Ads Right Header

குப்தர்கள் முக்கிய வினாவிடை!

 


1. யாருடைய காலம் பண்பாட்டு மறுமலர்ச்சியின் காலம் செவ்வியல் கலைகளின் காலம் என அழைக்கப்படுகிறது ? குப்தர்களின் காலம் 

2. நீதிசாரம் ( தர்ம சாத்திரம் ) யாரால் எழுதப்பட்டது ? காமந்தகார் 

3. விசாகதத்தரின் இரு நூல்கள் ?               அ ) தேவி சந்திரகுப்தம் ஆ ) முத்ராராட்சம் 

4. சீன பயணி பாகியான் யாருடைய காலத்தில் இந்தியா வந்தார் ? 2 ம் சந்திரகுப்தர் 

5. மெஹரோலி இரும்பு தூண் கல்வெட்டு யாருடைய சாதனைகளை குறிக்கிறது? முதலாம் சந்திரகுப்தர்

6. அலகாபாத் தூண் கல்வெட்டு யாருடைய ஆட்சியை விளக்குகிறது ?சமுத்திரகுப்தர் 

7. அலகாபாத் தூண் கல்வெட்டு யாரால் பொறிக்கப்பட்டது ? ஹரிசேனர் 

8. அலகாபாத் தூண் கல்வெட்டு எந்த வரி வடிவத்தில் எத்தனை வரிகளை கொண்டது ? 

நாகரி வடிவம் ( சமஸ்கிருதம் ) 33 வரி 

9. லிச்சாவி என்பதன் பொருள் ? வடக்கு பீகாரில் இருந்த பழமையான கனசங்கம் இது கங்கைக்கும் நேபாள தெராய்க்கும் இடைப்பட்ட பகுதி .

10. முதலாம் சந்திரகுப்தரின் மனைவி குமார தேவி எந்த மரபை சேர்ந்தவர் ? லிச்சாவி

11 - குப்த வம்சத்தின் முதல் அரசர்? ஶ்ரீகுப்தர்

12. முதலாம் சந்திரகுப்தரின் காலம் ?    (கிபி 319-335 ) 

14. முதலாம் சந்திரகுப்தரின் தந்தை ?  

13. மகாராஜா -அதிராஜா என்ற பட்டத்தை பெற்றவர் யார் ?

கடோத்கஜர் 

15. சமுத்திரகுப்தர் மௌரிய பரம்பரையில் வந்ததாக கூறிய சான்று எது ? அசோகரின் கல்வெட்டு 

16. கங்கைச் சமவெளியின் மேற்கு பகுதியில் ஒன்பது அரசர்களை வென்றவர் யார் ? சமுத்திரகுப்தர் 

17. சமுத்திர குப்தரின் எந்த கல்வெட்டு அவர் பிரயாகைக்கு மேற்கே மதுரா வரையுள்ள செழிப்பான நிலங்கள் முழுவதையும் கைப்பற்றினார் என்று கூறுகிறது ? அலகாபாத் ( பிரயாகை ) கல்வெட்டு 

18. தெய்வ புத்திர சகானுசாகி என்பது ? ஒரு குஷாண பட்டம் 

19. யாருடைய காலத்தில் இலங்கை அரசன் மேகவர்மன் பரிசுகளை அனுப்பி கயாவில் பௌத்த மடம் கட்ட அனுமதி கோரினார் ? சமுத்திரகுப்தர் 

20. சமுத்திர குப்தரின் ஆட்சிக்காலம் ? 11 - குப்தர் 40 ஆண்டுகள் 

21. கவிராஜா என்ற பட்டத்தைப் பெற்றவர் யார் ? சமுத்திரகுப்தர் 

22. வசுபந்து என்ற புத்த அறிஞரை ஆதரித்தவர் ? சமுத்திரகுப்தர் 

23. ஹரிசேனர் என்ற அறிஞரை ஆதரித்த குப்தரசர் ? சமுத்திரகுப்தர் 

24. யாருடைய காலத்தில் வீணை நாணயங்கள் பொறிக்கப்பட்டது ? சமுத்திரகுப்தர் 

25. இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக்காலம் ? 40 ஆண்டுகள் 

26. இராம குப்தர் உடன் வாரிசுரிமைக்கு போராடி ஆட்சிக்கு வந்தவர் யார் ? இரண்டாம் சந்திரகுப்தர் 

27. விக்ரமாதித்யன் என்று அழைக்கப்பட்டவர் ?                       இரண்டாம் சந்திரகுப்தர் 

28. பாடலிபுத்திரத்தை தலைநகரமாக கொண்டவர் ? இரண்டாம் சந்திரகுப்தர் 

29.400 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த சாக அரசர்களை படையெடுப்பின் மூலம் வென்றவர் யார் ? இரண்டாம் சந்திரகுப்தர் 

30. வாகட இளவரசருக்கு தன் மகள் பிரபாவதியை திருமணம் செய்து கொடுத்தவர் ? இரண்டாம் சந்திரகுப்தர் 

31. விக்ரமன் , தேவ குப்தன் தேவராஜன் , சிம்ஹவிக்ரமன் , விக்ரமாதித்தன் சாகரி ஆகிய பெயர்கள் யாரைக் குறிக்கும் ? இரண்டாம் சந்திரகுப்தர் 

32.இரண்டாம் சந்திரகுப்தரின் அவையில் கலை இலக்கியம் அறிவியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ? நவரத்தினங்கள் 

33. அகராதி உருவாக்கியவர் யார் ? அமர சிம்மர் 

34. வெள்ளி நாணயங்களை வெளியிட்ட முதல் குப்த அரசர் ? இரண்டாம் சந்திரகுப்தர் 

35. இரண்டாம் சந்திரகுப்தர்க்குப்பின் ஆட்சி செய்தவர் ? முதலாம் குமார குப்தர் 

36. நாளந்தா பல்கலைக் கழகத்தை தோற்றுவித்தவர் யார் : குமார குப்தர் 

37. குப்த வம்சத்தின் கடைசி பேரரசர் ? ஸ்கந்த குப்தர் 

38. குப்த வம்சத்தின் கடைசி அரசர் விஷ்ணு குப்தர் 

39 , விஷ்ணு குப்தரின் ஆட்சி 11- குப்தர் 540 முதல் 550 வரை 

40. யாருடைய ஆட்சிக்காலத்தில் குப்தப் பேரரசின் விரிவாக்கம் உச்சத்தை எட்டியது ? இரண்டாம் சந்திரகுப்தர் 

41. மகா ராஜாதி ராஜா , பரம பட்டாரக , பரமேஸ்வர போன்ற பட்டங்களை கொன்டவர்கள் யார் ?

குப்தர்கள் 

42. அலகாபாத் கல்வெட்டுகளில் புருஷா ( அனைவருக்கும் மேலானவர் ) என்று கடவுளுடன் ஒப்பிடபடுபவர் யார் ? சமுத்திரகுப்தர் 

43. குமாரமாத்யா என்ற சொல் எத்தனை வைசாலி முத்திரைகளில் இடம்பெறுகிறது ? 6 

44. அமாத்யாக்களில் மிக முக்கியமான பதவி எது ? குமாரமாத்யா 

45. குமாரமாத்யா , சந்தி விக்கிரஹிகா , மகா தண்ட நாயகா பட்டங்களை பெற்றவர்?

ஹரிசேனர் 

46. மகா தண்ட நாயகாக துருவபூதியின் புதல்வர் யார் ? ஹரிசேனர்

47. அமைச்சர்களில் உயர் நிலையில் இருப்பவர் ? மஹா சந்திர விக்ரஹா 

48. மகா அஸ்வபதி என்பதின் பொருள் ? குப்தர் குதிரைப்படைத் தலைவர் 

49. குப்தர்களின் பேரரசு எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது ? தேசம் அல்லது புக்தி 

50. மாநிலங்களை நிர்வகித்த ஆளுநர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர் ? உபாரிகா 

Join our Whatsapp Group

Touch Here

51. மாவட்ட தலைமை நிர்வாக அதிகாரிக அதிகாரிகளையும் நியமித்தவர்கள் ? உபாரிகாக்கள் 

52. மூன்று உபாரிகளுக்கு  ராஜா என்ற பட்டம் இருந்ததாக கூறுவது எது ? தாமோதர் செப்பேடுகள்

53. குப்தர் ஆண்டாக ஈரான் கல்வெட்டு குறிப்பிடுவது எது ? கிபி 165

54. லோக பாலா என்பது யாரை குறிப்பிடுகிறது ? மாநில ஆளுநர் 

55 , குப்தப் பேரரசின் மாநிலங்கள் எந்த அதிகாரியின் கீழ் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன மற்றும் இவை எவ்வாறு அழைக்கப்படுகிறது ? விஷ்யபதி , விஷ்வா 

56. மாவட்ட மட்டத்திற்கு கீழ் உள்ள பல்வேறு விதமான நிர்வாக அலகுகள் ? விதி , பூமி , பீடா , பதகா 

57. அஷ்ட குல அதிகாரனா என்பதன்   பொருள் ?  8 உறுப்பினர் கொண்ட குழு 

58. மாவட்ட அளவிலான காவல்துறை அலுவலகம் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது ? தண்டபாஷிகா 

60. கத்யதபகிதா என்பதன் பொருள் ? அரச சமையல் அறை கண்காணிப்பாளர் 

61. துடகா எந்த அமைப்பை குறிக்கிறது ? ஒற்றர்கள் அமைப்பு 

62. அரசு கருவூலத்தில் முக்கிய வருவாய்கள் .மூலவளங்கள் பற்றி குறிப்பிடும் நூல் ? நீதி சாரா 

63. அரசு ஆவணங்களை பராமரித்த அதிகாரியின் பெயர் ? அக்ஷபதலதிக்கிருதா 

64 , இரணியவெஷ்தி என்பதன் பொருள் என்ன ? கட்டாய உழைப்பு

65.  தரிசு நிலத்தின் பெயர் ? கிலா

66. எந்த செப்பேடு அரசர் தான் என்று காட்டுகிறது ? பஹார்பூர் செப்பேடு 

67. மாவட்டத்தின் நிலப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாத்து அதிகாரி? உஷ்தபாலா

68. பயிரிடக்கூடிய நிலத்தின் பெயர் ? ஷேத்ரா 

69 , அப்ரஹதா என்பதன் பொருள் ? காடு அல்லது தரிசு நிலம்

 70. குடியிருக்க தகுந்த நிலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ? வாஸ்தி 

71. அறக்கட்டளை போன்ற அமைப்பின் மூலம் நில மானியம் பெறும் முறை ? நிவி தர்மா 

72. நிரந்தரமான அறக்கட்டளை -பெற்றவர் அதிலிருந்து வரும் வருவாயை பயன்படுத்திக் கொள்ளலாம் இது எவ்வகை நிலக்குத்தகை ? நிவிதர்ம அக்ஷயனா

73.வருவாயை பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் அதை பிறருக்கு தானம் செய்ய முடியாது , நிர்வாக உரிமையும் இல்லை இது எவ்வகை நிலக்குத்தகை ? அப்ரதா தர்மா  

74 , தரிசு நிலத்தை முதன்முதலாக சாகுபடி நிலமாக மாற்றுபவருக்குத் தரப்படும் உரிமை இந்த நிலத்திற்கு குத்தகை இருந்து விலக்கு அளிக்கப்பட்டது இது எவ்வகை நில குத்தகை ? பூமி சித்ராயனா 

75. குப்தர் காலத்தில் நில கொடைகள் எத்தனை வகைப்படுத்தப்பட்டன ? 3 

76. பிராமணருக்கு தரப்படும் நிரந்தரமான பரம்பரையாக வரக்கூடிய நிலமானியம் இதற்கு வரி கிடையாது இதன் பெயர் ? அக்ரஹார மானியம் 

77. கோயில் மராமத்து வழிபாடு ஆகிய பணிகளுக்காக பிராமணர்கள் வணிகர்கள் ஆகியோர்களுக்கு அளிக்கப்படும் மானியம்?

தேவகிரகார மானியம்

78. குப்தர்களுக்கு கீழிருந்த நிலப்பிரபுக்களுக்கு தரப்பட்ட மானியம் எவ்வாறு அழைக்கப்பட்டது ?

சமயசார்பற்ற மானியம் 

79. குப்தர் காலத்தில்குஜராத்தின் கிர்னார் மலையின் அடிவாரத்தில் இருந்த மிகப் புகழ்பெற்ற ஏரி ? சுதர்சனா ஏரி 

80. குப்தர் காலத்தில் பாசனத்திற்கு உதவிய பந்தியா . கரா என்ற இருவகை அணைக்கரை பற்றி குறிப்பிடும் நூல் எது ? நாரத ஸ்மிருதி 

81. விளைச்சலில் அரசன் பெறும் வரியை குறிப்பிடும் வரி எது ? ஆறில் ஒரு பங்கு பாகா வரி 

82. அரசருக்கு கிராமங்கள் அவ்வப்போது வழங்க வேண்டிய பழங்கள் விறகு பூக்கள் போன்றவை குறிப்பிடும் வரி ? போகாவரி

83 , கிராமத்தினர் மீது குறிப்பிட்ட கால இடைவெளியில் விதிக்கப்படும் வரி? கரா

84. ஆரம்பத்தில் விருப்பப்பட்டு வழங்கப்பட்ட வழியாக இருந்து பின்னர் கட்டாய வழியாக மாற்றப்பட்டது இது ஒரு அடுக்கு முறை வரி ? பலி வரி 

85. காவல் நிலையங்களின் பராமரிப்பிற்காக விதிக்கப்பட்ட காவல் வரியாக இருக்கலாம் அல்லது நீர் வழியாகவும் இருக்கலாம் எனினும் இது ஒரு கூடுதல் வரி அவ்வரி எது ? உதியங்கா வரி 

86. இது ஒரு கூடுதல் வரி .ஆனால் வசூலிக்கப்பட்டதற்காக அறிஞர்கள் மாறுபட்ட விளக்கங்களைத் தருகின்றனர் ? உபரிகரா 

87. எவ்வரி தங்க நாணயங்கள் மீது விதிக்கப்படும் வரி என நேரடி பொருள் தரும் இது நடைமுறையில் குறிப்பிட்ட தானியங்களில் விளைச்சலின் ஒரு பங்கினை அரசின் பங்காக பொருளாகவே அளிக்கிறது ? ஹிரண்யா 

88. காட்டுக்கும் ஆவிக்கும் செய்யவேண்டிய சடங்குகளுக்காக விதிக்கப்பட்ட பல்வேறு வரிகளின் பெயர் என்ன ? வாத பூதா 

89. கலப்பை வைத்திருக்கும் ஒவ்வொரு உழவரும் கட்டவேண்டிய கலப்பை வரியின் பெயர் என்ன ? ஹலிவகரா 

90. குப்தர் காலத்தில் வசூலிக்கப்பட்ட நுழைவு வரியின் பெயர் என்ன ? சுல்கா வரி 

91. நிலப் பதிவின்போது விதிக்கப்படு பெயர் என்ன ? கிளிப்தா , உபகிளிப்தா 

92. குப்தர் காலத்தில் இரும்பு படிகள் மற்றும் செம்பு படிகள் எங்கிருந்து பெருமளவில் தோண்டி எடுக்கப்பட்டன ? 

பீகார் ராஜஸ்தான்

93. குப்தர் கால ஆட்சியின் தென்பகுதியில் மிளகு ஏலம் ஆகியவற்றிற்கு புகழ் பெற்றிருந்தது என்பதை யாருடைய நூலின் மூலம் அறியலாம் ? காளிதாசர் 

94 , குப்தர்கால வணிகத்தில் பொதுவாக ஒரே இடத்தில் தங்கி இருப்பவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார் ? சிரேஷ்டி 

95. லாபத்திற்காக ஊர்ஊராக சென்று வணிகம் செய்பவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ? சார்த்த வாகா 

96. வணிகக் குழுக்கள் வங்கிகளின் பங்கி குறிப்பிடும் கல்வெட்டு ? மண்டசோர் கல்வெட்டு 

97. வங்கத்தின் தாமிரலிப்தி கிழக்கு கடற்கரையின் முக்கியமான வணிக மையம் என்று யார் குறிப்பிடுகிறார் ? சீனப்பயணி பாஹியான் 

98. குப்தர்கள் அதிக எண்ணிக்கையில் எவ்வகை நாணயங்களை வெளியிட்டனர் ? தங்க நாணயங்கள் 

99. குப்தர்கள் காலத்தில் எவ்வகை பாணியிலான கலைகள் வளர்ந்தன ?நகரம் , திராவிடம் 

100. குப்தர் கால குடைவரை கோவில்கள் காணப்படும் இடங்கள் ? அஜந்தா , எல்லோரா , பாக் உதயகிரி 

101. சிவப்பு மட்பாண்டங்கள் யாருடைய காலத்தைச் சேர்ந்தவை ? குப்தர் காலம் 

102 , அஷ்டத்தாயி என்ற நூல் யாரால் எழுதப்பட்டது ? பாணினி 

103. மகாபாஷ்ய என்ற நூலை எழுதியவர்? பதஞ்சலி 

104 , சந்திர வியாகரணம் என்ற இலக்கண நூலை எழுதியவர் ? சந்திரகோமியர் 

105. குப்தர்கால குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் யார் ? ஆரிய தேவர் , ஆரிய அசங்கர் 

106. குப்தர்கால அலுவலக மொழி ? சமஸ்கிருதம் 

107. சமண ராமாயணத்தை எழுதியவர் ? விமலா 

108. சாகுந்தலம் மாளவிகாக்னிமித்ரம் விக்ரமோர்வசியம் போன்ற புகழ்பெற்ற நாடகங்களை எழுதியவர் யார் ? காளிதாசர் 

109. மகாவிஹாரா என்று அழைக்கப்பட்டது எது : நாளந்தா 

110.5 ஆம் நூற்றாண்டு நூற்றாண்டிலிருந்து 1,200 வரை புகழ்பெற்ற கல்வி சாலையாக இருந்தது எது ? நாளந்தா பல்கலைக்கழகம் ( பாதுகாக்கப்படும் உலகின் தொன்மையான சின்னம் ) · 

111. பக்தியார் கில்ஜியின் படைகளால் நாளந்தா சூறையாடப்பட்டு அழிக்கப்பட்ட வருடம் எது ? 1200 

112. நாளந்தா பல்கலைக்கழகத்தின் அகழ்வாய்வு ஆரம்பிக்கப்பட்ட வருடம் ? 1915 

113. சுழியம் பதின்ம இலக்கு முறை யாருடைய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது ?

குப்தர்கள் காலம் 

114 , சூரிய சித்தாந்தம் என்ற நூலை எழுதியவர் யார் ? ஆரியபட்டர் 

115. கணிதம் , கோணவியல் , அல்ஜீப்ரா ஆகியவற்றை பேசும் நூல் எது ? ஆரியபட்டியம் 

116. பிருஹத் சம்ஹிதா என்ற நூலை எழுதியவர் யார் ? வராகமிகிரர் 

117 , பிரம்மகுப்தரின் நூல்கள் ? பிரம்மஸ்புத சித்தாந்தா , கண்டகாத்யகா 

118 , மருந்துகள் , மருந்துகள் தயாரிக்கும் முறை பற்றி குறிப்பிடும் குப்தர்கால மருத்துவ நூல் எது ? நவனிதகம் 

119 , குப்தர் காலத்தில் எழுதப்பட்ட விலங்குகளுக்கான மருத்துவ நூல் எது மற்றும் அதன் ஆசிரியர் யார் ? ஹஸ்த்யாயுர் வேதா - பாலகாப்யா 

120 , குப்த வம்சத்தின் கடைசி அரசர் யார் ? விஷ்ணு குப்தர் 

121 , நிலப்பிரபுத்துவ துணைநிலை ஆட்சியாளர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ? சமந்தா





















Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY