Ads Right Header

மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணித் தேர்விற்கு கட்டணமில்லாப் பயிற்சி!

செய்தி வெளியீடு எண் : 1318 
நாள் : 10 : 12.2021 செய்தி வெளியீடு குடிமைப் பணிகளுக்கான 
( ஐ.ஏ.எஸ்.ஐ.பி.எஸ் . ) 2022 ஆம் ஆண்டு முதல்நிலைத் தேர்வுப் பயிற்சி 

தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் . 

சென்னை மற்றும் அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி நிலையங்கள் , கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் , தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆகியோருக்கு , 05.06.2022 ( ஞாயிறு ) அன்று நடைபெற இருக்கும் மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணித் தேர்விற்கு கட்டணமில்லாப் பயிற்சியினை அளிக்க உள்ளது . 

சென்னை , அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் கட்டணமில்லாமல் தங்கும் வசதி . சத்தான உணவு மற்றும் தரமான நூலகம் , காற்றோட்டமுள்ள வகுப்பறைகள் ஆகியவற்றை வழங்குகிறது . இப்பயிற்சி மையம் 225 முழுநேரத் தேர்வர்களையும் , 100 பகுதிநேரத் தேர்வர்களையும் முதல்நிலைப் பயிற்சிக்காக அனுமதிக்கிறது . அதே போன்று அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி நிலையங்கள் , கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் தலா 100 முழுநேரத் தேர்வர்களை முதல்நிலைத் தேர்வுக்காக அனுமதிக்கின்றன .

2022 - ஆம் ஆண்டில் மத்திய தேர்வாணையக்குழு ( UPSC ) நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதுவதற்கு . பயிற்சி பெற விரும்பும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com வாயிலாக 11-12 2021 முதல் 28.12.2021 வரை விண்ணப்பிக்கலாம் . 

இப்பயிற்சி மையங்களில் ஏற்கெனவே முதல்நிலைத் தேர்வுக்கு முழுநேரப்பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் மேலும் , பயிற்சியில் சேரவிரும்புவர்கள் தங்கள் கல்வி மற்றும் வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை மத்திய தேர்வாணையக் குழுவின் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் , தகுதியுடைய நபர்கள் 23.01.2022 ( ஞாயிற்றுக் கிழமை ) அன்று நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் . 

முதல் நிலைத் தேர்வுக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்டு , தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பயிற்சி மையங்களில் இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாகப் பயிற்சிக்கு அழைக்கப்படுவர் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் . 

தலைமைச் செயலாளர் / பயிற்சித் துறை
தலைவர் .

வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை -9




Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY