Ads Right Header

Onetime Registration - தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 
செய்தி வெளியீடு எண் : 07/2022 
நாள் : 01.02.2022 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலத்திற்கேற்ப தேவையான மாற்றங்களை அறிமுகம் செய்து அவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறது . மேலும் , தெரிவு முறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் பொருட்டும் . போட்டித் தேர்வுகளை விரைவாக நிறைவுசெய்யும் வகையிலும் , அவ்வப்போது சீர்திருத்தங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது . 

அதன் தொடர்ச்சியாக , தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறை நிரந்தரப்பதிவு ( One Time Registration - OTR ) கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் தங்களது ஆதார் குறித்த விவரங்களை 28.02.2022 ஆம் தேதிக்குள் , தவறாமல் இணைத்து எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிவிக்கைகளின் அடிப்படையில் தனது ஒருமுறை நிரந்தரப்பதிவு ( OTR ) கணக்கு மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் . 

மேலும் , இது குறித்து விளக்கம் ஏதேனும் தேவைப்படுமானால் , 18004190958 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி அல்லது helpdesk@tnpscexams.in /grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாக அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம் . 

கிரண் குராலா , இ.ஆ.ப. , 
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் .


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY