Ads Right Header

ஒன்பதாம் வகுப்பு இயல் 5.


ஒன்பதாம் வகுப்பு இயல் 5. 

விடைகள்.
                   
1) கீழ்க்கண்டவற்றில் சங்ககாலப் புலவர்களுடன் தொடர்பில்லாதவர் யார்?

அ) ஒக்கூர் மாசாத்தியார் 
ஆ) காவற்பெண்டு 
இ) காரைக்காலம்மையார்🌹 
ஈ) நப்பசலையார் 

2) பொருத்துக.

1) உயர்வு- 1) பண்டித ராமாபாய்
2) சிறப்பு- 2) முத்துலெட்சுமி 
3)துணிவு- 3) ஜடாஸ் சோபியா  ஸ்கட்டர்
4)புரட்சி- 4) மூவலூர் ராமாமிர்தம் 

A) 1-3, 2-2, 3-1, 4-4
B) 1-1, 2-4, 3-3, 4-2
C) 1-1, 2-2, 3-3, 4-4
D) 1-1, 2-3, 3-4, 4-2🌹

3) முதன் முதலில் பெண் கல்வியை ஹண்டர் குழு பரிந்துரை செய்த ஆண்டு?

அ) 1881
ஆ) 1882🌹
இ) 1884
ஈ) 1885

4)நீலாம்பிகை அம்மையார் இயற்றாத நூல் எது?

அ) முப்பெண்மணிகள் வரலாறு 
ஆ) பட்டினத்தார் பாடிய மூவர் 
இ) தனித்தமிழ் கட்டுரை 
ஈ) பரமானுப்புராணம்👍

5) "தணல்" என்னும் சொல்லின் பொருள்?

அ) அருகில்
ஆ) நீர் 
இ) நெருப்பு 🌹
ஈ) சொல்லல்

6) சரியாக பொருந்தாதது எது?

அ) வில்வாள்- உம்மைத்தொகை 
ஆ) ஆக்கல்- தொழிற்பெயர் 
இ) மலர்க்கை- உவமைத் தொகை 
ஈ) தவிர்க்க ஒணா- 
வேற்றுமைத்தொகை🌹

7)" மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" - என்று பாடியவர் யார்?

அ) பாரதியார்
ஆ) கவிமணி🌹
இ) நாமக்கல் கவிஞர் 
ஈ)பாவேந்தர்

8) பாரதிதாசன் எந்நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்?

அ) தமிழியக்கம் 
ஆ) குடும்ப விளக்கு
இ) இருண்ட வீடு 
ஈ) பிசிராந்தையார்🌹

9) "மேதைக்கு உரையாமை சொல்லும் உணர்வு" - என்னும் வரி இடம்பெற்ற  நூல் எது?

அ) இருண்ட வீடு 
ஆ) குடும்ப விளக்கு 
இ) சிறுபஞ்சமூலம் 🌹
ஈ) திருக்குறள் 

10) "உரையாமை"- என்பதை பகுபத உறுப்பிலக்கணப் படி பிரித்து எழுதுக?

அ) உரை+ய்+ய்+ஆ+மை
ஆ) உரை+ய்+ய்+ஆமை
இ) உரைஆ+மை
ஈ) உரை+ய்+ஆ+மை🌹

11)" நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே"-என் தலைச்சிறந்த நண்பன் எனக் கூறியவர் யார்?

அ) ஆபிரகாம்லிங்கன்🌹
ஆ) பாரதிதாசன்
இ) அண்ணா 
ஈ) மூ.வ

12) அண்ணாவின் பொன்மொழி அல்லாதது எது?

அ) கத்தியைத் தீட்டாதே உன்றன் புத்தியை தீட்டு.  வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும்.
ஆ) இளைஞர்களுக்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை. 
இ) பெரியாரின் புத்தகங்களைப் படிப்பதால் இளைஞர்களுக்கு புது முறுக்கு ஏற்படும்.🌹
ஈ) நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

13) உலக அளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் எது?

அ) கன்னிமாரா நூலகம்🌹 
ஆ) சரஸ்வதி மகால் நூலகம் 
இ) அண்ணா நூற்றாண்டு நூலகம்
ஈ) யாழ்ப்பாணம் நூலகம்

14) கீழ்கண்டவற்றில் எதிர்மறை இடைநிலை அல்லாதது எது?

அ) ஆ
ஆ) அல்
இ) இல்
ஈ) மை🌹

15) கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?

அ) இன்,கு,உடைய,உம்,ஐ, விட,கள்,ஆனால்,தான், போல,உடன் போன்றவை உரிச்சொல் விகுதிகள்.🌹
ஆ) இடைச்சொற்கள் தமிழில் மிகுதியாக இல்லை.
இ) இடைச்சொற்களே பயன்பாட்டை முழுமையாக்குகின்றன.
ஈ) இடைச்சொற்கள் பெயரையும் வினையையும் சார்ந்து இயங்கும் இயல்பு உடையன.

16) பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?

அ) 5 
ஆ) 6🌹
இ) 7
ஈ) 2 

17) திரைப்படமாக வந்த கோமல் சுவாமிநாதனின் நூல் எது?

அ) கருப்பு மலர்கள் 
ஆ) கல்வியில் நாடகம் 
இ) கரும்பலகை யுத்தம்
ஈ) தண்ணீர் தண்ணீர்🌹

18) தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை நாடகங்கள் திரைப்படங்கள் மூலமாக முதன் முதலில் பரப்பியவர் யார்? 

அ) பெரியார் 
ஆ) அண்ணா 🌹
இ) எம்.ஜி.ஆர் 
ஈ) கருணாநிதி

19) இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் எது?

அ) சரஸ்வதி மகால் நூலகம் 
ஆ) கன்னிமாரா நூலகம் 
இ) திருவனந்தபுரம் நூலகம்🌹 
ஈ) கீழ்த்திசை சுவடிகள் நூலகம்

20) அண்ணா உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை நடுவன் அரசு வெளியிட்ட ஆண்டு?

அ) 2009🌹
ஆ) 2005
இ) 2010
ஈ) 2002

21)சென்னை பெத்தநாயக்கன் பேட்டை கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக அண்ணா பணிபுரிந்த ஆண்டு?

அ) 1930
ஆ) 1935🌹
இ) 1937
ஈ) 1933

22) "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" எனப் பாடியவர் யார்? 

அ) பாரதியார் 🌹
ஆ) கவிமணி 
இ) பாரதிதாசன்
ஈ)  மூ.வ

23) குடும்பவிளக்கு எத்தனை பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது?

அ) 2
ஆ) 3
இ) 4
ஈ) 5🌹

24) பெண்களுக்கென முதல் தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டு?

அ) 1840 
ஆ) 1848🌹
இ) 1854
ஈ) 1852

25) கீழ்க்கண்டவற்றில் ஈ.த.  ராஜேஸ்வரி அம்மையார் பற்றி கொடுக்கப்பட்ட வகைகளில் தவறானது எது?

அ) தமிழ், இலக்கியம் அறிவியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கினார்.
ஆ) திருமந்திரம், தொல்காப்பியம், கைவல்யம் போன்ற நூல்களில் உள்ள அறிவியல் உண்மைகள் குறித்து சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.
இ) சென்னை மீனாட்சி கல்லூரியில் அறிவியல் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.🌹
ஈ)  அவர் வாழ்ந்த காலம்1906-1955

26)_______ ஆண்டு கோத்தாரிக் கல்விக்குழு தன் பரிந்துரையில் அனைத்து நிலைகளிலும் மகளிர் கல்வியை வலியுறுத்தியது?

அ) 1960
ஆ) 1964🌹
இ) 1968
ஈ) 1967

 27) முத்துலட்சுமி அம்மையார் அடையாற்றில் அவ்வை இல்லத்தை தொடங்கிய ஆண்டு?

அ) 1952
ஆ) 1932
இ) 1929
ஈ) 1930🌹

28) எதிர்மறை இடைநிலைகளில் பொருந்தாததைக் கண்டறி.

அ) தல்👍
ஆ) அல்
இ) இல்
ஈ) ஆ

29) சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் யார்?

அ) நக்கீரர் 
ஆ) மாக்காயனார்
இ) நல்லத்துவனார்
 ஈ) காரியாசான்🌹

30) சிறுபஞ்சமூலத்தின் ஒவ்வொரு பாடலிலும்_____ கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

அ) 2
ஆ) 3
இ) 5🌹
ஈ) 6 

31) அண்ணா ஆசிரியராக பணியாற்றாத இதழ் எது?

அ) காஞ்சி 
ஆ) நம் நாடு
இ) ஹோம்ரூல்
ஈ) இண்டியன் மிரர்🌹

32) வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தகசாலைத் தரப்படவேண்டும் எனக் கூறியவர் யார்?

அ)  கதே 
ஆ)  மூ.வ
இ) ஆபிரகாம் லிங்கன் 
ஈ) அண்ணா🌹

33) இடைச்சொற்கள் தாமாகத் தனித்து இயங்கும் இயல்பை உடையன அல்ல என்று கூறியவர் யார்?

அ) பவணந்தி முனிவர் 
ஆ) வீரமாமுனிவர் 
இ) தொல்காப்பியர் 🌹
ஈ) அகத்தியர்

34) சிறுபஞ்சமூலம் எத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?

அ) பதினெண்மேல்கணக்கு 
ஆ) தனிப்பாடல் திரட்டு 
இ) சிற்றிலக்கியம் 
ஈ) பதினெண்கீழ்க்கணக்கு🌹 

35) "பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோவென" பாடியவர் யார்? 

அ) பெரியார் 
ஆ) பாரதியார் 
இ) பாரதிதாசன் 🌹
ஈ) மூவலூர் இராமாமிர்தம்

36) சாரதா சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு என்ன?

அ) 1920
ஆ) 1929🌹
இ) 1928
ஈ) 1930

37) சாரதா சட்டம் எதற்காகக் கொண்டுவரப்பட்டது?

அ) சாதியை ஒழிக்க 
ஆ) விதவை மறுமணம் 
இ) குழந்தை திருமணம்🌹
ஈ) உயர் கல்வியை ஊக்குவிக்க 

38) பதம் எத்தனை வகைப்படும்?

அ) 2 🌹
ஆ) 3
இ) 4
 ஈ) 5

39) சொல்லின் இறுதியில் நின்று திணை,பால்,எண், இடம் காட்டக் கூடியது எது?

அ) சந்தி 
ஆ)சாரியை
இ) விகுதி 🌹
ஈ) விகாரம் 

40) "ஆ" -என்பது எவ்வகை இடைநிலை?

அ) பெயர் இடைநிலை
ஆ) எதிர்மறை இடைநிலை🌹 
இ) நிகழ்கால இடைநிலை 
ஈ) இறந்தகால இடைநிலை


41) “முடியாது பெண்ணாலே” என்ற மாயையினை முடக்க எழுந்தவர் ………

அ) அறிஞர் அண்ணா
ஆ) அம்பேத்கர்
இ) தந்தை பெரியார்👍
ஈ) காமராஜர்

42) “பட்டினத்தார் பாராட்டிய மூவர்” என்ற நூலை இயற்றியவர்?

அ) இராஜேஸ்வரி அம்மையார்
ஆ) காரைக்கால் அம்மையார்
இ) நீலாம்பிகை அம்மையார்👍
ஈ) சிவகாமி அம்மையார்

43) ஈ.வெ.ரா – நாகம்மை இலவசக்கல்வி உதவித்திட்டம் ………. உரியது.

அ) பட்டமேற்படிப்பிற்கு👍
ஆ) பட்டய மேற்படிப்பிற்கு
இ) பொறியியல் படிப்பிற்கு
ஈ) மருத்துவ படிப்பிற்கு

44) சூரியன், பரமாணுப்புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியவர்?

அ) சிவகாமி அம்மையார்
ஆ) காரைக்கால் அம்மையார்
இ) நீலாம்பிகை அம்மையார்
ஈ) இராஜேஸ்வரி அம்மையார்👍

45) "நசை" என்பது குறிக்கும் 
சொற்கள் எவை?

அ) அறிவு, அழகு, நன்மை 
ஆ) காடு, மணம், வாய்க்கால்
இ) ஆசை, குற்றம், ஈரம்👍
ஈ) மேன்மை, இசை, வீரம்

46) மொழிப் பயன்பாட்டை முழுமையாக்குவது ……………… ஆகும்.

அ) உரிச்சொற்கள்
ஆ) பெயர்ச்சொற்கள்
இ) வினைச்சொற்கள்
ஈ) இடைச்சொற்கள்👍

47) சொற்றொடரின் இறுதியில் வந்து இசைவுப் பொருளில் வரும் இடைச்சொல் ……..

அ) இல்லை
ஆ) அம்இ
இ) ஆம்👍
ஈ) இல்

48) உரிச்சொல் எப்பொருள்களுக்கு உரியதாய் வரும்.

1) குறிப்பு 
2) பண்பு

அ) 1 சரி
ஆ) 2 சரி
இ) இரண்டும் சரி👍
ஈ) இரண்டும் தவறு

49) உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று கூறியவர் யார்?

அ) நன்னூலார்👍
ஆ) தொல்காப்பியர்
இ) இறையனார்
ஈ) வீரமா முனிவர்

50) ஒழியிசை முதலா அசைநிலை ஈறாக எட்டுப்பொருளில் வரும் இடைச்சொல் எது?

அ) ஆ
ஆ) ஏ
இ) ஓ👍
ஈ) இ

51) சரியான கூற்றினைத் தேர்க.
1. அன்று என்பது ஒருமைக்கு உரியது.
2. அல்ல என்பது பன்மைக்கு உரியது
3. அன்று என்பது பன்மைக்கு உரியது
4. அல்ல என்பது ஒருமைக்கு உரியது

அ) 1, 2 – சரி, 3, 4 – தவறு👍
ஆ) 1, 2 – தவறு 3, 4 – சரி
இ) 1, 3 – சரி, 2, 4 – தவறு
ஈ) 1, 3 – தவறு, 2, 4 – சரி

52) ‘கடிநகர்’ என்னும் சொல்லில் ‘கடி’ என்பதன் பொருள் …………………

அ) மணம்
ஆ) காவல்👍
இ) விரைவு
ஈ) கூர்மை

53) தொழிற்பெயர் விகுதிகளில் பொருந்தாததைக் கண்டறி.

அ) தல்
ஆ) அம்
இ) மை
ஈ) இய👍



Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY