) கெடுதல்
Answer:
அ) இயல்பு

44. பொருத்துக
1. மட்பாண்டம் – அ) தோன்றல் விகாரம்
2. மரவேர் – ஆ) இயல்புப் புணர்ச்சி
3. மணிமுடி – இ) கெடுதல் விகாரம்
4. கடைத்தெரு – ஈ) திரிதல் விகாரம்

1. ஈ இ ஆ அ👍
2. இ ஆ ஈ அ
3. ஆ ஈ அ இ
4. அ ஈ ஆ இ


45. "ஆயிரங்காலத்துப் பயிர்"

அ) எதிர்பாராத ஒன்று
ஆ) ஆராய்ந்து பாராமல்
இ) இருப்பதுபோல் தோன்றும் ஆனால் இருக்காது
ஈ) நீண்டகாலமாக இருப்பது👍


46. தவறான இணை
அ. நூல் – Thread
ஆ. தறி – Loom
இ. பால்பண்ணை – Dairy farm
ஈ. தோல் பதனிடுதல் – Dying👍

47. சாயம் ஏற்றுதல்
அ.  Stitch
ஆ. Factory
இ. Dying👍
ஈ.  Ready made

48. தமிழ் அமுதம் என்பதில் தமிழ் ………………… மொழி.
அ) நிலை
ஆ) வரு
இ) தனி
ஈ) தொடர்
Answer:
அ) நிலை

49. தமிழ் அமுதம் என்பதில் அமுதம் ………………… மொழி.
அ) நிலை
ஆ) வரு
இ) தனி
ஈ) தொடர்
Answer:
ஆ) வரு

50. சிலை அழகு என்பது …………………. புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) உயிரீற்று
ஆ) மெய்யீற்று
இ) உயிர்முதல்
ஈ) மெய் முதல்
Answer:
அ) உயிரீற்று

51. மண்ணழகு என்பது ……………………… புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) உயிரீற்று
ஆ) மெய்யீற்று
இ) உயிர்முதல்
ஈ) மெய் முதல்
Answer:
ஆ) மெய்யீற்று

52. பொன்னுண்டு என்பது ……………………… புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) உயிரீற்று
ஆ) மெய்யீற்று
இ) உயிர்முதல்
ஈ) மெய் முதல்
Answer:
இ) உயிர்முதல்

53. பொற்சிலை என்பது …………………….. புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) உயிரீற்று
ஆ) மெய்யீற்று
இ) உயிர்முதல்
ஈ) மெய் முதல்
Answer:
ஈ) மெய்முதல்

54. தமிழ்த்தாய் என்பது ……………………. புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) இயல்பு
ஆ) திரிதல் விகாரம்
இ) தோன்றல் விகாரம்
ஈ) கெடுதல் விகாரம்
Answer:
இ) தோன்றல் விகாரம்

55. விற்கொடி என்பது ………………….. புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) இயல்பு
ஆ) திரிதல் விகாரம்
இ) தோன்றல் விகாரம்
ஈ) கெடுதல் விகாரம்
Answer:
ஆ) திரிதல் விகாரம்

56. மன மகிழ்ச்சி என்பது ………………….. புணர்ச்சிக்குச் சான்றாகும்.
அ) இயல்பு
ஆ) திரிதல் விகாரம்
இ) தோன்றல் விகாரம்
ஈ) கெடுதல் விகாரம்
Answer:
ஈ) கெடுதல் விகாரம்


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY