Ads Right Header

குடிமைப் பணித் தேர்வு மையத்தில் பயிற்சி : இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

 


குடிமைப் பணித் தேர்வுகளுக்கு      பயிற்சி அளிக்கும் அரசு பயிற்சி மையத்தில் சேர வெள்ளிக்கிழமை          ( அக் .30 ) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது . இதுகுறித்து , அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தின் இயக்குநர் வெ.இறையன்பு வியாழக்கிழமை வெளி யிட்ட அறிவிப்பு : சென்னை பசுமை வழிச்சாலையில் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது . தங் குமிடம் , உணவு விடுதி , நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மையத்தில் உள்ளன . குடிமைப் பணி முதன்மைத் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு மாதந்தோறும் ரூ .3 ஆயிரம் ஊக்கத் தொகை அளிக் கப்படுகிறது . தமிழக மாணவர்கள் எங்கு பயிற்சி பெற்று முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும் , முதன்மைத் தேர்வுக்கான பயிற்சிக்கு விண் ணப்பிக்கலாம் . 

வெள்ளிக்கிழமை ( அக் . 30 ) மாலை 6 மணி முதல் நவம்பர் 3 - ஆம் தேதி வரை பெயர்களை இணையதளத்தில்                    ( www . civilservicecoaching.com ) பதிவு செய்யலாம் . பதிவு செய்யும் மாண வர்கள் , வருமானச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தற்கான அத்தாட் சியை இணைக்க வேண்டும் . பதிவு செய்த 225 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும் . அவர்களில் 140 பேர் இலவசமாகத் தங்கிப் படிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன . 85 பேர் தினமும் நேரில் வந்து பயிற்சி பெற்றுச் செல்லலாம் என்று தனது அறிவிப்பில் இறையன்பு தெரிவித்துள்ளார் .

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY