Ads Right Header

வினாக்கள் - ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் -8


ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் -8 


வினாக்கள்

1 ) ஈ.வெ.ரா வுக்கு பெரியார் என்னும் பட்டம் எப்போது வழங்கப்பட்டது ? 
A ) நவம்பர் 13,1944 
B ) டிசம்பர் 3,1940 
C ) நவம்பர் 2,1939 
D ) நவம்பர் 13,1938 

2 ) பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்த ஆண்டு ? 
A ) 1920 
B ) 1924 
C ) 1925 
D ) 1923 

3 ) " தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும் மண்டை சுரப்பை உலகு தொழும் " என பெரியாரை பற்றிப் பாடியவர் யார் ? 
A ) அண்ணா 
B ) மூ.வ 
C ) பாரதிதாசன் 
D ) வல்லிக்கண்ணன் 

4 ) உருவகம் அல்லாதது எது ? 
A ) பிறவிஇருள் 
B ) ஒளியமுது 
C ) வாழ்க்கைப்போர் 
D ) நிகழ்காலம் 

5 ) " லையன்ஸீக்கு பலி " - என்பது யாருடைய முதல் சிறுகதை ? 
A ) வல்லிக்கண்ணன்  
B ) பாரதிதாசன் 
C ) கவிமணி 
D ) ந.பிச்சமூர்த்தி 

6 ) " ஆக்குவது ஏனெல் அறத்தை 
ஆக்குக போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக " - என்னும் பாடல் வரி இடம் பெற்ற நூல் எது ? 
A ) திருக்குறள் 
B ) நன்னூல் 
C ) யசோதரகாவியம் 
D ) முத்தொள்ளாயிரம்

7 ) யசோதரன் எந்நாட்டு மன்னன்?
அ) மாளவம்
ஆ) மகதம்
இ) கலிங்கம்
ஈ) அவந்தி

8 ) யாப்பிலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை?
A ) 2 
B ) 3 
C ) 4 
D ) 5 

9 ) தவறாக பொருந்தியுள்ளது எது ? 
A ) இரண்டு சீர்- குறளடி 
B ) மூன்று சீர் - சிந்தடி 
C ) நான்கு சீர்- அளவடி 
D ) ஐந்து சீர்- கழிநெடிலடி 

10 ) தளை எத்தனை வகைப்படும் ? 
A ) 2 
B ) 7 
C ) 8 
D ) 10 

11 ) " திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று " - என்னும் குறளில் எத்தொடை இடம்பெற்றுள்ளது ? 
A ) எதுகை தொடை 
B ) மோனை தொடை , 
C ) இயைபுத் தொடை 
D ) செந்தொடை 

12 ) " திங்கள்முடி சூடுமலை 
தென்றல் விளையாடுமலை " - என்று பாடியவர் யார் ? 
A ) பாரதிதாசன் 
B ) தாயுமானவர் 
C ) குமரகுருபரர் 
D ) புலவர் குழந்தை 

13 ) பொருந்தாதது எது ? 
A ) புத்துலக தொலைநோக்காளர் 
B ) வைக்கம் வீரர் 
C ) பெண்ணிணப் போர் முரசு 
D ) சுத்ததியாகி

14 ) மொழி என்பது போராட்டத்திற்குரிய ஒரு ……………… ஆகும்.
அ) போர்க்கருவி
ஆ) வாயில்
இ) துணை
ஈ) இணை

15 ) பெரியார் விதைத்த எவை ? 
1 ) பெண்களுக்கான இட ஒதுக்கீடு 
2 ) பெண்களுக்கான சொத்துரிமை 
3 ) கலப்பு திருமணம் 
4 ) தமிழில் தெய்வ வழிபாடு 
A ) 1,2,4 
B ) 2,4 
C ) 1,2,3,4
D ) 1,4 
 

16 ) பெரியார் எதை எதிர்க்கவில்லை ? 
A ) இந்தி திணிப்பு 
B ) குலக்கல்வித் திட்டம் 
C ) கள்ளுக்கடை மூடல் 
D ) மணக்கொடை 

17 ) கூற்று ( 1 ) : - பெண்விடுதலையை விட நாட்டு விடுதலை தான் முதன்மையானது என்று பெரியார் கூறினார் . 
( 2 ) : - குடும்பச் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு வழங்கப் பட வேண்டும் என பெரியார் வலியுறுத்தினார் . 
A ) கூற்று 1 சரி , 2 தவறு 
B ) கூற்று 1 தவறு 2 சரி 
C ) கூற்று 1,2 சரி 
D ) கூற்று 1,2 தவறு

18 ) பெரியார் நடத்தாத இதழ்?
A ) குடியரசு
B ) இந்தியா
C ) உண்மை
D ) ரிவோல்ட்


19 ) ரவி பொருள் கூறுக.

அ) ஆணின் பெயர்
ஆ) கதிரவன் 
இ) சினம் 
ஈ) நற்செயல் 

20 ) யசோதர காவியம் எத்தனை சருக்கங்களைக் கொண்டது ? 
A ) 5 
B ) 3 
C ) 2 
D ) 4 

21 ) " இணைகின்றன " -என்பதை பகுபத உறுப்பிலக்கணம் படி பிரித்து எழுதுக ? 
A ) இணை + கிறு + அன் + அ 
B ) இணை + கின்று + அன் + அ 
C ) இணை + கின்று + அன 
D ) இணை + கிறு + அன 

22 ) " இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணை நல்வாழ்க்கைக்கான மெய்யியல் உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள் " - என எழுதியவர் யார் ? 
A ) பாரதிதாசன் 
B ) மூ.வ 
C ) சி.மணி 
D ) வல்லிக்கண்ணன் 

23 ) கலைமகள் இதழ் வழங்கிய பரிசை ந.பிச்சமூர்த்தி பெற்ற ஆண்டு ……………
அ) 1932
ஆ) 1933
இ) 1934
ஈ) 1935

24 ) " வாயிலும் சன்னலும் " -என்பதன் இலக்கணக்குறிப்பு யாது ? 
A ) உம்மைத்தொகை 
B ) எண்ணும்மை 
C ) அடுக்குத்தொடர் 
D ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை 

25 ) யசோதரகாவியம் எம் மொழி நூலைத் தழுவி எழுதப்பட்டது ? 
A ) தெலுங்கு 
B ) பாலி 
c ) வடமொழி
D ) பிராகிருதம் 

26 ) யசோதர காவியம் என்னும் நூலின் ஆசிரியர் யார் ? 
A ) யசோதரன் 
B ) நல்லத்துவனார் 
c ) பெருவாயின் முள்ளியார் 
D ) ஆசிரியர் பெயர் தெரியவில்லை

27 ) " தம் மக்கள் மெய் தீண்டல் உயிருக்கு இன்பம் " எனக் கூறியவர் யார் ? 
A ) ஔவையார் 
B ) பாரதியார் 
c ) பெரியார் 
D ) திருவள்ளுவர் 

28 ) பிச்சை, ரேவதி என்ற புனைபெயர்களில் படைப்புகளை எழுதியவர் யார்?
அ) கண்ண தாசன்
ஆ) மீரா
இ) தாராபாரதி
ஈ) ந.பிச்சமூர்த்தி

29 ) அசை - எத்தனை வகைப்படும் ? 
A ) 3 
B ) 4 
C ) 2 
D ) 5 

30 ) தொடை எத்தனை வகைப்படும்?
A ) 7 
B ) 8         www.tnkural.com
C ) 5 
D ) 6

31) புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) மீரா
ஈ) ந.பிச்சமூர்த்தி

32) யாப்புப்பிடியில் இருந்து விடுபட்டவையே …………… ஆகும்.
அ) மரபுக் கவிதை
ஆ) சங்கப் பாடல்
இ) காப்பியம்
ஈ) புதுக்கவிதை

33) “புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும்” என்னும் நூலை எழுதியவர் ……………
அ) நெல்லைக்கண்ணன்
ஆ)வல்லிக்கண்ணன்
இ) ஈரோடு தமிழன்பன்
ஈ) ந. பிச்சமூர்த்தி

34) யசோதர காவியத்தின் சருக்கங்கள் எத்தனை?
அ) ஐந்து
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஆறு

35) ‘ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்கு’ என்று குறிப்பிடும் இலக்கியம்
அ) கலித்தொகை
ஆ) யரோதர காவியம்
இ) நன்னூல்
ஈ) புறநானூறு

36) யசோதர காவியம் ………….. நூல்களில் ஒன்று.
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) ஐம்பெருங்காப்பியம்
ஈ) ஐஞ்சிறுகாப்பியம்

37) ஐஞ்சிறு காப்பியங்களில் தவறானது?
அ) நீலகேசி
ஆ) உதயண குமார காவியம்
இ) சூளாமணி
ஈ) திருக்குறள்

38) நேர்/நேர்/நிரை 
அ) கருவிளங்காய்
ஆ) கூவிளம்
இ) தேமாங்காய்
ஈ) தேமாங்கனி

39) வயம் – பொருந்தாத ஒன்றை தேர்க
அ) வலிமை
ஆ) வெற்றி
இ) வேட்கை 
ஈ) வெள்ளம்

40) ஓதம் – சரியான ஒன்றை தேர்க
அ) குதிரை
ஆ) ஆடு
இ) ஈரம்
ஈ) முயல்

41) காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது – இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்பாடு யாது?
அ) நாள்
ஆ) மலர்
இ) காசு
ஈ) பிறப்பு

42) மரபுக் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணம் எது?
அ) சொல்
ஆ) பொருள்
இ) யாப்பு
ஈ) அணி

43) சீர் எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து

44) காய்ச்சீர்களை ………….. என்று அழைக்கிறோம்.
அ) கலித்தளை
ஆ) இயற்சீர்கள்
இ) வெண்சீர்கள்
ஈ) ஒன்றிய வஞ்சித்தளை

45) தொடை என்பதன் பொருள் யாது?
அ) எடுத்தல்
ஆ) தொடுத்தல்
இ) முடித்தல்
ஈ) எழுதுதல்

46) காய் முன் நிரை வருவது ………
அ) கலித்தளை
ஆ) இயற்சீர் வெண்டளை
இ) வெண்சீர் வெண்டளை
ஈ) ஒன்றிய வஞ்சித்தளை

47) ஆறுசீர் அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டது ……
அ) அளவடி
ஆ) நெடிலடி
இ) கழிநெடிலடி
ஈ) சிந்தடி

48) ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல் – இவ்வடிகளில் இடம்பெற்ற தொடை நயங்கள் …………….
அ) எதுகை, மேனை
ஆ) அளபெடை, இரட்டை
இ) இயைபு, முரண்
ஈ) அந்தாதி, செந்தொடை

49) திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று – இவ்வடிகளில் இடம்பெற்ற தொடை நயம் …………
அ) எதுகை
ஆ) மோனை
இ) இயைபு
ஈ) அந்தாதி

50) லாவோட்சின் சிந்தனை …………. எனப்படும்.
அ) லாவோட்சின் பக்கம்
ஆ) தாகாவியம்
இ) தாவோவியம்
ஈ) லாவோட்சும் சினமும்




Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY