Ads Right Header

GROUP 1&2&4 - பொது அறிவு வினாவிடை!



எந்த ஆண்டு புரந்தர் கோட்டையில் சிவாஜி சுற்றி வளைக்கப்பட்டார் ?
விடை : 1665                                                             
புரந்தர் உடன் படிக்கை எந்த ஆண்டு சிவாஜி மற்றும் ஜெய்சிங் இடையே போடப்பட்டது ?
விடை : 1665- ஜூலை-11

அரபிக்கடலில் இருந்த முகலாயர்களின் மிக முக்கிய துறைமுகமான சூரத்யை சிவாஜி தாக்கிய ஆண்டு ?
விடை:1664     

சிவாஜியை வீழ்த்தவும்,பீஜப்பூரை இணைக்கவும் ஔரங்கசீப் ராஜபுத்திர தளபதி யாரை சிவாஜிக்கு எதிராக அனுப்பினார் ? விடை : ஜெய்சிங்

ஔரங்கசீப் எந்த ஆண்டு முகாலாய மன்னராக அரியனை ஏறினார் ?
விடை: 1658-ஜூலை மாதம்                                     
ஔரங்கசீப் சிவாஜியை அடக்க தக்காணத்தின் ஆளுநராக யாரை நியமித்தார் ? விடை:செயிஷ்டகான்.         
சிவாஜி எத்தனை படை வீரர்களுடன் சென்று செயிஷ்டகானின் இல்லத்தை தாக்கினார் ? விடை :400                             

செயிஷ்டகான் எந்த ஆண்டு ஔரங்கசீப்பால்  மீண்டும் டெல்லிக்கு அழைக்கப்பட்டார் ? விடை : 1663

"மலையில் ஒளிந்து கொண்டிருக்கும் எலியை கையில் சங்கிலிக் கட்டி இழுத்து வருவதாக கூறியவர் யார் ? " விடை : அப்சல்கான்.                                                     
சிவாஜி அப்சல்கானுடன் எந்த ஆண்டு போரில் ஈடுபட்டார் ? விடை : 1659

பீஜப்பூரின் அரசர் முகமது அடில்சா எந்த ஆண்டு இறந்தார் ? விடை :1656               

ஔரங்கசீப்1657 ஆம் ஆண்டு கைப்பற்றிய இடங்கள் ?
விடை ; பீடார், கல்யாணி,பரிந்தர்
                                     
ஔரங்கசீப் டெல்லியை நோக்கி சென்ற பின் சிவாஜி வடக்கு கொங்கணத்தின் மீது போர் தொடுத்து எந்தெந்த கோட்டைகளைக் கைப்பற்றினார் ? விடை : கல்யாண்,பிவாண்டி,மாகுலி

சிவாஜி எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை இராணுவத்திலிருந்து விலகி இருந்தார் ? விடை : 1649-1655                     
சிவாஜி 1656 ஆம் ஆண்டு கைப்பற்றிய இடம் ?
விடை : சதாரா மாவட்டத்தில்
உள்ள ஜாவ்லி. 
                                               
சிவாஜி 1656 ஆம் ஆண்டு உருவாக்கிய.புதிய கோட்டை ?
விடை :பிரதாப்கார்


சிவாஜி 1645 ஆம் ஆண்டு கைப்பற்றிய கோட்டை ? விடை :கோல் கொண்டா கோட்டை.                                                         

சிவாஜி 1646 ஆம் ஆண்டு பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கைப்பற்றிய கோட்டை ?
விடை : தோர்னார் கோட்டை.     

சிவாஜி 1646 ஆம் ஆண்டு புனரமைத்த கோட்டை ?
விடை : ரெய்கார்

தவறுகள் சுட்டிக் காட்டல்: 7 ஆம் வகுப்பு 2 nd term ல் தாதாஜி கொண்டதேவ் 1649 ல் இறந்தார் என்று தவறாக உள்ளது 1647ல் இறந்தார் என்பதே சரி.

தவறுகள் சுட்டிக்காட்டல் : 11 ஆம்  வகுப்பு 2 and term புத்தகத்ததில் சிவாஜி தன்னுடைய 19 வது வயதில் முதல் முறையாக  இராணுவத்தில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார் என்று தவறாக உள்ளது 18 வயதிலேயே ஈடுபடத் தொடங்கினார் என்பதே சரி.

சிவாஜியின் தந்தை வழி ?
விடை ; ஷாஜி போன்ஸ்லே - மேவாட்டின் - சியோடியாக்கள்.
                                           
சிவாஜியின் தாய் வழி ? விடை ; ஜீஜாபாய் ,தேவகிரியை ஆண்ட யாதவர்கள்                                                   

சிவாஜிக்கு போர்க்கலை,நிர்வாகம், மற்றும் குதிரையேற்றம் கற்று கொடுத்த ஆசிரியர் ?
விடை :தாதாஜி கொண்டதேவ்

தவறுகள் சுட்டி காட்டல் :7 ஆம் வகுப்பு 2 nd term புத்தகத்தில் சிவாஜியின் குரு தாதாஜி கொண்டதேவ் என்று உள்ளது.அது தவறானது சிவாஜியின் குரு ராம்தாஸ் , சிவாஜியின் பாதுகாவலர் மற்றும் ஆசிரியர் தான் தாதாஜி கொண்டதேவ்

ஷாஜி போன்ஸ்லே யாரின் கீழ் சேவை செய்தார் ? விடை : அகமது நகர் மாலிக் அம்பர்  மற்றும் பீஜப்பூர் அரசர்.                 

ஷாஜி போன்ஸ்லேவின் ஜாகீர்தாரர் ? விடை : தாதாஜி கொண்டதேவ்.                 
ஜாகீர்தாரர் என்பது ?
விடை : இராணுவம் மற்றும் நிர்வாகத்தை ஆட்சி செய்வதற்காக வழங்கப்பட்ட.நிலத்தை ஆட்சி செய்பவர்

மராத்தியர்கள் பதிவிடப்படுகிறது # சிவாஜி பிறந்த ஆண்டு ? விடை : 1627   

சிவாஜியின் பெற்றோர் ?
விடை : ஷாஜி போன்ஸ்லே மற்றும் ஷாஹி போன்ஸ்லே வின் முதல் மனைவி ஜூஜாபாய்             

சிவாஜி பிறந்த இடம் ?
விடை : ஜீன்னார்  அருகே உள்ள ஷிவ்னார்

சிவாஜியின் வாழ்வில் கணிசமாக செல்வாக்கு செலுத்திய இரு பக்த முன்னோடிகள் ?
விடை : துக்காரம் ,ராம்தாஸ்.                                     

16ஆம் நூற்றாண்டின்
எந்தெந்த அரசர்களுக்கு இடையே மராத்தியர்கள் குதிரைப் படையில் பணியமர்த்தப்பட்டனர் ?
விடை : பீஜப்பூர், அகமது நகர்

மராத்தியர் ஆட்சிக் காலத்தில் பிரதம அமைச்சர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?
விடை : பேஷ்வாக்கள்.
                                                       மராத்தியர்கள் பேஷ்வாக்களின் உதவியுடன் எந்த ஆண்டு முதல் மேலாதிக்கம் பெற்றனர் ?
விடை :1761   

யாருடைய ஆட்சி காலத்தில் பேஷ்வாக்கள் உண்மையான மதிப்பைப் பெற்றனர்? விடை : ஷாகுவின்

கொரில்லா போர் முறையின் தலைவர் என்று அழைக்கப்படுபவர் ?
விடை : சிவாஜி                                                                   
 கொரில்லா சமுதாயம் பிராமண சமுதாயத்தை சார்ந்தது அல்ல ,மாறாக அது அடிமட்ட மக்களின் நிலையைச் சார்ந்தது எனக் கூறியவர் ?
விடை :நீதிபதி ரானடே
                                 
மராத்தியர்கள் யாரின் கீழ் பணியாளர்களாக செயல்பட்டு
வந்தனர் ? விடை : பாமினியர்கள்

நன்றி. SHAHUL TNPSC ASPIRANT.
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY